Wednesday, November 21, 2012



கத கேளு கத கேளு
கதையான கத கேளுன்னு
கல காட்டி கலர் காட்டி
காட்டாம நழுவுறான்
கத சொல்லி
காலத்துக்கும்
உப்பு கரிக்கிற சோத்த

எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் னா
முடியுது எல்லாம்.




சரி எனக்கு தெரியும்
இந்த திருவிழாவை பல தரம்
கடந்திருக்கிறேன்
சாட்டையடித்து குருதி காட்டி
கையேந்துவது
புதுசா
வேடிக்கை
காட்ட வருகிறவன் கதை
வேடிக்கையாய் அல்லாமல்
இருக்கலாமோ?
இருப்பினும்
யுகமாய் தொடர்வதால்
மூச்சு விட்டுக் கொள்ள
கொஞ்சம் டைம்
ப்ளீஸ்.

Monday, September 24, 2012



காலம்
தன் சந்தை வாயை பிதுக்கி
எல்லோருக்கும் பெயர் வைக்க வரும்

புரிதலின்மையின் கொடுங்கானகத்துள் நழுவி
யாரும் காணாத மரங்களில் எழுதுகிறான்
ஒரு கோழை.

ஆ, இருந்தாலும்
எமக்கு தொழில் கவிதை.
 

Tuesday, September 18, 2012




 சிகரெட்டு பீடி குடிச்சா
எளுத்து
பாட்டில தொறந்தாலும்
அதே தான்
கெட்ட வார்த்தைக்கு மியுட்டு   
நல்ல கருத்துக்கு டேக்ஸ்ப்ரீ 
லண்டன் பேலசு
ராஜதந்திரிகளோடே
பரிசாகரனா இருந்து
நாங்க திருடறதுக்கு வெளக்கு புடி
நாங்க கொளுத்தறதுக்கு மோளம் அடி 

Thursday, September 6, 2012

நிலைக் கண்ணாடியில்
ஒரு ஆட்டை சிருஷ்டித்து
ஜென்டி மேனின் புன்னகை
சொற்கள், கட்டம் கட்டமாய்
சொற்கள், சொற்கள் உச்சரிப்பு சுத்தத்துடன்
ஓங்காரம்
வரிக்குதிரை போல சீருடை
ஒரு குடம் பெருமிதம்
ஒரு தம்பளரில் அசடு
பத்தாமே போனாக்கா

ஓநாய் கண்ணீர்

வேட்டையாட இதெல்லாம் வேண்டும்
விரும்புவதற்கு என்ன வேண்டும்
எப்ப பாத்தாலும்
என்னப் பத்தி தெரியுமானு
சொறிஞ்சுகிட்டே இருக்கான்
நோபிள்

மாடு மாதிரி
நிக்கற புலியா

சரிடா
நான் உன் முதுக வருட
கிளம்பி வந்தாச்சு.

முனகினாலும் சரி
முழுங்கினாலும் சரி

Thursday, August 9, 2012

சொல்லுவேனே
அது அல்ல
நினைத்துக் கொள்ளுவேனே
அது அல்ல
நீ நினைக்கிறாய் என்று
காட்டிக் கொள்ளுவேனே

அதுவும் அல்ல
நீ நினைக்க வேண்டும் என்பதற்காக
நிறுத்திக் கொள்கிறேனே
அது அல்லவே அல்ல
காரல் மார்க்சை முழங்கும் போதும்
காதலை சொல்லி விதும்பும் போதும்
நிலா ரசிப்பதாய் பீத்தும் போதும்
நிலைக் கண்ணாடியில் நிரவும் போதும்
எங்கேயும் இல்லாம இருந்து
எல்லாமா பொங்கி பெருகற இந்த சுழலில்
நான்னு ஒண்ணு இருக்கா சொல்லு
ஞானத்தங்கம்?

Monday, August 6, 2012

இருப்பா தம்பி
கொஞ்சம் இரு
உனக்கு எல்லாம்
மனப்பாடம்
என்று தெரியும்
பாசிடிவ் திங்கிங்
போகும் பாதையில்
பார்க்க என்ன உண்டு 
யார் நெல் விதைத்த பூமியிலும்
ஓடுபாதை அமைக்கிற
உன் சாமர்த்தியமும்
சரி
கள் வேணா
கவித வேணா
கடவுளும் காண்டம் போல
பாலிதீன் கவர்ல
லவ்வ  லவுட்டின ஸ்பீட்லையே
சம்பாதிச்ச எதிரி
எங்கெங்கும்
இருந்தாலும் தேசபக்தி முத்த
ப்ப 
பாத்து செய்யி

மனுஷ உயிருங்கப்பா.

Friday, August 3, 2012

முதலில் சொல்லி விடுகிறேன்
எந்த வரியும் கோர்வையா
கூடாது
கேள்விப்படிருக்காத வர்ணத்தில்
மலர் கொய்து எடுத்து அடுக்கு
இரட்சணிய யாத்ரிகம் குணங்குடி பாய்
என்று மேய்ந்து பின்னர்
குடும்ப வாராந்தரி க்ளிவேஜ்
எழும்பி நிற்கும் மதிய காமமும் அக்கா என்று
அழைக்கப் படுபவளின் வில்லுடலும்
அடக் கருமமே என பிசுபிசுக்கும்
சுய கிளைமாக்சும் கொஞ்சம் முற்போக்கு
தவ்ளோ நற்போக்கு
மலை கடல் நிலவு மயிரு மண்ணாங்கட்டி
பொயடிக் பிளேவர் மிக்ஸ் பண்ணி
பில்ட்அப் கட் அவுட் தெரியாம
பைனல் டச்சு
வெச்சுட்டா
வந்த்துர்ச்சே

வி

Thursday, July 26, 2012

உறவுக்கு கை கொடுத்து
உரிமையை எல்லாம் விட்டுக் கொடுத்து
எப்பவும் போடோக்கு சிரித்து
எல்லாருக்கும் அழைப்பு விடுத்து
நட்பும் சுற்றமும் சூழ
வாழ்வாங்கு வாழ்வதற்கு நடுவே
எப்பவும் வெளயாடறோம், இல்ல
சும்மா

இருந்தாலும் இருந்துக்கிட்டிருக்கு
கத்தி.

Tuesday, July 17, 2012



முன்ன எல்லாம்
சதுரவட்ட கிராப்பு ஜிப்பா
ஹிப்பித் தல கலஞ்ச தல
ஸ்பன்னு சோலாப்பூர்
ஹவாய்
சுஜாதா பாலசந்தர்
கம்யுனிசம்
ஏமாந்தா ஒரு ஓரமா
ஜீன் பால் சாத்தரும்
கூட

கொஞ்ச நாள் முன்ன கூட
மனிதாபிமானத்த வச்சுகிட்டிருந்தமே சார்

இப்ப
நேர்மை.

Saturday, July 7, 2012




நீ எவ்வளவு அழகு தெரியுமா என
காக்கையை
பாட்டு பாட சொல்லிக் கேட்ட
நரி வயிற்றில் ஊறிய
பசி
குளவிக்குள் குருவிக்குள்
குடல் புரளும் சகல ஜீவனுக்குள்
பற்றிப் பரவி
வளர்ந்து நின்று
வனமேகிய வரிப்புலியாய்
உலவுவது பார்ப்பாய் எனில்
என் பசியை எப்படி வெறுப்பாய்



கூனனின் முதுகு போல
ஒட்டிக் கொண்டிருக்கும் வாழ்வு விழைவது
கொஞ்சம் அல்பத்தனங்களை மட்டுமே

மலையை புரட்டி தள்ளிக் கொண்டிருந்த
போதும்

கூட்டில் இருந்து விழும் தேன் சொட்டு போல்

பூவின் பேரை யோசிக்கு முன் எரிகல் மறைவது போல்

கண்களை பிளந்து உன்னை விழுங்கத் துடிக்கும்
இக்கணம்

நாளை காற்றில் ஆவியாகிப் போகும்
மது.


 

Wednesday, July 4, 2012






இந்த நகரம்
யார் இதன் உடமையாளன்
கண்காணிப்பாளன்
இந்த விசை எங்கிருந்து
கிளம்பி சென்று
நிலக்கடலை விற்று கோடீஸ்வரன்
நடிகனாகி முதல்வர்
ஆள் பிடித்து கொடுத்து ஆள்
ஒரு எல்லுக்கு ஒரு கொலை
பொறுக்கி இல்லையா போலீஸ்
ஆன்மீக பேரருளுடன் சைய்டில்
பெண்வணிகம்
பொந்துக்கு வெளியே இருக்கும்
பனிக்காட்டில் பூந்து
நான் யாராகவும் திரும்பலாம்,
நீ யாராக நிற்கிறாய் சொல்லி விடு
    



 

Friday, June 29, 2012




வர்ணம் பூசவில்லை
இலக்கம் எழுதவில்லை
முக்கியமாய் பெயர் பலகை
மீசை முறுக்கவில்லை

யாரும் வழி சொல்லி விட முடியாத
இடத்தில்
இவ்வீட்டை சாத்திக் கொண்டு
திறக்க சாத்தியமுள்ள கதவை
திரும்பிப் பாராமல்
நீவந்து கதவை திறப்பாய்
என்று காத்திருக்கிறேன்

ஏன் என்றால்
நுழைய வேண்டியிருப்பது
உனக்குள்ளே
நான்.



நீங்கள்
விளிம்பில் தானே நிற்கிறீர்கள்

நீங்கள் என்றால் அது நானில்லை
உங்களுக்குள் வெள்ளம் முட்டும்போது
நான் கரையுடைவதில்லை
எனக்கு கிடைக்கும் பருக்கைகளை
நீங்கள் கணக்கிடுவதுண்டா
என்று திடுக்கிடுவதும்
வழக்கம்

என்றாலும்
உங்களுக்கு உதவி செய்ய
அவா.

அல்லது
ஒழித்து கட்ட
வெறி

ஏனென்றால்
விளிம்பில் தானே நிற்கிறீர்கள்
பத்தாததுக்கு
விறைத்துக் கொண்டும் நிற்கிறீர்கள்

Thursday, June 28, 2012




நீயும் நானும் துண்டு வானங்களை பார்த்து
கம்பிகளை கடித்து கலகம் பண்ணி வைக்கிறோம்

தாண்டிக் குதிக்க முடியாத சட்டகங்கள் பற்றி
நமக்கு தெரியாதா என்ன

என்றாலும்

சொல்லில் சிக்கிய பூ ஜடமாயிருந்தும்
சொல்ல தூண்டும் ஒரு சின்ன புள்ளியை
நிறைத்திருக்கிறது
காயம் பட்ட புழுவின் வலி

ஏன் நான் உன் மார்பில் புதையக் கூடாது?



தும்பியின் வாலில்
நூலை கட்டி
காத்தாடியாக்கி விளையாடி இருப்போம்
அப்ப

கடவுளுக்கு எதிராக விளையாடாதே
என்றிருப்பார்கள் நம் அம்மாக்கள்

இல்லை

நாம்
கடவுளுக்கு எதிராக விளையாடவில்லை
கடவுளைப் போல விளையாடுகிறோம்.   



என்ன
பார்க்கிறாய்

நான் தான்
நானே தான்

மாறியிருக்கிறேன்
இல்லை?

என்ன செய்வது
என்னை கைவிட்டுவிட்டு
உன்னில் தொற்றிக் கொண்டிருந்தேன்
விதைக்காமல் விளைவிக்காமல் அறுக்காமல்
நின்றிருந்ததில் வந்த பசியின்
களைப்பு

நஷ்டப்பட்டாலும் நஷ்டமில்லை
நன்றாய் இரு, போ !



என்ன
புகார்

வாழ்க்கை
சில சந்தர்ப்பங்கள்
கொடுத்து பார்க்குமாம்
கேட்டுக் கொள்

காலம் ஒரு முகம் புனைந்து
கடுகடுக்கையில்
நீ மனிதர்கள் பற்றி
அறிந்து கொள்கிறாய்
ஹா ஹா ஹா

நம்பிக்கைகள் என்றால்
அடி அதன் மீது தான் விழும்
சரியா
அப்புறம் வலியை பற்றி பிதற்றாதே

வளர்கிறாய்
என்று விடுவோம்.
 

Saturday, June 23, 2012







தாழிடப்பட்ட
அறை

அடைந்து கொண்ட
கண்கள்

செவிகளின் உள்ளே
கோடி மைல்களுக்கு அப்பால்
அலைகள்
கடல் அலைகள், ஓங்கிஎழுந்து
பதறி பதறி
தன் நெஞ்சை கொண்டு பாறையில்
மோதி பிளக்கும்
அலைகள்

யாராவது வரக் கூடும்
என்னவென்று கேட்கக் கூடும்

பாய் விரித்து தலையணை வைத்து
படு மரியாதையாய் என்கிறேன்......

 



உணர்வு..!


ஒரு கோப்பையில் கரைந்து போகுமென்றால்
நினைவுகள் இரக்கமுள்ளவை
லஹரி நெம்புமொருஉறக்கத்தில் மறந்து போகுமென்றால்
அவை அடக்கமுள்ளவை
எரியும் குடல்களின் இழுவையில்
செரித்து கழிவாகுமென்றால்
சுலபமானவை

ஹே......

அப்படியா

பசிக்கு உணவு
கால்களுக்கு பக்கத்தில்
இருக்கை
எப்போதும்
தலை வருடி தந்து
நான் என்னையே வளர்த்துக் கொண்டது
அல்லவா?

உன்னை துரத்தினால்
நான் காணாமற் போவேன்......
 

Friday, June 22, 2012

இன்று வானிலை எப்படி

காலையில் கிடைத்தது பரோட்டா தான்
வயிறு சரியில்லை

வீடு கிடைக்குமா
ராசியில் கோளாறு







கமலா சௌக்கியமா
விமலா சௌக்கியமா
இவங்க ரெண்டு பேர தெரியலேன்னா
அமலா சௌக்கியமா

ட்வல் பி வராது
இருவத்து மூணு சீ போவாது
மஞ்சு வழுக்கி விழுந்தது
தீம் பார்க்குல தானே

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ஒண்ணும் ஒண்ணும்
பதினொண்ணு
பதிநோண்ணும் பதிநோண்ணும்
ஆயிரத்தி நூத்தி பதினொண்ணா

போயிட்டு வரேன்
வர்ற அப்பவாவது சொல்ல முடியுமா
பாக்கணும்  

 



எல்லாரும்
மூடிகிட்டு தான் போறாங்க
அமைதின்னு சொல்லிட முடியுமா
அத
அப்ப அப்ப அங்க அங்க
கூட்டம் கூடிடற மாதிரி தான் இருக்கு
புரட்சி ன்னு தான்
புல்லரிச்சுக்க முடியுமா

இருந்தாலும்
எழும் சிறு பொறி மிகப் பெருந் தீயாய் ன்னு சொல்றது
அறிவியல் மாதிரி
படலே?


ஒரு
பயணம் தானே எல்லாம்

ஒற்றையாவோ
ஊரையே கூட்டிக்கொண்டோ 

புத்தன்
என்ன கொண்டு போயிருப்பான்
என்று தெரியாவிடினும்
தங்கத்தை அள்ளி வரப் போனவர்கள்
என்ன வைத்துக் கொண்டு
இருந்திருப்பார்கள் என்பது நமக்கு தெரியும்.

கருவிகளின் முகம் மாறியிருக்கலாம்
கணக்கில் இருப்பது தானே
எல்லாம்?


பசி
புரியாது

சிரிச்சுட்டு
நகர்ந்து விடலாம்

ஆத்மா நஷ்டபடுவதை
சொல்ல முயன்றான்
ரித் விக்

வாழ ஆசையை இருக்கிறது
என வீறிட்ட குரல்
யாருக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறது
இப்போதும்?

Thursday, June 21, 2012




எனது சிறகுகள்
ஒய்வு காணும் வரை
உன் வானை எங்கனம்
குடை மடக்க முடியும்
எனினும் 
ஒரு மிடறு தீயை
விழுங்கி முடிப்பதற்குள்
திரும்பி வா...



உன்
விழிகளுக்குள் எட்டி பார்த்து
வீழ்ந்த பின் அறிந்தேன்
பறந்து கொண்டிருக்கிறேன்
என்று -
உன்னுள்
விரியுமொரு
வானை அறியாமல்
எங்கே விடை கொடுக்கிறாய்?

Sunday, June 17, 2012




திரைக்கதை


புழங்கு மொழியில்
சிறிய பொறி தான்
அது

பற்றியெரியும் வனமென
துவங்கும்

தானே தன்னை கைவிட்ட முட்டுசந்தில்
பிரும்மாண்டமான சாலைகளை பரப்பி பார்த்து
உடல் குறுக்கி நடக்கக்கூடும்
தேய்மானம் போன
ஒற்றையடிப்பாதையில்

யோசித்து பாரேன்
இப்போது துடித்து தெறித்து
யாருமறியா இருளில் பறிக்கிற
சினை முட்டையை

கருவில் இருந்துகொண்டு
கதையை
கதையில் இருந்து கொண்டு
முகங்களை
முகங்களில் இருந்துகொண்டு
வாழ்வை அறி

சொல்.



தந்தையர் தினம் என்று ஒரு தினமாம்
கேட்டுக் கொள்
அதாகப்பட்டது உனக்கென்று
ஒரு நாள்
நீ விதைத்து முளைக்க வைத்த ஓன்று  
பசியும் தாகமுமாய்
உனது
குருதியை குடித்து
தசையை தின்று முடிக்கிறது அல்லவா,
தீர்க்க முடியாத அந்த
குற்றவுணர்ச்சி
தானும் விதைக்க வேண்டி இருக்கிறபடியால்
அண்ணாந்து வானில் நிலை கொள்ள வேண்டிய
பீதி
அர்த்தமறியா வாழ்வின் அநீதி முன்
மண்டியிடுகிற
மலடு
ம்ம்ம் என்ன சொல்லி என்ன
இனிமேல் தினங்கள் இல்லாமல் நம்மை  நாம்
ஏமாற்றி கொள்ள முடியாது.

Wednesday, June 13, 2012




புலன்களை
திற

பொசிஷன்
எடு

டைலாக்
மனப்பாடமா

ஒவ்வொரு பிரேமும் பைசாவாவற
இந்த பிரம்மாண்டத்தில்
சகநடிகர்களின் பாத்திரங்களை
முறி

மேடைகள் முக்கியம்
கைதட்டல்கள் முக்கியம்
இருக்கைகளை பிடுங்க
இருள் சந்துகளுக்குள்
ஆத்மாவை
கூட்டிக்கொடு

விரட்டி விரட்டி விரட்டி
எங்கும் மிச்சம் வைத்து விடாமல்
துரத்தி அடி
உன்னை

பீடத்தில் இருந்து
பிணமாய் சிரித்திருந்து
இன்னொரு முறை
சாவு

இப்ப
ஒரு வழியா
ஸ்க்ரீன்ல
தி எண்ட் ...!



நாடு சுற்றி நகர் சுற்றி
நகரின் சந்து பொந்துகள்
எல்லாம் சுற்றி
மீன் விழி மான் நடை
தேன் மொழி
சகலம் பயின்று சலித்து
நட்டுகுத்தின கண்களுக்கு
வெற்று வான்

தூக்கம் வருகிறதா
தூங்கிக் கொள்கிறாயா
யாரோ யாரையோ
கேட்கிறார்கள்

என்னை தான் என்றால்
எப்படி கண்டறியலாம்
லட்சம் அடிதடியில்
இவ்வாஞ்சையின்
விளியை

முதலில் இருந்து துவங்கு
என்கிறான் .
  

Tuesday, June 12, 2012

விசேஷம் எதுவும் இல்லை




ஒரு காவியத்திலும்
நமக்கு கிடையாது
இடம்

சந்தடி சாக்கில்
யாருக்காவது சொன்னால்
அவர்களுக்கு கொட்டாவி வரும்

ஏய்ய்
உலகத்துக்கு ஆயிரம் கவலை தெரியுமா

இருந்தாலும் ஒரு விஷயம்,
இந்த இரவில் இந்த தனிமையில்
பிராணன் கனக்கிற
இந்த தீ நொடியில்
நீயும் இந்த விண்மீனை பார்க்கிறாய் என்றால்

சொல்லு இவ்வாழ்வை விட
வேறென்ன விசேஷம்?



தீராத விளையாட்டு பிள்ளைகள்
நாம்

தீர்வதில்லை அவா
திசைகள் நான்கும்
பற்றி எரிந்தால்
கூட

தீமையை தித்திப்பாய்
சப்பு கொட்டுகிறது
வாழ்வின்
நாவு

குழந்தைகளும்
பெண்களும்
சாகாத தினசரியில்
கொட்டாவி முட்டுகிறது

குத்துப்பட்ட நண்பனின்
அவல முகமோ
கலைக்கப்படுகிற மனைவியின் கண்ணீரோ
வேணும்

அந்தமற்ற பெரு வெளியில்
கடைவிரித்த நறுவிருந்தாய்
இன சாவு மத சாவு
போதாது என்று இன்னும் எவ்வளவு
போர்ப்பரணி

வெளிப்படாத மிருகம்
விழுங்கும் குருதியெல்லாம்
விளையாட்டுப் பிள்ளைகளின்
ஊட்டமென்றான பின்

லூசு
காத்துல இருந்து
எப்படிடா
மலர பறிப்பே

அதுவும் தேவ மலர ?

Sunday, June 10, 2012





சிரஞ்சீவி  சார்.....


எப்படி இருக்கிறாய் 
என்றா  கேட்டாய் 

இப்போது இருக்கிறேன்  என்பது 
எப்படி இருக்கிறேன் என்பதை  விடவும்  முக்கியம் 

கல்வாரி  மலையெங்கும் 
கருகி  இருள் படர்ந்து 
உறுதியின்  கடைசி விண்மீன் 
அணையும்போது
என், தேவனே  ஏன் எம்மை கைவிட்டீர்  என
காற்றிலொரு முணுமுணுப்பு கரைந்திற்று
அல்லவா 
அப்போது  கூட  இருந்திருப்பேன் என தோன்றுகிறது.

ஆயிரம்  வருஷங்களுக்கு அப்புறமும்
இருப்பேன் 

எப்போதும் இருக்கிறவனிடம் 
எப்படி இருக்கிறாய் என்று மட்டும் 
கேட்டு விடக்கூடாது.  

Saturday, June 9, 2012




நசித்து போனதாய்
அடங்கிய எந்தை
கண்ணுக்குள் வைத்து
காக்க ஆகாமல்
பிதுங்கிய அம்மா

செத்தையும் சொத்தையுமாய்
பத்தாயிரம் கூட்டம்

எங்கோ ஹிமாலய அடிவாரத்தில்
பெயரறியா பூவாயிருந்து
குளிரில் நீராடி
ஏதோ சாலை விபச்சாரியின்
யோனியாயிருந்து
வெள்ளைப்படுகிறேன்

ஏய், வெண்ண
உனக்கு தெரியுமா

இனி என்றோ பிறக்க போகிற
குழந்தையின் வீரிடலில் இருக்கும்
என் பசி

Thursday, June 7, 2012






comes with the wind



எத்தனை மகத்தானவள்
நீ
என்பதை உனக்கே
சொல்ல வேணும்

சிருஷ்டிக்க போகிற
காவியம் உன்னை பற்றியது
என்பதையும்

அலைகள் வந்து மோத
துல்லிய நிலவொளியில்
ஜென்னியை பற்றி

சலவை கல்லில் மினுங்கும்
ஷாஜகானின்
கண்ணீர் துளிகள்
பற்றி

அன்னா தஸ்தவேஸ்கியின் 
காதல் பற்றி

சாலமன் மீன்களை பற்றி

இன்னும்! இன்னும்!

தொட்டியில் விட்ட
ரெட்டை மீன்களாட்டம்
மனசு ரெண்டும்
மீட் ஆகி விட்டால்
ஓரிரு முத்தமோ
கொஞ்சம் கண்ணீரோ
அதற்கு பின்னர்
வேறு வழியின்றி
கேட்க வேண்டியிருக்கிறது
நரைத்த ஜீன்ஸில் ,
மொட்டையடித்துக்கொண்டு,
சிகப்பாய்

யார் அவன்?

நற நற நற நற நற  

Tuesday, June 5, 2012




கண்ணுள்
நீ எழுதி கொண்ட கவிதையை
காற்றை வருடி
தெளிந்த பிறகு
மண்ணில் இறக்கி வைத்தால்
மற்றவர்கள் கேட்பர் என்று
விண்ணில் செலுத்தி விட்டேன்
என் கவிதையை
ஏந்தி சென்ற காற்று
எட்டி விட்டதா
உன்னை

அட,போடா
டுபுக்குங்கறியா

சரி இந்த கவிதையை
வேற யாருக்காவது குடுத்து பாக்கறேன்.



வெடி வைத்து பிளந்தால்
பாறைக்கு வலியில்லை
யாருக்கு தெரியும்

ஒளி கொண்டு புகுந்தால்
இருளுக்கு வலியில்லை
யாருக்கு தெரியும்

பிசையப்படும்போது
மண்ணுக்கு வலியில்லை
யாருக்கு தெரியும்

விருட்சத்தை வைத்திருந்தாலும்
விதைக்கு வலியில்லை என்று பம்மாத்திவிட்டு
வலிகளை பார்த்தால் வாழ்க்கையே இல்லை
ஒர்ரே போடு. 

Monday, June 4, 2012




நீ எப்படி சகிக்கிறாய் என்பதை
சொல்லி கொடு

வசந்தங்களும்
இலையுதிர் காலங்களும் கடக்க
நூற்றாண்டுகள் தாண்டி நீ
எப்படி இப்படி காத்து கொண்டிருக்கிறாய்

மனுஷ்ய இரைச்சல்களும் , தொழுகைகளும்,
கண்மூடிதனங்களும் முடிந்து
நீ நிசப்தயாய் ஆகும்போது
ஜீவவெறியுடன் முணுமுணுக்கிற கானகத்தை
அளவற்ற காதலுடன் நுரைத்து ததும்பி ஓடும் பம்பை ஆற்றின் சலசலப்பை
புணரும் பட்சிகளின் சிறகோசைகளை
எப்படி சகிக்கிறாய்

மேனியை கருங்கல்லாக்கி உறைந்த போதும்
பவுர்ணமிக்கால நிலவொளி ஒரு மயிலிறகாகி வருடும்போது
சிலிர்த்துக்கொள்வது இல்லையா, குறைந்தபட்ஷம்
மனசு

இளைப்பாறுவதற்கு ஒரு நிழல் சோலை வளர்த்து
நெஞ்சுக்குள் வைத்து காப்பாற்றி
ஓய்வெடுக்க வராத ஒரு ஆளின் நிழலுக்கு காத்திருக்கும் போது
உன் யவ்வனத்தை அரித்துக்கொண்டிருக்கிறது
காலம்

தேங்காய் உருட்டி
சாஷ்டாங்கமாய் விழுந்து எழுந்து
இயலாமையை தலையில் சுமந்து
திரும்பி செல்கிறது மானிடம்

மனமெரிய ஒரு பாமரன் கேட்கிறேன்
எப்படி

எப்படி சகிப்பது எல்லாவற்றையும் என்று
சொல்லிக்கொடு   

muthumai...



நான் ஒரு தீர்கதரிசி

வேண்டும் என்று போயிருந்தால்
இந்நேரம் நொறுங்கியிருப்பேன்

நான் ஒரு புத்திசாலி

இப்படித்தான் என்று தெரியாதிருந்தால்
இந்நேரம் என்னை
முடித்துக்கொண்டிருப்பேன்

நான் ஒரு அகங்காரி

மண்டியிட்டு கெஞ்சியிருந்தாலும்
கொடுக்கப்பட முடியாதவைகளை
பெற்றிருக்க முடியாது

இறுதியாக
நான் ஒரு தீவு

என்னில் ஒதுங்குபவர்களும்
தனியாக்கப்படுவார்கள்.

Saturday, June 2, 2012





எழுதப்பட்டிருந்ததா
இது முன்னரே
இக்கணம் கனவில்
உணரப்பட்டிருந்ததா

எந்த புள்ளியில்
துவங்கும் ஒரு
தினம்
எந்த தினத்தில்
நீ உன்னை
அறிந்தாய்

களிப்பில் மிதந்த போது
புதிரின் முதல் சொட்டாய்
காதலை சப்பு கொட்டிய போது
கண்ணீரில் பிசுபிசுத்த
யாரோ ஒருவனின்
கரங்களை பற்றும் போது
கடவுளில் வியக்கும் போது
திடுக்கிடுகிறோம்

யார் நமக்கு முன்
எல்லாம் தெரிந்து வந்து
நமக்குள்
இருந்து கொள்வது

ஏழு கடல்
ஏற முடியாத
எழுபது மலைகள் தாண்டி
எங்கள் உயிர்க்கிளி
கிறக்கத்தில்
இருப்பது எங்கே

உண்மை
வெறும் வார்த்தை இல்லை
இந்த கணத்தை இந்த கனவை
சிருஷ்டித்து
இதை நீ தான் எழுதி கொண்டு இருக்கிறாய்

எத்தனை அநீதி,
எம் வாழ்வை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.


Tuesday, May 29, 2012

யார்..?





எங்கோ எங்கோ எங்கேயோ
தூரத்தில் தூரத்தில் வெகு தூரத்தில்
அழைத்துக் கொண்டிருக்கிறது
அந்த குரல்

நேற்று கழிவறையில் இருந்த போது
கேட்டேன்
வருஷங்களுக்கு முன்னொரு நாள்
கருவறையில் மிதக்கும்போது
கேட்டேன்
உள்ளாடைகளை கூட  சரியாய் அவிழ்க்காமல்
ஒரு வேசியின் யோனியில்
அசைகையிலும்
தான் கேட்டேன்

பசிக்கும் குடல் வெறியின் வழியே
பரிதவித்து பார்த்த பருவத்தின் வழியே
தூங்காமல் செய்த காதலின் வழியே
துக்கித்து அடைந்த பொருட்களின் வழியே
தேடி தேடி வெளியேறினேன்
தேடாத குகைகளில்
கேட்கிறது குரல்

எங்கோ எங்கோ எங்கேயோ
தூரத்தில் தூரத்தில் வெகு தூரத்தில்
அழைத்துக் கொண்டிருக்கிறது
அந்த குரல்





  

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு!




இல்லை,
இல்லயடி என் கண்ணே
நீ மனப்பாடம் பண்ணுவது போல்
அவன் கண்டுபிடித்தது
அமெரிக்காவையல்ல.

பூனைகுட்டிகளோடு
பூனைகுட்டியாகிற
உன்னிடம்
துப்பாக்கிகள் பற்றி
சாட்டைகள் பற்றி
வலி மற்றும் குருதியை பற்றி
சொல்ல அறியேன்

உனக்கு மிகவும் விருப்பமான
அந்த நோஞ்சான் பூனையின் வர்ணம்
எல்லா கடை கோடிகளுக்கும் துரத்தப்பட்டு
காரி உமிழப்பட்ட முகங்களுடன்
இருளில் முடக்கப்பட்ட அரசியல்
புரிந்து கொள்ள முடிவது தானா?

அவன்  கண்டுபிடித்தது
வேறு கண்ணம்மா
வெளுத்த பூனைக்கு
தனியாய் சோறு வைக்காத வரை
உனக்கு எதுவும் தெரிய வேண்டாம்

படித்து கொள்-

ஆம், அந்த தேவடியாள் மகன் தான்
அமெரிக்காவை கண்டு பிடித்தான்.



ஏகாந்தம்.

இரு விழிகளென விரிந்த
இவ்வுலகின் எதுவொன்றும்
இதுவென்று தெரியாத
ஏகாந்தம்.

குளிர்முலை கிடைக்காத சிசு
பசி கொண்டழுத பின்னர்
இருள்படியிறங்கியதில்
இதமாக உறங்கும்
ஏகாந்தம்.

நிழலென ஒரு விரல்முனை
நீறுதற்கொரு நீர்த்துளி
வாயுவை புரவி பண்ணி சாடாமல்
காத்திருந்து காத்திருந்து
கரைந்த பின்
ஏகாந்தம்.

பூக்குமொரு மலரின்
புள்ளியை பற்றியேறி
காய்க்கிற புதிரை காதில் பேசும்
நீ என்ன
என் ஏகாந்தத்தின்
எதிரியாகிறாய்,
என் கண்ணே, கண்ணம்மா
நீயேன் எனது கண்ணீராகிறாய்?

Wednesday, May 23, 2012



' தெய்வத்திண்டே விகிர்திகள் ' என்று ஒரு மலையாள படம். லெனின் ராஜேந்திரன் இயக்கியது. ரகுவரன் என்கிற கலைஞன் நடிக்க பின்னணியில்  மதுசூதனன் நாயரின் கவிதை. அதன் அர்த்தத்தை மற்றவருக்கு சொல்ல முடியுமா என்ற ஆற்றாமையில் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.  மற்றபடி இதில் பாண்டியத்துவமும் இல்லை. செய்த காரியத்தை நிறைவாய் செய்ய முடியவும் இல்லை. மலையாளம் தெரிந்தவர்கள் மன்னிக்கவும்.



இருளின் மஹா நித்திரையில்
இருந்து எழுப்பி நீ
நிறமுள்ள ஜீவித பீலி தந்தாய்
எனது சிறகிற்கோர் ஆகாயம்
நீ தந்தாய்
நின் ஆத்ம சிகரத்தில் ஒரு
கூடு தந்தாய்

ஒரு குட்டி பூவிலும்
கடல் காற்றிலும்
நீ நீயாய் மணப்பது
எங்கு வேறு
உயிர் உருகுகையில்
ஒரு துளி தவறாமல்
நீயாகவே நகரும் நதி
எங்கு வேறு
கனவின் இதழாய்
உன்னை பரப்பி
நீ விரிய வைத்த ஒரு ஆகாயம்
எங்கு வேறு

ஒரு குட்டி ராப்பறவை
அழுகிற போதும்
முன்பிருந்த அருவியொன்றின்
தாலாட்டு தளரும் போதும்
கனிவினால் ஒரு கல்
கனி மதுரம் ஆகும் போதும்
உன் இதயத்தில் நான் எனது இதயத்தை
பொருத்தி இருக்கிறேன்
உன்னில் அபயம் தேடி போகிறேன்

முடியாது விலக

முடியாது விலக
உன் இதயத்தில் இருந்து என்னை
எந்த சொர்க்கம் அழைத்தாலும்
உருகி நின் ஆத்மாவின் ஆழங்களில்
வீழ்ந்து ஒளிரும் போது தான் சொர்க்கம்
உன்னில் கரைந்து அழிவது என்
நித்ய சத்தியம்






Tuesday, May 15, 2012

kavthai....kavithai?

சரி சரி
மலைகள்  நிமிராமல் 
பூக்கள்  மலராமல் 
அலைகள் குமுறாமல் 
நிலவு  பொழியாமல் 
எப்படி இது?

ஒரு புன்முறுவலை  தட்டி  விடும்
நகைச்சுவை  திருப்பம் 
இல்லனா அறிவியல் துணுக்கு 
மினிமம் 
விடுகதை  கூட 
இல்லாம?

பெண்  சிரிக்கவில்லை 
இதயம் பிளக்கவில்லை 
எப்டிம்மா?

என்னை 
அஜீரணத்தில்  நெளிய வச்சு 
உன்னை
பசியிலே  இருக்க  வச்சு
அந்த வரிகள்  செல்வது  தான் 
எங்கே?

அடுத்த  யுகத்துக்கா?
நீ உதிர்த்த ஒற்றை சொல்லின் முலை குடித்து தூங்காதிருந்து தூங்கி போன அந்த தினங்களுக்கு திரும்ப விரும்புகிறேன். மயில் பீலி கற்பனை முடிந்திராத அந்த பளிங்கு தினங்களுக்கு.கசடு கலவா கண்ணீர் ஸ்படிகம் தித்தித்த தினங்களுக்கு.வாழ்வின் வீதியில் புருஷனோடும் குழந்தைகளோடும் சலிப்பு வாங்கி திரும்பும் உன்னை சந்திப்பதற்கு முன்னே.

Saturday, April 21, 2012

பெரு வெடிப்புக்கு அப்பால் ஒரு தருணம்,ஒரு கணமேனும் வழுகி இருந்தால் நேராத பிரபஞ்சத்தை குமய்ந்தவாறு அழுக்கை தின்னும் மீனை தின்னும் கொக்கை தின்னும் மனிதனை தின்னும் பசி என்று பொயட்டு கலாய்ப்பானா?
அவிழ்ந்த ஒரு பாறை முடிச்சில் நீர் கொட்டுகின்ற எளிமையான கரடிக்குகையில் ஒருவேளை கடவுள் கூட இளைப்பாறிக்கொண்டு இருக்கலாம். இருந்தாலும் தோஸ்த், இப்ப நான் இருக்கற ஜென்மாந்திர மேஜிக் ஷோ மேடைல இருந்து எறங்குன பெறகு தானே அங்க போவ முடியும்?

புயலில் ஒரு தோணி


காரளக பெண் சிகாமணியே ! நான் மந்தையில் இருந்து விலகி பிரிந்த ஓடுகாலி. பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும் , பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி , இந்த பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி , ஒட்டிப்பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய் அலைந்து திரிகிறேன் ; அலைந்தலைந்தே திரிவேன்; அலைந்தலைந்து திரிந்தே அழிவேன்.


சரிதான், சொல்லி என்ன இருக்கிறது? சொல்லி சொல்லி பெருகிய வனத்திலும் எரியத்தானே வேண்டும் அந்த நிலவு?
சரிதான் , சொல்ல என்ன இருக்கிறது? சொல்ல முடியாமல் பெருகிய வனத்தில் எரியட்டுமே அந்த நிலவு?
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்று நசநசக்கிற உலகத்துக்கு பயந்தால் அப்புறம் முகமூடி தான்.  

Saturday, March 10, 2012

சர்வைவல் ட்டூ பிட்டஸ்ட் - (2)




தரணி

பூ வைத்த பூவைக்கு
பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும்
ஈக்கள் சொந்தமா
ஐ லவ் யு, ஐ லவ் யு,
ஐ லவ் லவ் யூ,

ன்னு வர்றது, முன்ன வந்த பாட்டு தானே. அத அக்கக்கா பிரிச்சு போட்டு ரெண்டு பேரும் பேசிக்கிட்டுருந்தாங்க. சூப்பர் கவிஞன்னு  ஆளுக்கு ஆளு மாறி மாறி பாராட்டு மழை. வெள்ளையும் சொள்ளையுமா இருந்த அரக்கோணம் கட்சிக்காரருக்கு என்ன ஆச்சிரியம்ன்னா ஒரு வரில பூக்கள்ன்னு வருது. அடுத்த வரில ஈக்கள்ன்னு வருதுன்னார். ரைட்டர் அத கண்டுக்கல. அவுரு பிரம்மாதம்ன்னு சொல்றது 'பூவைத்த பூவைக்கு !' ச், ச், ச், என்று பல்லிசத்தம் போட்டுட்டு எங்கள பாத்தாரு.

நானும் ஸ்டீபனும் ஜட்டியோட ஒரு மூலைல உக்காந்துகிட்டிருந்தோம்.

என்ன பண்றது கஷ்ட காலம் . ரெய்டுக்கு வந்த போலீசுல ஒர்த்தன் ஜமுனாவோட சூத்து மேலே தட்டி பாத்தான். சடார்ன்னு நாங்க ரெண்டு பேரும் கைல கால்ல விழுந்து கத்தவே அவ இப்போதைக்கு தப்பிச்சுட்டா. ஸ்டீபனும், ஜமுனாவும் லவ்வர்சுன்னு நான் ஸ்ட்ராங்கா சொல்லிட்டேன். மூணு பேரும் சாமி கும்பிட கோயிலுக்கு வந்துட்டு, அப்படியே ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ற விஷயமா டிஸ்கஸ் பண்றதுக்கு ரூம் போட்டோம்ன்னு சொன்னேன். டேய், இவன் கிறிஸ்டியன் தானே. இவன் எப்டிடா முருகன கும்புடுவான்னு கேட்டப்ப ஸ்டீபன் எம்மதமும் சம்மதம்ன்னு சொல்லிட்டான். இருந்தாலும் விட்டாங்களா?. லாட்ஜ்ல புடிச்ச பெரிய கூட்டத்தோட சேத்து எங்க எல்லாரையும் கொண்டு வந்து, ஜமுனாவ சபுளுங்க கூட அங்க உங்கார வச்சுருக்காங்க. எங்க ரெண்டு பேரு மேல அடிதடி கேசும், அந்த பொண்ணு மேல விபச்சார கேசும் போட்டாச்சு. சட்டம்ன்னா அப்படிதான். நீங்க நிரபராதிங்கன்னா மூணு பேரும் உங்க பேரன்ட்ச இங்க வரவைங்கன்னு சொல்றாங்க. அது எப்டி, நாலு மணி வாக்குல கோர்ட்ல கொண்டு போய் நிறுத்தி சப் ஜெயில்ல போட்ருவாங்களாம்.





ஸ்டீபன் தான் பாவம், தல மேல கைய வெச்சு உட்காந்துக்கிட்ருக்கான்.

தீடிர்ன்னு ஒரு பரபரப்பு. ரெண்டு மூணு வக்கிலுங்க வந்தாங்க. ஏற்கனவே நாங்க அதுக்காக தான் எதிர் பாத்துகிட்டுருந்தோம். டிக்கெட்  பாக்கெட்ல இருக்கற பைசாவ நான் எடுக்கல. மத்தத எல்லாம் ஸ்டீபன் கூட சேந்து அள்ளி குடுத்தேன். ஸ்டீபனோட ரயில்வேகார்ட-ஐ  லாயர் வாங்கி வெச்சுகிட்டாரு. ஏற்பாடு என்னன்னா பணம் நெறைய செலவாவுமாம். இப்போதைக்கு மூணு பேர வெளிய கொண்டு வர்ற செலவ அவரு பாத்துக்குவாரு. வெளில வுட்ட ஒடனே வீட்டுக்கு போயி பணத்த கொண்டு வந்து செட்டில் பண்ணிட்ட பெறகு கார்டு, வாச்சு, மோதிரத்த எல்லாம் வாங்கிக்கலாம்.

ஆனா திங்ககெழம தான் ஜட்ஜ் முன்னால நின்னு மன்னிப்பு வாங்கி விடுதலயாவ முடியும்.

சனி ஞாயிறு ரெண்டு  நாளும் நாங்க ஆம்பள ஜெயில்லையும், ஜமுனா ராணி கிராக்கிங்க கூட பொம்பள ஜெயில்லையும் இருந்தோம்ன்னு சொன்னா போதாதா.


பிரச்சன என்னன்னா எல்லா தலைவலியையும் ஒரு வழியா முடிச்சுகிட்டு ஊரு வந்து சேர்ந்து ஸ்டீபன் அவள அனுப்பி வச்சுட்டு வீட்டுக்கு போயிருக்கான். ஊரே ரெண்டு பேரும் ஓடிப்போயிட்டதா பேசறத அப்பாவும் சித்தியும் கேக்க, அவ எங்க போனாளோ, நான் பிரண்டு கூட சித்தூருக்கு போயிருந்தேன்னு வெலாவரியா கத சொல்லிகிட்டிருக்கிறப்ப ஜமுனா ராணி இவன் வீட்டுக்குள்ளயே வந்துட்ருக்கா. அவ வீட்ல அவள வெளிய தள்ளி கதவ சாத்திட்ருக்காங்க.

 



எப்படியும் கொஞ்ச நாளைக்கு அந்த பக்கம் போயி ஸ்டீபன சந்திக்க முடியாது. அந்த பொண்ணு பாவம். இந்த வீட்ட இருந்தும் அவள வெளிய தள்ளி தான் கதவ சாத்திட்ருக்காங்க. ராத்திரியெல்லாம் அவ ரோடுல நின்னுகிட்டுருந்தான்னு பசங்க சொன்னாங்க. இதில நாம பண்றதுக்கு என்ன இருக்கு. குட்டி செயினும், வாச்சும் போச்சு. ஸ்டீபன் வக்கீல பாத்து பணத்த கட்டி கார்டையும் மத்த விஷயங்களையும் வாங்கினா கூட அத எங்க எனக்கு திருப்பி தர போறான்.

எல்லாத்துக்குமா எண்ண தேச்சி தல முழுகி தூங்கிட்டு நாளைலேருந்து அப்பாவுக்கு ஒத்தாசையா பாக்டரிக்கு போவணும்.

ஆ, வ் ! திருத்தணி முருகா. எல்லாரையும் காப்பாத்துடாப்பா.

* * *

ஜமுனா ராணி

அப்ப முப்பழம் அமுது செய்தருளிய தொப்பயப்பனை தொழ வினை அறுமே. நான் சொல்ற விநாயக ஸ்தோத்திரம் கரக்டா ? அது விநாயக ஸ்தோத்திரம் தானா ? கர்த்தருக்கு தோத்திரம்ன்னுவாங்களேன்னு யோசிச்சப்ப எனக்கு இது தான் ஞாபகம் வருது. அன்னைக்கு லாட்ஜ்ல தரணி என்ன மல்லாக்க படுக்க வச்சு மேல இருந்து செய்றப்ப கூட எதுக்கோ இந்த வரி மனசுல வந்து போச்சு. என்ன தான் செஞ்சோம்ன்னு ஒரு எழவும் ஞாபகமே இல்ல. இருந்தாலும் குளிக்க ஆரம்பிச்சப்ப எரிச்சல். கடிச்சு வச்சது ஸ்டீபனா தரணியான்னு சரியா புரியல. என் வீட்டுல நானும் அம்மாவும் படுத்துக்கற ரூம்ல தான் இருக்கேன்.

என் எதிர்ல ஒரு இயேசு படம். ஒல்லியா ஒரு மெழுகு வத்தி கெடச்சுது. யாராவது வர்ற டைமா பாத்து அத ஏத்திடறா மாதிரி ரெடியா வெச்சுருக்கேன். அம்புலிமாமா கத புஸ்தகத்துல இருந்து ப்ளேடால கட் பண்ணி எடுத்த படம்தான்னாலும் இயேசு கண்ணு என் கண்ணையே பாக்கறா மாதிரி இருக்கு. இந்த சாமி பவரான சாமியோ. எப்படியோ ஒரு வழியா ஊர் பஞ்சாயத்து முடிஞ்சு ஸ்டீபன் இங்க வர வாய்ப்பிருக்கு.





என் அப்பாவும், அம்மாவும் போயிருக்காங்க. அப்பா டம்மி பீசு தான். இருந்தாலும் அம்மா விழுந்து பொரளாம  இருக்க மாட்டாங்க. எல்லாத்துக்கும் மேல தளபதி நாராயணசாமிக்கு எங்க குடும்பத்து மேல ரொம்ப அக்கறை. எங்க சைடு என்ன பிராப்ளம்ன்னாலும் அவரு தான் பஞ்சாயத்து ஹெட்டு. எப்படியாவது பேசி ஸ்டீபன என் கழுத்துல தாலி கட்ட வெச்சுருவாருன்னு நெனைக்கறேன். ஒரு வேள திரேசா ஆண்டியும், அங்கிளும் மதம் பத்தி பேசி அடம் புடிச்சாங்கன்னா நான் கிறிஸ்டியனா மாற ரெடி. எங்கம்மாவே கூட அதுக்கு ஓகேன்னா பாருங்களேன். இப்பவே நான் இயேசு படத்தோடயும் மெழுகுவத்தியோடயும் ரெடியா தானே இருக்கேன்?.

சாரு லதா ஓடி வந்தா.

எல்லாமா சேந்து ஸ்டீபன கிடுக்கிப்புடி போட்டுட்டாங்களாம். எப்பவுமே அநீதிய எதிர்த்து கொரல் குடுக்கற ஸ்ரீவத்சன் சார் அவர  அடிக்கவே போயிட்டாராம். கடசியா கத எதுல வந்து நிக்குதுன்னா ஸ்டீபனுக்கு ஒரே ஒரு தடவ என்ன சந்திச்சு பேசணுமாம். நாலே வார்த்த பேசிக்கறேன்னு மக்கள் கிட்ட பர்மிஷன் கேட்டு இருக்காரு.

வீடு நெறைய கூட்டம் புகுந்தாலும் நான் இருக்கற ரூமுக்கு ஸ்டீபன் மட்டும் தான் வந்தாரு.

உஷாரா நான் அந்த நேரத்துக்கெல்லாம் மெழுகு வைத்திய கொளுத்தி, முட்டி போட்டு, ஜெபம் பண்றா மாதிரி கண்ண  மூடிகிட்டேன். மனசுல விநாயக ஸ்தோத்திரம் தான் ஓடுது. அது மிஸ்ஸாவறப்ப லாட்ஜ் விஷயங்க சினிமா மாதிரி.

"ஜமுனா ராணி"

கண்ண தொறந்தேன்.

என் கிட்ட உன்னப் போய் கட்டிக்க சொல்றாங்க. இது நியாமா?

நான் சிலுவை குறிய போட்டு முத்தம் போடறதுக்குள்ள அவுரு ஆத்ரமா  " நீ அப்புறமா நடி !"இப்ப நான் கேக்ற கேள்விக்கு  பதில சொல்லு. உன்ன நான் மட்டுமா செஞ்சேன்? தரணி கூட தானே செஞ்சான்?" ன்னாரு.





"அவுரு உள்ள வுடல "

"ஆங்? என்னது?"

"ஆமா ஸ்டீபன். நான் ரெண்டு தொடையும் இறுக்கிக்கிட்டனா , அவுரு அதிலேயே தான் செஞ்சாரு. காட் பிராமிசா சொல்றன். அவர் கிட்ட நான் என் கற்ப இழக்கவே இல்ல!".

அவுரு ரொம்ப நேரம் என்னையே பாத்தாரு. நான் மறுபடியும் சிலுவை குறி போட  ஆரம்பிச்சவுடனே "ஓத்தா, நீயெல்லாம் நல்லா இருப்பியா?" ன்னு மட்டும் கேட்டாரு.

போயிட்டாரு..

சே, இதுதான் ஸ்டீபன் கிட்ட எனக்கு பிடிக்காத சொபாவம். ஏதாவது விஷயமா, முழுசா பேசவே மாட்டாரு. பாதில பாதில அப்படியே விட்டுட்டு தன் பாட்டுக்கு போயிடுவாரு. என்ன செய்யறது, சின்ன வயசுல இருந்து அதான் அவரு பழக்கமா இருக்கும் போல இருக்கு.

கொஞ்சம் கொஞ்சமா எடுத்து சொல்லி நான் தான் அவர மாத்தணும். கல்யாணத்துக்கு அப்றமா.

எங்க கல்யாணத்துக்கு தரணி சார் வருவாரா என்னன்னு தெரியல.

* * *


தளபதி நாராயணசாமி

ஆங் , வணக்கம், வணக்கம், வணக்கம். இருங்க என் புள்ளைங்கள அனுப்பி வச்சுட்டு வந்துடறேன். இவன் மூத்தவன். பத்தாம் கிளாசு. இது சின்னது. ஆறாவது படிக்குது.

நம்ம ஜமுனா ராணிய இவங்கள விட சின்ன வயசுல இருந்து எனக்கு தெரியும். அட, என் மடி மேல உட்கார வச்சு வெளயாட்டு காட்டிருக்கேன்னா பாத்துக்கோங்களேன். அவகிட்ட அந்த ஸ்டீபன் பையன் வெளயாட்டு காமிச்சது தப்பு தான்.





அந்த பையன் ஒரு மாதிரி. அவனால நல்லபடி வளர முடியல. அவனுக்கு ஒன்றர வயசா இருக்கறப்ப அவனோட அம்மா மிஸ்ஸிங். மிஸ்ஸிங்ன்னா அவன தூக்கிகிட்டு ஞாயித்துக்கெழம அப்பா அம்மா ரெண்டு பேரும் சர்ச்சுக்கு போயிருக்காங்க. சர்ச் காம்பவுன்ட்டுக்குள்ள இருக்கற மரத்தடியில கொழந்தைய போட்டுட்டு அந்தம்மா அப்பாவோட பிரெண்ட் கூட ஓடி போயிட்டு இருக்காங்க. இந்த பையன் அப்பவே அனாதையாயிட்டான். ரெண்டாவது அம்மாவா வந்த திரேசம்மா நல்ல மாதிரி. அதாவது அப்படி நடிக்கும். பையனுக்கு அத செய்யாத, இத செய்யாதன்னு அந்த கெழவன தன் பாட்டுக்கு ஆட்டி வைக்கும். நீங்களே சொல்லுங்க, நிக்கறத்துக்கு நிழல் இல்லாம, நிம்மதி இல்லாம ஊர சுத்தி வந்துகிட்டிருந்தான் அந்த பையன், அவனுக்கு இந்த பழி வேற வந்து சேந்தா என்ன நடக்கும்? இருக்கற வேலைய தூண்டிலா போட்டு அவசர அவசரமா ஏதோ ஒரு பொண்ண கட்டி வெச்சாங்க. அதுவும், அவளோட அம்மாவும் சேந்து அன்பா இருக்கறோம், பண்பா இருக்கறோம் அவங்க வீட்லேயே சேத்து வெச்சுகிட்டு, பின்னால ஏதேதோ பழிய சொல்லி கடசியா பொறந்த கொழந்தைய கூட அவனுக்கு காட்டல. அவன் வேற ரயில்வேல திருடி மாட்டிகிட்டானாம். வேல போயி, ஊசி அடிச்சு சுத்திக்கிட்டுருந்தவன் நுங்கம்பாக்கத்துல பிச்ச எடுக்கறப்ப யாரோ பாத்துருக்காங்க. உண்மைய சொல்ல போனா இப்ப அவன் உயிரோட இல்லன்னு தான் நெனைக்கறேன்.

அவன் என்ன சார் பெரிசா தப்பு பண்ணிட்டான். அவனுக்கு எதிரா விதி வேல செஞ்சுருச்சு. லாட்ஜ்காரங்க, அவங்கள புடிச்ச போலிஸ்காரங்க, வக்கீல், மாஜிஸ்டிரெட், எல்லாரும் கூட்டா சேந்து தான் திருத்தணில கொள்ள அடிக்கறாங்க. அது ஒரு தொழிலு. நானெலாம் கூட இங்க பண்றா மாதிரி ஒரு தொழிலுன்னு வெச்சுக்கங்களேன். அதிர்ஷ்டம் கெட்டவன் மாட்டிகினு சாவறான். அன்னைக்கு பஞ்சாயத்து போயிக்கிட்டு இருக்கறப்ப ஜமுனா ராணிய பாத்து நாலு வார்த்த பேச போனவன் இடிஞ்சு போயி என்கிட்டே வந்தான். தனியா கூட்டிகிட்டு போயி சட்டுன்னு என் கால்ல விழுந்திட்டான். இந்த மாதிரி சந்தர்ப்பத்துல நான் என் கட்டிங் அமௌண்ட் பத்தி சொல்லவே, கொஞ்சம் கொறச்சுக்கங்கன்னு கேட்டான். அதுக்கு அவன் சொன்ன காரணம் என்னன்னா ஜமுனா ராணி கிட்ட அவன் மனசாட்சியோட தான் நடந்துகிட்டானாம்.







அவன் அவளோட கற்ப சேதாரம் பண்ணவே இல்ல, ஆமா, உள்ள விடாம தொடைல வெச்சு தான்  செஞ்சுருக்கான். இத கேள்விப்பட்ட உடனேயே எனக்கு அவன் மேல நல்ல அபிப்ராயம் வந்து, முன்ன சொன்னதுல பாதிய தான் வாங்கினேன். அதுமட்டும் இல்ல ஜமுனா ராணிய நானே கல்யாணம் பண்ணிகிட்டேன்.

என்னன்னா, சின்ன வயசுல மடில உக்கார வச்சு வெளையாட்டு காட்றப்பவே நான் அவள தடவறது வழக்கம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டுன்னு கட்சி பணி செஞ்சுக்கிட்டுருந்து காசு பண்ணிகிட்ருந்தனா, கல்யாணம் வுட்டு போயிருந்திச்சு. ஸ்டீபன் விஷயம் வந்து அவ பேரே நாறி போய் அவளோட அம்மா அப்பா தெகைச்சு நின்னப்ப நான் பேரம் பேசிட்டேன். சனியன் தொலைஞ்சா போதும்ன்னு நெனைச்சு பத்து பைசா வரதட்சண  இல்லாம எனக்கு கன்னிகாதானம் பண்ணி குடுத்துட்டாங்க. 






இப்ப நாங்க ஒரு கௌரவமான பேமிலி. சார், ரெண்டு பசங்கள பெத்து வளத்து அவ ஒரு குடும்ப தலவியா மிளிர்றத யாரும் பாக்கலாம். ஸ்டீபன் குடும்பத்த பத்தி ஒண்ணும் தெரியலன்னாலும் தரணின்னு ஒர்த்தர் இருந்தார். அவரு இப்ப கூட அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து நலம் விசாரிச்சுட்டு போவார். ரெண்டு பேருமா சேந்து ஒரு பிசினஸ் பண்ண வேண்டியது தானேன்னு நம்ம ஜமுனா ராணி அடிக்கடி கேட்டுகிட்ருக்கா. மனைவி சொல் மந்திரம்ன்னு தானே நம்ம பண்பாடு சொல்லுது. அவ ஆசைய பூர்த்தி பண்ணி வெச்சுட வேண்டியது தான்.

என்ன சொல்றீங்க?