Saturday, March 10, 2012

சர்வைவல் ட்டூ பிட்டஸ்ட் - (2)




தரணி

பூ வைத்த பூவைக்கு
பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும்
ஈக்கள் சொந்தமா
ஐ லவ் யு, ஐ லவ் யு,
ஐ லவ் லவ் யூ,

ன்னு வர்றது, முன்ன வந்த பாட்டு தானே. அத அக்கக்கா பிரிச்சு போட்டு ரெண்டு பேரும் பேசிக்கிட்டுருந்தாங்க. சூப்பர் கவிஞன்னு  ஆளுக்கு ஆளு மாறி மாறி பாராட்டு மழை. வெள்ளையும் சொள்ளையுமா இருந்த அரக்கோணம் கட்சிக்காரருக்கு என்ன ஆச்சிரியம்ன்னா ஒரு வரில பூக்கள்ன்னு வருது. அடுத்த வரில ஈக்கள்ன்னு வருதுன்னார். ரைட்டர் அத கண்டுக்கல. அவுரு பிரம்மாதம்ன்னு சொல்றது 'பூவைத்த பூவைக்கு !' ச், ச், ச், என்று பல்லிசத்தம் போட்டுட்டு எங்கள பாத்தாரு.

நானும் ஸ்டீபனும் ஜட்டியோட ஒரு மூலைல உக்காந்துகிட்டிருந்தோம்.

என்ன பண்றது கஷ்ட காலம் . ரெய்டுக்கு வந்த போலீசுல ஒர்த்தன் ஜமுனாவோட சூத்து மேலே தட்டி பாத்தான். சடார்ன்னு நாங்க ரெண்டு பேரும் கைல கால்ல விழுந்து கத்தவே அவ இப்போதைக்கு தப்பிச்சுட்டா. ஸ்டீபனும், ஜமுனாவும் லவ்வர்சுன்னு நான் ஸ்ட்ராங்கா சொல்லிட்டேன். மூணு பேரும் சாமி கும்பிட கோயிலுக்கு வந்துட்டு, அப்படியே ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ற விஷயமா டிஸ்கஸ் பண்றதுக்கு ரூம் போட்டோம்ன்னு சொன்னேன். டேய், இவன் கிறிஸ்டியன் தானே. இவன் எப்டிடா முருகன கும்புடுவான்னு கேட்டப்ப ஸ்டீபன் எம்மதமும் சம்மதம்ன்னு சொல்லிட்டான். இருந்தாலும் விட்டாங்களா?. லாட்ஜ்ல புடிச்ச பெரிய கூட்டத்தோட சேத்து எங்க எல்லாரையும் கொண்டு வந்து, ஜமுனாவ சபுளுங்க கூட அங்க உங்கார வச்சுருக்காங்க. எங்க ரெண்டு பேரு மேல அடிதடி கேசும், அந்த பொண்ணு மேல விபச்சார கேசும் போட்டாச்சு. சட்டம்ன்னா அப்படிதான். நீங்க நிரபராதிங்கன்னா மூணு பேரும் உங்க பேரன்ட்ச இங்க வரவைங்கன்னு சொல்றாங்க. அது எப்டி, நாலு மணி வாக்குல கோர்ட்ல கொண்டு போய் நிறுத்தி சப் ஜெயில்ல போட்ருவாங்களாம்.





ஸ்டீபன் தான் பாவம், தல மேல கைய வெச்சு உட்காந்துக்கிட்ருக்கான்.

தீடிர்ன்னு ஒரு பரபரப்பு. ரெண்டு மூணு வக்கிலுங்க வந்தாங்க. ஏற்கனவே நாங்க அதுக்காக தான் எதிர் பாத்துகிட்டுருந்தோம். டிக்கெட்  பாக்கெட்ல இருக்கற பைசாவ நான் எடுக்கல. மத்தத எல்லாம் ஸ்டீபன் கூட சேந்து அள்ளி குடுத்தேன். ஸ்டீபனோட ரயில்வேகார்ட-ஐ  லாயர் வாங்கி வெச்சுகிட்டாரு. ஏற்பாடு என்னன்னா பணம் நெறைய செலவாவுமாம். இப்போதைக்கு மூணு பேர வெளிய கொண்டு வர்ற செலவ அவரு பாத்துக்குவாரு. வெளில வுட்ட ஒடனே வீட்டுக்கு போயி பணத்த கொண்டு வந்து செட்டில் பண்ணிட்ட பெறகு கார்டு, வாச்சு, மோதிரத்த எல்லாம் வாங்கிக்கலாம்.

ஆனா திங்ககெழம தான் ஜட்ஜ் முன்னால நின்னு மன்னிப்பு வாங்கி விடுதலயாவ முடியும்.

சனி ஞாயிறு ரெண்டு  நாளும் நாங்க ஆம்பள ஜெயில்லையும், ஜமுனா ராணி கிராக்கிங்க கூட பொம்பள ஜெயில்லையும் இருந்தோம்ன்னு சொன்னா போதாதா.


பிரச்சன என்னன்னா எல்லா தலைவலியையும் ஒரு வழியா முடிச்சுகிட்டு ஊரு வந்து சேர்ந்து ஸ்டீபன் அவள அனுப்பி வச்சுட்டு வீட்டுக்கு போயிருக்கான். ஊரே ரெண்டு பேரும் ஓடிப்போயிட்டதா பேசறத அப்பாவும் சித்தியும் கேக்க, அவ எங்க போனாளோ, நான் பிரண்டு கூட சித்தூருக்கு போயிருந்தேன்னு வெலாவரியா கத சொல்லிகிட்டிருக்கிறப்ப ஜமுனா ராணி இவன் வீட்டுக்குள்ளயே வந்துட்ருக்கா. அவ வீட்ல அவள வெளிய தள்ளி கதவ சாத்திட்ருக்காங்க.

 



எப்படியும் கொஞ்ச நாளைக்கு அந்த பக்கம் போயி ஸ்டீபன சந்திக்க முடியாது. அந்த பொண்ணு பாவம். இந்த வீட்ட இருந்தும் அவள வெளிய தள்ளி தான் கதவ சாத்திட்ருக்காங்க. ராத்திரியெல்லாம் அவ ரோடுல நின்னுகிட்டுருந்தான்னு பசங்க சொன்னாங்க. இதில நாம பண்றதுக்கு என்ன இருக்கு. குட்டி செயினும், வாச்சும் போச்சு. ஸ்டீபன் வக்கீல பாத்து பணத்த கட்டி கார்டையும் மத்த விஷயங்களையும் வாங்கினா கூட அத எங்க எனக்கு திருப்பி தர போறான்.

எல்லாத்துக்குமா எண்ண தேச்சி தல முழுகி தூங்கிட்டு நாளைலேருந்து அப்பாவுக்கு ஒத்தாசையா பாக்டரிக்கு போவணும்.

ஆ, வ் ! திருத்தணி முருகா. எல்லாரையும் காப்பாத்துடாப்பா.

* * *

ஜமுனா ராணி

அப்ப முப்பழம் அமுது செய்தருளிய தொப்பயப்பனை தொழ வினை அறுமே. நான் சொல்ற விநாயக ஸ்தோத்திரம் கரக்டா ? அது விநாயக ஸ்தோத்திரம் தானா ? கர்த்தருக்கு தோத்திரம்ன்னுவாங்களேன்னு யோசிச்சப்ப எனக்கு இது தான் ஞாபகம் வருது. அன்னைக்கு லாட்ஜ்ல தரணி என்ன மல்லாக்க படுக்க வச்சு மேல இருந்து செய்றப்ப கூட எதுக்கோ இந்த வரி மனசுல வந்து போச்சு. என்ன தான் செஞ்சோம்ன்னு ஒரு எழவும் ஞாபகமே இல்ல. இருந்தாலும் குளிக்க ஆரம்பிச்சப்ப எரிச்சல். கடிச்சு வச்சது ஸ்டீபனா தரணியான்னு சரியா புரியல. என் வீட்டுல நானும் அம்மாவும் படுத்துக்கற ரூம்ல தான் இருக்கேன்.

என் எதிர்ல ஒரு இயேசு படம். ஒல்லியா ஒரு மெழுகு வத்தி கெடச்சுது. யாராவது வர்ற டைமா பாத்து அத ஏத்திடறா மாதிரி ரெடியா வெச்சுருக்கேன். அம்புலிமாமா கத புஸ்தகத்துல இருந்து ப்ளேடால கட் பண்ணி எடுத்த படம்தான்னாலும் இயேசு கண்ணு என் கண்ணையே பாக்கறா மாதிரி இருக்கு. இந்த சாமி பவரான சாமியோ. எப்படியோ ஒரு வழியா ஊர் பஞ்சாயத்து முடிஞ்சு ஸ்டீபன் இங்க வர வாய்ப்பிருக்கு.





என் அப்பாவும், அம்மாவும் போயிருக்காங்க. அப்பா டம்மி பீசு தான். இருந்தாலும் அம்மா விழுந்து பொரளாம  இருக்க மாட்டாங்க. எல்லாத்துக்கும் மேல தளபதி நாராயணசாமிக்கு எங்க குடும்பத்து மேல ரொம்ப அக்கறை. எங்க சைடு என்ன பிராப்ளம்ன்னாலும் அவரு தான் பஞ்சாயத்து ஹெட்டு. எப்படியாவது பேசி ஸ்டீபன என் கழுத்துல தாலி கட்ட வெச்சுருவாருன்னு நெனைக்கறேன். ஒரு வேள திரேசா ஆண்டியும், அங்கிளும் மதம் பத்தி பேசி அடம் புடிச்சாங்கன்னா நான் கிறிஸ்டியனா மாற ரெடி. எங்கம்மாவே கூட அதுக்கு ஓகேன்னா பாருங்களேன். இப்பவே நான் இயேசு படத்தோடயும் மெழுகுவத்தியோடயும் ரெடியா தானே இருக்கேன்?.

சாரு லதா ஓடி வந்தா.

எல்லாமா சேந்து ஸ்டீபன கிடுக்கிப்புடி போட்டுட்டாங்களாம். எப்பவுமே அநீதிய எதிர்த்து கொரல் குடுக்கற ஸ்ரீவத்சன் சார் அவர  அடிக்கவே போயிட்டாராம். கடசியா கத எதுல வந்து நிக்குதுன்னா ஸ்டீபனுக்கு ஒரே ஒரு தடவ என்ன சந்திச்சு பேசணுமாம். நாலே வார்த்த பேசிக்கறேன்னு மக்கள் கிட்ட பர்மிஷன் கேட்டு இருக்காரு.

வீடு நெறைய கூட்டம் புகுந்தாலும் நான் இருக்கற ரூமுக்கு ஸ்டீபன் மட்டும் தான் வந்தாரு.

உஷாரா நான் அந்த நேரத்துக்கெல்லாம் மெழுகு வைத்திய கொளுத்தி, முட்டி போட்டு, ஜெபம் பண்றா மாதிரி கண்ண  மூடிகிட்டேன். மனசுல விநாயக ஸ்தோத்திரம் தான் ஓடுது. அது மிஸ்ஸாவறப்ப லாட்ஜ் விஷயங்க சினிமா மாதிரி.

"ஜமுனா ராணி"

கண்ண தொறந்தேன்.

என் கிட்ட உன்னப் போய் கட்டிக்க சொல்றாங்க. இது நியாமா?

நான் சிலுவை குறிய போட்டு முத்தம் போடறதுக்குள்ள அவுரு ஆத்ரமா  " நீ அப்புறமா நடி !"இப்ப நான் கேக்ற கேள்விக்கு  பதில சொல்லு. உன்ன நான் மட்டுமா செஞ்சேன்? தரணி கூட தானே செஞ்சான்?" ன்னாரு.





"அவுரு உள்ள வுடல "

"ஆங்? என்னது?"

"ஆமா ஸ்டீபன். நான் ரெண்டு தொடையும் இறுக்கிக்கிட்டனா , அவுரு அதிலேயே தான் செஞ்சாரு. காட் பிராமிசா சொல்றன். அவர் கிட்ட நான் என் கற்ப இழக்கவே இல்ல!".

அவுரு ரொம்ப நேரம் என்னையே பாத்தாரு. நான் மறுபடியும் சிலுவை குறி போட  ஆரம்பிச்சவுடனே "ஓத்தா, நீயெல்லாம் நல்லா இருப்பியா?" ன்னு மட்டும் கேட்டாரு.

போயிட்டாரு..

சே, இதுதான் ஸ்டீபன் கிட்ட எனக்கு பிடிக்காத சொபாவம். ஏதாவது விஷயமா, முழுசா பேசவே மாட்டாரு. பாதில பாதில அப்படியே விட்டுட்டு தன் பாட்டுக்கு போயிடுவாரு. என்ன செய்யறது, சின்ன வயசுல இருந்து அதான் அவரு பழக்கமா இருக்கும் போல இருக்கு.

கொஞ்சம் கொஞ்சமா எடுத்து சொல்லி நான் தான் அவர மாத்தணும். கல்யாணத்துக்கு அப்றமா.

எங்க கல்யாணத்துக்கு தரணி சார் வருவாரா என்னன்னு தெரியல.

* * *


தளபதி நாராயணசாமி

ஆங் , வணக்கம், வணக்கம், வணக்கம். இருங்க என் புள்ளைங்கள அனுப்பி வச்சுட்டு வந்துடறேன். இவன் மூத்தவன். பத்தாம் கிளாசு. இது சின்னது. ஆறாவது படிக்குது.

நம்ம ஜமுனா ராணிய இவங்கள விட சின்ன வயசுல இருந்து எனக்கு தெரியும். அட, என் மடி மேல உட்கார வச்சு வெளயாட்டு காட்டிருக்கேன்னா பாத்துக்கோங்களேன். அவகிட்ட அந்த ஸ்டீபன் பையன் வெளயாட்டு காமிச்சது தப்பு தான்.





அந்த பையன் ஒரு மாதிரி. அவனால நல்லபடி வளர முடியல. அவனுக்கு ஒன்றர வயசா இருக்கறப்ப அவனோட அம்மா மிஸ்ஸிங். மிஸ்ஸிங்ன்னா அவன தூக்கிகிட்டு ஞாயித்துக்கெழம அப்பா அம்மா ரெண்டு பேரும் சர்ச்சுக்கு போயிருக்காங்க. சர்ச் காம்பவுன்ட்டுக்குள்ள இருக்கற மரத்தடியில கொழந்தைய போட்டுட்டு அந்தம்மா அப்பாவோட பிரெண்ட் கூட ஓடி போயிட்டு இருக்காங்க. இந்த பையன் அப்பவே அனாதையாயிட்டான். ரெண்டாவது அம்மாவா வந்த திரேசம்மா நல்ல மாதிரி. அதாவது அப்படி நடிக்கும். பையனுக்கு அத செய்யாத, இத செய்யாதன்னு அந்த கெழவன தன் பாட்டுக்கு ஆட்டி வைக்கும். நீங்களே சொல்லுங்க, நிக்கறத்துக்கு நிழல் இல்லாம, நிம்மதி இல்லாம ஊர சுத்தி வந்துகிட்டிருந்தான் அந்த பையன், அவனுக்கு இந்த பழி வேற வந்து சேந்தா என்ன நடக்கும்? இருக்கற வேலைய தூண்டிலா போட்டு அவசர அவசரமா ஏதோ ஒரு பொண்ண கட்டி வெச்சாங்க. அதுவும், அவளோட அம்மாவும் சேந்து அன்பா இருக்கறோம், பண்பா இருக்கறோம் அவங்க வீட்லேயே சேத்து வெச்சுகிட்டு, பின்னால ஏதேதோ பழிய சொல்லி கடசியா பொறந்த கொழந்தைய கூட அவனுக்கு காட்டல. அவன் வேற ரயில்வேல திருடி மாட்டிகிட்டானாம். வேல போயி, ஊசி அடிச்சு சுத்திக்கிட்டுருந்தவன் நுங்கம்பாக்கத்துல பிச்ச எடுக்கறப்ப யாரோ பாத்துருக்காங்க. உண்மைய சொல்ல போனா இப்ப அவன் உயிரோட இல்லன்னு தான் நெனைக்கறேன்.

அவன் என்ன சார் பெரிசா தப்பு பண்ணிட்டான். அவனுக்கு எதிரா விதி வேல செஞ்சுருச்சு. லாட்ஜ்காரங்க, அவங்கள புடிச்ச போலிஸ்காரங்க, வக்கீல், மாஜிஸ்டிரெட், எல்லாரும் கூட்டா சேந்து தான் திருத்தணில கொள்ள அடிக்கறாங்க. அது ஒரு தொழிலு. நானெலாம் கூட இங்க பண்றா மாதிரி ஒரு தொழிலுன்னு வெச்சுக்கங்களேன். அதிர்ஷ்டம் கெட்டவன் மாட்டிகினு சாவறான். அன்னைக்கு பஞ்சாயத்து போயிக்கிட்டு இருக்கறப்ப ஜமுனா ராணிய பாத்து நாலு வார்த்த பேச போனவன் இடிஞ்சு போயி என்கிட்டே வந்தான். தனியா கூட்டிகிட்டு போயி சட்டுன்னு என் கால்ல விழுந்திட்டான். இந்த மாதிரி சந்தர்ப்பத்துல நான் என் கட்டிங் அமௌண்ட் பத்தி சொல்லவே, கொஞ்சம் கொறச்சுக்கங்கன்னு கேட்டான். அதுக்கு அவன் சொன்ன காரணம் என்னன்னா ஜமுனா ராணி கிட்ட அவன் மனசாட்சியோட தான் நடந்துகிட்டானாம்.







அவன் அவளோட கற்ப சேதாரம் பண்ணவே இல்ல, ஆமா, உள்ள விடாம தொடைல வெச்சு தான்  செஞ்சுருக்கான். இத கேள்விப்பட்ட உடனேயே எனக்கு அவன் மேல நல்ல அபிப்ராயம் வந்து, முன்ன சொன்னதுல பாதிய தான் வாங்கினேன். அதுமட்டும் இல்ல ஜமுனா ராணிய நானே கல்யாணம் பண்ணிகிட்டேன்.

என்னன்னா, சின்ன வயசுல மடில உக்கார வச்சு வெளையாட்டு காட்றப்பவே நான் அவள தடவறது வழக்கம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டுன்னு கட்சி பணி செஞ்சுக்கிட்டுருந்து காசு பண்ணிகிட்ருந்தனா, கல்யாணம் வுட்டு போயிருந்திச்சு. ஸ்டீபன் விஷயம் வந்து அவ பேரே நாறி போய் அவளோட அம்மா அப்பா தெகைச்சு நின்னப்ப நான் பேரம் பேசிட்டேன். சனியன் தொலைஞ்சா போதும்ன்னு நெனைச்சு பத்து பைசா வரதட்சண  இல்லாம எனக்கு கன்னிகாதானம் பண்ணி குடுத்துட்டாங்க. 






இப்ப நாங்க ஒரு கௌரவமான பேமிலி. சார், ரெண்டு பசங்கள பெத்து வளத்து அவ ஒரு குடும்ப தலவியா மிளிர்றத யாரும் பாக்கலாம். ஸ்டீபன் குடும்பத்த பத்தி ஒண்ணும் தெரியலன்னாலும் தரணின்னு ஒர்த்தர் இருந்தார். அவரு இப்ப கூட அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து நலம் விசாரிச்சுட்டு போவார். ரெண்டு பேருமா சேந்து ஒரு பிசினஸ் பண்ண வேண்டியது தானேன்னு நம்ம ஜமுனா ராணி அடிக்கடி கேட்டுகிட்ருக்கா. மனைவி சொல் மந்திரம்ன்னு தானே நம்ம பண்பாடு சொல்லுது. அவ ஆசைய பூர்த்தி பண்ணி வெச்சுட வேண்டியது தான்.

என்ன சொல்றீங்க?

 







 



  

 

Friday, March 9, 2012

சர்வைவல் ட்டூ பிட்டஸ்ட்




ஜமுனா ராணி

இப்டி எல்லாம் நடக்கும்ன்னு நான் நெனைக்கவே இல்ல. இப்ப இருக்கறது சந்தோஷமா பயமா. ஸ்டீபனுக்கு எவ்ளோ தைரியம் பாருங்க. ஆனா அவர பத்தி ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சம் தெரியும். எப்பவாவது திரேசா ஆன்டி கிட்ட கடுகு பருப்பு கேட்டு வாங்கறதுக்காக போறப்ப ஆண்டிக்கு தெரியாம என்ன ஒரு மாதிரியா பாப்பார். அப்படியே நோண்டறா மாதிரி இருக்கும். அதிகம் போனா ஆண்டியோட குடும்பம் இங்க குடி வந்து ஒரு வருஷம் இருக்குமா. ஸ்டீபனோட அப்பா, அப்பா மாதிரி இல்லாம தாத்தா மாதிரி இருப்பார். வாம்மா ஜமுனா ராணி, இன்னும் நீ வேலைக்கு கெளம்பலையான்னு ரொம்ப கரகரப்பா இழுத்துகிட்டே பேசுவார். திரேசா ஆன்டி மாதிரி இருக்கற திம்சுகட்டய எப்டி தான் சமாளிக்கிறாரோ. மூத்த சம்சாரத்து பையன்னா கூட நீங்க ஸ்டீபன் மேல ரொம்ப அன்பா தான் இருக்கீங்கன்னு நான் ஆன்டி கிட்ட சொல்லியிருந்தாலும், பாவம் தாயில்லா புள்ளையின்னு நான் ஸ்டீபன நெனைச்சுக்குவேன். ஆனா அவரா பாவம்? ஏற்கனவே ஒரு தடவ அவங்க வீட்டுக்கு போனப்ப அங்க யாரும் இல்லையா, அப்பவே தைரியமா என்கிட்டே உள்ள வா, உள்ள வான்னாரு.

"ஆண்டி எங்க ?"

"ஏன், ஆன்டி இருந்தா தான் வருவியா, இந்த மாதிரி சந்தர்ப்பம் கெடைக்காதும்மா. உள்ள வா"

"எதுக்கு?"

"எதுக்கா ? பச்ச புள்ள மாதிரி நடிக்காத" ன்னு ஸ்ட்ரையிட்டா என் மார பிடிக்கறா மாதிரி வரவே, சட்டுன்னு ஓடி வந்துட்டேன். அப்புறம் எப்பவாச்சும் ரோட்ல என்ன க்ராஸ் பண்ணி போறப்ப, "கழுத்தறுத்துட்ட பாத்தியா, நம்ப வச்சு ஏமாத்திட்ட பாத்தியா" ன்னு சைடுல மொனகிகிட்டே போவார். அய், நல்லா இருக்கே இந்த கத, நான் எப்ப நம்ப வச்சேன். நான் எப்ப ஏமாத்தினேன்னு நெனைச்சுப்பேன். இருந்தாலும் அவர பாக்கறப்ப எல்லாம் ஜிவ்வுன்னு ஆயிகிட்டே தான் இருந்திச்சு.




"ஒரு நாளு மத்தியானம் லீவு போட்டுட்டு வீட்டுக்கு வந்துரு " ன்னாரு.

"ஏன்?"

"எல்லாரும் வெளிய போறாங்க. வீடு காலி. ஒரு ரெண்டு மணி வாக்குல உள்ள வந்துரு"

"ஆங், ஆச தோச! "
"அப்ப வர மாட்டியா ?"

"இங்க பாருங்க. நீங்க இப்டி எல்லாம் என்கிட்டே தப்பு தப்பா பேசாதீங்க. லீவு போட்டுட்டு வந்தா எங்க வீட்ல என்னதுன்னு கேக்க மாட்டாங்க ?"

"ஏய், எதையாவது புளுவி உடு"

"ஆங், எனக்கு பொய்யெல்லாம் வராது. ரெண்டு மணிக்கு மேல லீவு போட்டுட்டு வந்தவ எங்கன்னு அம்மா தேட மாட்டாங்க?" ன்னு சொல்லிக்கிட்டே நான் வந்துட்டேன். மறுநாள் கம்பெனியில துணி தச்சிகிட்டே என்னத்த செய்றதுன்னு புரியாம தான் இருந்தேன். நூறு பொண்ணுங்களுக்கு நடுலயே அவரு வந்து என் துணிய எல்லாம் அவுக்கற மாதிரி நெனப்பு வந்து பயமாய் போச்சு. அம்பாள  மனசுல நெனைச்சுக்கிட்டு தாக்கு புடிச்சுட்டேன். மறுநாள் என்ன பார்த்த போது அவுரு பேசல. மூஞ்ச தூக்கி வச்சுகிட்டு விருட்டுன்னு போயிட்டார். நான் அன்னைக்கு ராத்திரியெல்லாம் தூங்காம தான் விழிச்சு கெடந்தேன்.  அப்புறம் நைசா எழுந்து போயி கொஞ்சம் தூரத்துல இருந்த அப்பாவோட மேஜை மேல தொழாவி பாகவதத்துக்கு அடில இருந்து அந்த குட்டி பொஸ்தகத்த கொண்டு வந்து படிக்க ஆரம்பிச்சேன். இது புதுசு தான். இன்னைக்கு காலைல வாங்கியிருப்பாரு போல. ஏழெட்டு கதைல 'பக்கத்துக்கு வீட்டு பருவ  சிட்டு' தான் எனக்கு புடிச்சு இருந்துச்சு. ஏதோ கதிர்வேல்ன்னு ஒரு அண்ணன் ஒரு வாரத்துக்கு முன்னால வயசு வந்த சித்ராவ எல்லாமே பண்றாரு. நான் வயசுக்கு வந்து மூணு வருஷத்துக்கு மேலே இருக்கும். கதிர்வேல் அண்ணனை விட எனக்கு தெரிஞ்சி ஸ்டீபன் ரொம்ப மோசம். அவுரு பார்வையே கற்பழிக்கறா  மாதிரி இருக்குன்னா நேர்ல போனா என்னவெல்லாம் செய்வாரு?

காலைலயும் பாக்காத மாதிரி அவர் போவவே 'ஏங்க' ன்னு நானே கூப்பிட்டேன்.

நின்னாரு.

என்ன பேசறது? "நேத்து உங்க வீட்டுக்கு ராணி புக்கு வந்துருச்சா?"

"ஏ, இனிமே உன் கூட பேசறதா இல்ல. ஏதோ புடிச்சி போச்சேன்னு கால்ல விழுந்தா ரொம்ப தான் பண்ணிக்கறியே" ன்னு போயிட்டார்.

எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா போச்சு. பாவம் நம்ப மேல லவ்வாயிட்ட ஒர்த்தர இப்படி நான் அலைகழிக்கறது தப்பு தான். ஆனா உஷாவோ, ரமணியோ, நூர்ஜகானோ வேற மாதிரி இல்ல லவ் பண்றாங்க?. ஹான்ட் பாக்ல மூணு பேருமே லெட்டர்ஸ் வச்சுருக்காளுங்க. எல்லாத்துலேயுமே தவறாம ஐ லவ் யூ ன்னு இருக்கு. அந்த பாஷா கிஸ் மீ ன்னு கூட எழுதியிருந்தான். அப்ப அப்ப  பீச்சுக்கெல்லாம் கூட போவாங்க தான். உஷாவோட ஆளு நான் உன் வெரல தொட்டு பாக்கட்டுமான்னு அழுதுகிட்டே கேட்டானாமே?

ரோடு மொனைக்கு போனா ஸ்டீபன் ஒரு பைக்குல எதிர வர்றார். நான் சிரிக்கலாமான்னு யோசிச்சு அழுவறா மாதிரி ஆயிடவே சட்டுன்னு போவ பாத்தேன்.



"போறியா, போ"

"என்னன்னு சொல்லுங்க"

நீ நல்ல பொண்ணு, எனக்கு தெரியும். என்ன மாதிரி உனக்கும் ஆச இருக்காதா?. ஆனா ரெண்டு பேருக்கும் நம்ம வீடு ராசி இல்ல" 

" .........  "

"வர்ற திங்ககெழம லீவு போட்டு வெளிய போலாம்"

" ................"

"திங்ககெழம வரல வச்சுக்க, அத்தோட நான் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன்"

அதுக்கு மேல நான் தான் என்ன பண்ண முடியும்?

நேத்து ஞாயித்து கெழம பூரா இருப்பே கொள்ளல. வழக்கமா நடக்கற மாதிரியே அப்பா கறி எடுத்துகினு வந்தார். தலைல எண்ண தேச்சு விட்டுட்டு, கொஞ்சம் அம்மாவுக்கு கிச்சன்ல ஒத்தாசையா இருந்துதுட்டு மதியம் tv பாத்துகிட்டே, கறி சோற ஒரு கட்டு கட்டறது தான். ஆனா நேத்து முடியவே இல்ல. சாப்டறதெல்லாம் ரிட்டன் வந்துடறா மாதிரி ஒரு பீலிங். அதே மாதிரி நைட்டும் தூக்கம் இல்ல.

இப்ப முடிய கட்டி போட்டு பாதியா கெடக்கற கண்ணாடில மூஞ்சிய பாத்து பொட்டு வைக்கறப்ப அம்மா டிபன் பாக்ஸ கொண்டு வந்து தர்றா. அத ஹேண்ட் பேக்குக்குள்ள வைக்கறப்ப ஒரு நடுக்கம். சந்தேகமா நான் அம்மாவ ஒரு தடவ பாக்கறதுக்குள்ள அவ பாட்டுக்கு போய்கிட்டுருந்தா. இருந்தாலும் என் மனசு ஆறுதலுக்காக 'யம்மா, இந்த மாசம் சீட்டு பைசாவ நாலாம் தேதியே குடுத்துரலாம்' ன்னு சொல்லி வச்சேன். வெளிய வர்றப்ப அவுஸ் ஓனர் பொம்பள தான் உஷாரா கேட்டுச்சு. "என்னாடி, வேலைக்கு போறதுக்கு போன வாரம் எடுத்த டிரெஸ்ஸ போட்டுக்கிட்டு போற? வெளிய எங்காச்சும் போறீங்களா?"

சனியனுக்காக ஒரு சிரிப்ப காட்டிட்டு ஒரு வழியா படி எறங்கறப்ப ஏதோ டட்டடயின்னு மீயுசிக் கேட்ட மாதிரி இருந்திச்சு.

* * *

தரணி


அப்பா அம்மா ரெண்டு தங்கச்சிங்கன்னு மொத்த குடும்பமா தான் ஏரியாவுல இருக்கற முருகன் கோவிலுக்கு வந்தோம். அய்யரு  பாலாபிஷேகம் பண்ண பால அம்மா கிட்ட குடுத்தார். மூணு மாசத்துக்கு ஒரு தடவ முருகன குளிர பண்ணனும்ங்கறது எங்க குறிக்கோள். அப்பாவும் நானும் சாஷ்டாங்கமா விழுந்து கும்பிட்டதுக்கு பெறகு அத்தன பேரையும் கார்ல ஏத்தி வுட்டேன்.

டைம் என்ன?

ம், இன்னும் பத்து நிமிஷத்துல நான் அண்ணாநகர் ரவுண்டானால இருந்தாவணும். இன்னைக்கு பாக்டரிக்கு வர மாட்டேன்னு அப்பா கிட்ட நேத்தே சொல்லியாச்சு.

பைக்க எடுக்கறதுக்கு முன்னால பாக்கெட்டுல பணம் எவ்ளோ இருக்குன்னு பாத்துகிட்டேன். இவ்ளோ காசு இருக்குதுன்னு வெளிய காட்டிக்க முடியாது. முக்காவாசி அமௌன்ட்ட டிக்கெட் பாக்கெட்ல பதுக்கி வெச்சுகிட்டேன். கெளம்ப வேண்டியதுதான்.

பைக்குல போறப்ப ஒரே சிந்தனை. வளர்மதிய பிக்கப் பண்ணி கூட்டிகிட்டு வரேன்னு ஒரு வார்த்த சொன்னது உண்மைதான். ஆனா அத நான் சும்மா தான் சொன்னேன். ஏன்னா வளர்மதிய தேவைக்கு அதிகமாவே அனுபவிச்சுட்டேன். எள்ளுன்னா எண்ணையா நிக்கறதுக்கு அவ ரெடிதான். புருஷன்காரனுக்கு டேக்கா குடுத்துட்டு நான் எங்க கூப்பிட்டாலும் வந்துருவா. ஆனா சும்மா சும்மா அவ கிட்டேயே போறதுல என்ன இருக்கு. ஏதாவது குட்டி கத சொல்லி கூட்டிட்டு வர முடியலன்னு சொல்லிற வேண்டியது தான்.



இந்த ப்ரோக்ராம் பிக்சாயி நாலு நாள் ஆச்சுன்னு நெனைக்கறேன். போலிஸ் கோட்டர்சாண்ட மொத்த கும்பலும் உட்கார்ந்து தண்ணி போட்டுகிட்டிருந்தோம். போன கத, வந்த கத, சினிமா கதைன்னு நெறைய பேசி லாஸ்டா பெரிய தம்மு அடிக்க ஆரம்பிச்ச பெறகு ஒவ்வொருத்தனா மயக்கத்தோட கெளம்பி போனானுங்க.  கடைசியா மிஞ்சினது நானும் அவனும் தான். வளர்மதி யாருன்னு தெரியாட்டாலும் அப்பப்ப விசாரிக்கறது அவன் வேல. நானும் கொஞ்சம் ஓவராவே அளந்து விடுவேன். அப்டியே செவந்து போய் தலையாட்டிகிட்டு இருந்தவன பாக்க பாக்க நான் பாட்டுக்கு நாங்க ரெண்டு பேரும் எந்த மாதிரியெல்லாம் சர்க்கஸ் பண்ணி இன்பத்தை அனுபவிப்போன்னு தொரட்டி போட்டுகிட்ருந்தேன். பயலுக்கு கடசியா ஒண்ணும் முடியல.

ஏதாவது எட வசதி பண்ணி தர முடியுமான்னு கெஞ்ச ஆரம்பிச்சான்.

"ஏய், மொதல்ல பிகரு யாருன்னு சொல்லு" ரொம்ப நேரத்துக்கு அப்புறம் தான் அது விட்டாண்ட இருக்கற பொண்ணுன்னு சொன்னான்.

"என்ன வயசு இருக்கும்?"

"16 , 17 , 18  அதிகமா போனா பத்தொம்பது. அதுக்கு மேல இருக்காது"

எனக்கு அந்த போதைலயும் நச்சுக்கா ன்னு வந்துச்சு. வெட குட்டி தான் அப்ப. கன்னி கழிக்க போறானா?. கொல்லி மலைல ஒரு சித்தரு - இல்ல அவன் சித்தரா - ஒரு பரதேசின்னு வச்சுக்கலாம். வெட குட்டிங்கள பத்தி பக்காவா ஒரு மேட்டர் சொன்னது ஞாபகம் வந்துச்சு.

கடுப்புல கெளம்ப பாத்தாக்கா ரொம்பவே கெஞ்ச ஆரம்பிச்சான்.

"மச்சான், நான் என் வீட்டாண்ட சிச்சுவேஷன்க்கு ஏத்தா மாதிரி தோது பண்ணிப்பேன். நீ அவ கூட அங்க வர முடியாதுடா" என்று யோசித்துவிட்டு " திருத்தணியில நெறைய லாட்ஜ் இருக்கு, கெளம்பி போயிருவோமா?" ன்னேன்.

அவன் யோசனை பண்ணும் போதே "நீ பிரகாஷ் பைக்க வாங்கிக்கோ. நான் என் பைக்க எடுத்துட்டு வரேன். அவ வருவாளா?"

அவன் பறுபடி யோசனை பண்ணிகிட்ருக்க, "நீ உன் பைக்குல அவள ஏத்திக்கோ. நான் என் பைக்குல வளர்மதிய உட்கார வச்சினு வரேன்"

அதுக்கு அப்புறம் கட கடன்னு ஸ்கெட்ச் ஓடிச்சு. எப்பவும் பண விஷயத்துல கறாரா இருக்கணும். எங்க தாத்தா, அப்பா,  இப்ப நான் எல்லாருமே அப்படி தான். எதையுமே ப்ளான் பண்ணி பக்காவா செய்யறது. பத்து பைசா வெரயமாவாம பாத்துக்கறது. கடசியா ஒரு அமௌன்ட்ட  சமாளிச்சு கொண்டு வர்றதா அவன் ஒப்புக்கிட்டான்.

ரவுண்டானா பக்கத்துல வந்த உடனே ஸ்டீபன் கொழம்பி, "என்னடா, வளர்மதி எங்க" ன்னு அவசரப்பட்டான்.

நான் சிரிச்சேன். ஏன்னா ஒரு கதயயே சொல்லி ஆவணுமே " அது சின்ன பிராப்ளம் மச்சான். அவ புருஷனுக்கு தம்பி ஒர்த்தன் ராணிப்பேட்டைல இருக்கான். அந்த நாயோட பொண்டாட்டிக்கு காலைல தான் டெலிவரியாயிட்டுருக்கு. இவ அவங்களுக்கு தொணையா இருக்க நேத்து நைட்டே கெளம்பி போயிட்டிருக்கா. " ன்னு சொல்லி முடிச்ச கையோட " அந்த பொண்ணு பேரு என்ன சொன்ன, ஜமுனா, ஆங், அவ வரல?" ன்னு கேட்டேன்.




என் படபடப்பு அவனுக்கு பிடிக்கலன்னு நல்லா தெரியுது. கொஞ்சம் ராங்கித்தனமா " அவ ஆர்ச்சாண்ட வெயிட் பண்ணுவா. நீ கெளம்பு. திருத்தணி போறதுக்கு எனக்கு வழி தெரியும்" ன்னான்.

"என்னடா, இப்டி வுட்டு போற?"

"அப்புறம்? உன்ன கூட்டினு போயி நான் என்னா பண்றது?  நாங்க லாட்ஜ காலி பண்ணிட்டு வர்ற வர நீ கோயில்ல இருக்கிறியா?"

"மச்சான், என்ன சொல்ற மச்சான்?"

"ஏ, வேற என்னடா சொல்லுவாங்க. போ. போ. நான் கெளம்பறேன்"

அவன் வண்டியை ஸ்டாட் பண்ணிட்டு போவ, ஒரு செகண்டு நின்னுட்டு நானும் வண்டிய எடுத்தேன். அவன் பின்னாலயே போனேன். ஸ்பீடா எல்லாம் ஓட்டி டிமிக்கி குடுக்க பாத்தான். நான் வுடல. அப்புறம் என் பக்கமே திரும்பாம கடசியா அந்த பொண்ணு இருக்கற எடத்துக்கு போயிட்டான். நான் தூரமாவே நின்னேன்.

என்ன கவனிக்காத மாதிரி அவள ஏத்திகிட்டு வண்டி கெளம்ப, நானும் பின்னாலயே போனேன். ஒரு கட்டத்துல வண்டிய நிறுத்திட்டு, அவ கிட்ட எதையோ சொல்லிட்டு ஆத்தர அத்தரமா என் பக்கத்துல வந்தான்.

"டேய், மயிராண்டி, அறிவில்ல உனக்கு? எதுக்கு நாய் மாதிரி பின்னால வந்துனு இருக்கற நீ?"

"மச்சான், ரெண்டு பேரும் சேந்து தானே ப்ரோக்ராம் போட்டோம்?"

"அதுக்கு? ங்கோத்தா, என்னா சொல்ல வரே நீ ? அவ என்ன லவ் பண்ற பொண்ணுடா!. நானும் அவள லவ் பண்றேன்!. காதல் புனிதமானதுன்னு தெரியாதா உனக்கு?"

"டேய் அதெல்லாம் விட்றா. எப்படியும் கோவில் பக்கத்துல இருந்து நான் ஒரு மேட்டர புடிச்சிடறேன்."

"கெடைக்குமா ?"

"ஏன் கெடைக்காது ?"

"ஜமுனா யாருன்னு கேப்பாளே ?'

"அப்படியா?"

"சரி விடு. ஏதாவது சொல்லி நான் அவள சரிக்கட்டிக்கறேன். டேய் தரணி!"

"என்ன ?"

"என் கூட வர்றவ ஒரு குடும்பத்து பொண்ணு. வற்புறுத்தி கெஞ்சி கூத்தாடி அப்றம் அவ அர கொற மனசோட தான் என் கூட வந்திருக்கா. மச்சான் காண்டு பண்ணிடாதடா. என் லவ்வ ஸ்பாயில் பண்ணிடாத, புரியுதா?"

டேய், நானும் ஒரு குடுபத்துல இருந்து வந்தவன் தாண்டா. எங்களுக்கெல்லாம் அக்கா தங்கச்சிங்க இல்லையா?"

 * * *


ஜமுனா ராணி


இது ஆந்திராவா இருக்குமா ? அது எப்டி?. திருத்தணிக்கு போற வழில ஆந்திரா எப்படி வரும்? வெயிலு ரொம்ப பச்சையா அடிச்சிட்டிருந்துச்சு. அங்க ஒரு ஒடைஞ்ச கோபுரம். மதில் சொவர சுத்தி ஒரே பொதரு. கண்ணு மண்ணு இல்லாத ஸ்பீடுல வண்டிங்க போவுது. T கடையில இருக்கவங்க ஒரு மாதிரி தான் பாக்கறாங்கன்னு நல்லா புரியுது.

ஸ்டீபனுக்கு  என்ன ஆச்சு . ரொம்ப வெறச்சுகிட்டு  சிடுசிடுப்பா  இருந்தாரு . "உனக்கும் T சொல்லட்டா?" ன்னு கேட்டதே வேண்டா வெறுப்பா இருந்திச்சு.

நான் சரின்னு சொல்றதுக்குள்ள தூரமா போயி ஒண்ணுக்கு அடிச்சுட்டு வந்த அவரோட பிரெண்டு " T ஆவாதுன்னா காபி சாப்புடும்மா, இல்லன்னா சைனா T சொல்றேன்" ன்னார்.

"டேய், நீ கொஞ்சம் சும்மா இர்றா. உனக்கு நான் T  யே சொல்றன்".

"அது வந்து... " ன்னு ஸ்டீபன் காதுல "பாத்ரூம் போவணும்" ன்னு இழுத்தப்ப அவுருக்கு கொஞ்சம் ஷாக்கு. அப்டி இப்டி பாத்துட்டு தலைய சொறிஞ்சார். எப்டியும் இதுக்கு மேல கூட வண்டில உட்கார்ந்து கிட்டு தான் போவணும். அடிவயிறு பேஜாரா இருந்துச்சு. எங்க முடியாதுன்னு ஆயிடுமோன்னு நான் கொஞ்சம் பயந்துட்டேன் போல.

"என்னம்மா பிரச்சனை?" பிரெண்ட் கேட்டார். அதுக்குள்ளே "இன்னும் கொஞ்ச தூரம் தான். அங்க ரூம்ல பாத்ரூம் இருக்கும்." ஸ்டீபன் பல்ல கடிச்சாரு. பிரெண்ட் அப்டிக்கா போயிட்டார். இவரு தெக்கால போயி எதுவும் சரியில்லங்கறா மாதிரி வர்றதுக்குள்ள பிரெண்ட் திரும்பி வந்து "கடக்காரன் கிட்ட பேசிட்டம்மா ஜமுனா. பின்னால சைடு ஒரு பாத்ரூம் இருக்காம், வா !" ன்னார். நான் முழிச்சேன் ஸ்டீபன பாத்து.




அவர் ஏதோ சொல்றதுக்குள்ள " நீ அந்த கடைல ரெண்டு தம்மை வாங்கிகிட்டு மூணு  டீ சொல்லு. வாமா ஜமுனா, டேய் பொம்பளைங்க செரமத்த புரிஞ்சிக்கமாட்டியா?" ன்னும் போதே ஸ்டீபன் போய்ட்டார்.

நான் பிரெண்டு கூட போனேன்.

அந்த ஊர்கார பொம்பள ஒருத்தி கிட்ட என்ன கொண்டு போய் விட, அந்த அம்மா காட்ன எடத்துக்கு போய் நான் திருப்தியா வந்தப்ப பிரெண்டு எனக்காக இன்னும் வெய்ட் பண்ணிக்கிட்ருந்தார்.

"ஓகேவாம்மா?"

"ஓகே சார்"

"ஐய்யய்ய, நான் சார் எல்லாம் கெடையாது. என் பேரு தரணி. "

ரெண்டு பேரும் வந்து சேந்தப்ப ஸ்டீபன் காட்டுத்தனமா சிகரெட் பொகைய மூக்குலயும், வாயிலயும் உட்டாரு. நான் அவுரு கண்ண பாக்க  அவுரு வேற பக்கம் திரும்பிகிட்டாரு. தரணி ஜென்டிலா சிகரெட்ட வாங்கிட்டு, "நான் அந்த பக்கம் போய் புடிச்சிட்டு வந்திடறன். ஏன்னா நான் உடற பொகைய நீ சுவாசிக்க வேணாம்." ன்னு போனபெறகு ஸ்டீபன் என்ன பாத்தார்.

நான் அவுர பாத்தேன்.

"அந்த நாய்க்கு பொறந்தவன பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?"

"என்ன சொல்றீங்க ஸ்டீபன்?"

'என்னவோ கொஞ்சறான்!. நீயும் அப்படியே அவனுக்காக சாவற?"

"சீ, சீ, என்ன ஸ்டீபன், என்ன பேச்சி பேசறீங்க நீங்க?"

"ஆங்,  லவடா  பேச்ச பேசறேன்."

"இங்க பாருங்க அவர பாத்தாலே எனக்கு புடிக்கல." ஸ்டீபன் என்னையே பாக்க "இப்படியா ஒர்த்தர் குண்டா, தடியா இருப்பாங்க ? அவுரு நடக்கறதே ஆணக்குட்டி நடக்ற மாதிரி இருக்கு." ன்னு சொன்னேன். ஸ்டீபன் கண்ணு இன்னும் விரியவே எனக்கு ரொம்ப சந்தோஷம். "இவரையெல்லாம் ஏதாவது ஒரு பொண்ணு கட்டிக்குவாளா?"

நம்பலாமான்னு ஒரு பார்வ.




"கொஞ்சம் உற்சாகம் ஜாஸ்தியாய் போய், "ரொம்ப அசிங்கமா இருக்காருல்ல?" ன்னு கூட சொல்லிவச்சிட்டேன். ஸ்டீபன் தரணி இருக்கிற எடத்துக்கு சந்தோஷமா போவவே, ஸ்டீபன் முதுக பாக்கறா மாதிரி அவர பாத்தேன். ஐயோ, அவரு என்னையே தான் பாத்துகிட்டு இருந்திருக்காரா?

* * *


ஸ்டீபன்

மலைமேல இருக்கிற வேல் எல்லாம் தெரியுது. அங்கதான் இருந்திச்சி அந்த லாட்ஜ். ரெண்டு ரூம் போட்டோம். பாவம் ஜமுனா ராணி கொஞ்சம் பயந்து போய் நின்னுட்டுருந்தா. அவள சமாதானமா தட்டி குடுத்து ரூம் உள்ள உட்டுட்டு நான் வெளிய வந்து தரணிகிட்ட "போ" ன்னேன்.

"எங்க?"

"பிகர் கெடைக்குதா பார்ரா."

"கெடைக்கும்ங்கற ?"

"நீ தான கெடைக்கும்ன்னே?"

அவன் என்னை பாக்க, நான் அவனையே பாக்க சட்டுன்னு போனான்.

நான் பாத்துகிட்டு நிக்க, திரும்பி பாத்து, " கெடச்சா பாப்பேன் மச்சான், இல்லன்னா ஷேர் தான்" ன்னு சொல்லிட்டு மறைஞ்சான். எனக்கு தகதகன்னு எரிஞ்சுது. எதுக்கு இவள கூட்டிகிட்டு வந்தேன். இவன எப்படி இதுக்கு நடுல இழுத்து விட்டேன். எல்லாத்தையும் இதுக்கு மேல கோர்வையா யோசிக்க முடியாதுன்னு புரிஞ்சுது. லாட்ஜ் ஆளு வேற என்ன மேல இருந்து கீழ வரைக்கும் பாத்துட்டு வெளிய போனான். என்ன நடந்தாலும் சரி, ஜமுனா ராணி என் பிகர். ஏன், என் லவ்வர். ஒருவேள பிற்காலத்துல  எனக்கு மனசு இருந்தா நான் அவள கல்யாணம் கூட பண்ணிக்கிடுவேன். என் உரிமை. என் ஜமுனா. எவனும் இதுக்கு நடுவுல வரவே முடியாது.



என்ன தான் டென்ஷனா இருந்தாலும் ஒரு பொண்ணு ஒடம்ப தொட்ட பெறகு நடக்கறதே வேற. இத்தனைக்கும் ஜமுனா ராணி, "தரணி அந்த ரூம்ல இருக்காரா" ன்னு கேட்டா. "அவன் அத்த பொண்ண கூட்டிட்டு வர போயிருக்கான்" ன்னு கசக்க ஆரம்பிச்சேன். அவ வெக்கபடறாளா , வா வான்னு இழுத்துக்கிறாளா. எதையுமே நான் கண்டுக்கல. சர சரன்னு பத்த வச்ச மாதிரி நடந்து முடிஞ்சது காரியம். சும்மா அப்படியே சாதாரணமா பாக்கறதுக்கு இவ சாதாரணமா தான் தெரிவா. ஆனா எங்கயோ திருச்சி பக்கம் போய் புது தண்ணி வந்த காவேரில விழுந்து நீச்சலடிச்சா மாதிரி இருந்திச்சி எனக்கு. அவ என்னையே பாத்துகிட்டு இருக்க நான் டிரெஸ்ஸ போட்டுக்கிட்டு எதோ நெனைப்புல கதவ தொறந்தேன்.

அத இன்னும் தள்ளிகிட்டு உள்ள வந்துட்டான் தரணி.

டேய்ன்னு நான் கத்தும் போதே ஜமுனா பெட்ஷிட்டுக்குள்ள உட்காந்துட்டா.

"ஏ, மரியாதையா வெளிய போடா!"

"கத்தாத மச்சான். வாசல்ல எதுக்கோ நாலு பீசிங்க  நின்னுகிட்டிருந்தாங்க. எல்லா எடத்துலயும் ரெய்டாண்டா!. ஒருத்தி கூட மாட்டல"

"நீ வெளிய போறியா இல்லையா""

"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு மச்சான். ஜமுனா ராணிய வேணுன்னா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்."

"ஒத்தா, இது துரோகண்டா . இவள பாத்தா உனக்கு பரிதாபமா இல்லையா?. இந்த அநியாயத்துக்கு இவ ஒத்துக்குவாளா?"

"யம்மா, ஜமுனா!. ஆசப்பட்டுட்டேன் தாயி!. ப்ளீஸ் ஒரே ஒரு தடவ!"

"அவ கிட்ட ஏண்டா பேசற, நான் தான் சொல்றனே, வெளிய போ."

"யம்மா ஜமுனா, நான் போணுமா?"

"போவ சொல்லு ஜமுனா. மரியாதையா வெளிய போவ சொல்லு"




அப்ப தான் இடி இடிச்சது. பூகம்பம் எங்க? அய்யய்யோ நான் தான் அப்படி ஆடிப் போயிட்டானா. அவ என்ன சொன்னா, பாவம்ன்னா? பாவம்ன்னா சொன்னா? யாரு. இந்த தேவிடியா பையனா பாவம்? அடிப்பாவி. எப்பிடி நான் ரோட்டுக்கு வந்தேன். எப்பிடி ரெண்டு பெக்கா கோட்டர உள்ள தள்ளினேன்?. எதுவுமே ஞாபகம் இல்ல. அந்த பொண்ண சீல் ஒடைச்சுட்டதுக்கு பாவமன்னிப்பே கேட்க மாட்டேன். எதுக்கு?. எல்லாம் பொய்!. ஜீசஸ் என்ன சொன்னார்ன்னு யாருக்காவது தெரியுமா? அவர் சொன்னதுதான் பைபிள்ல இருக்கா? பைபிள்ல இருக்கிறது பூரா போப்புக்கு தெரியுமா? போப்புக்கு தெரிஞ்சதெல்லாம் நம்ம ஏரியா சர்ச்சப்பாக்கு தெரியுமா?

அட சீ , நான் என்ன யோசிச்சிட்டுருக்கேன். இப்ப இதுவா பிரச்சின. ஓத்தா, ஒரு கத்திய வாங்கிட்டு போய் கதவ ஒடச்சா என்ன.

கொஞ்ச நேரம் கத்தி கடைய தேடி நடந்ததுல மப்பு கம்மியாயி வேர்த்து விட்ருச்சி. எங்கியாவது நிழல் கெடச்சா படுக்கலாமின்னு ஐடியா வந்துடவே மெதுவா வந்தேன். தரணி வெளியதான் தம் அடிச்சிகிட்டு நின்னான்.

"சாரி மச்சான். "

"நீ வழிய விடு"

"நான் பண்ணது தப்புதான். காம வெறி கண்ண மறச்சிடுச்சி."

"டேய், வழிய விடுறா."

"மன்னிச்சிட்டேன்னு நீ ஒரு வார்த்த சொன்னாதான் என் மனசு ஆறுதல் அடையும். எல்லா ஷிப்ப விட பெரிய ஷிப்பு,  பிரெண்ட்ஷிப்புடா."

அவன புடிச்சி தள்ளி வுட்டுட்டு உள்ள வந்தா ரொம்ப சாதாரணமா அவ தல வாரிகிட்டிருந்தா. அடிக்கலாமான்னு யோசிச்சிகிட்டே அப்படியே கட்டில்ல படுத்துட்டேன். எலி மாதிரி உள்ள வந்து தரணி ஒரு ஓரமா நின்னுக்கிட்டான். நான் கண்ண மூடிகிட்டேன்.

"யம்மா, ஜமுனா. எங்கயோ நடந்து போயிட்டு வந்ததால ஸ்டீபனுக்கு கால் வலிக்குதுன்னு நெனைக்கறேன். நீ வேணுமின்னா கொஞ்சம் கால அமுக்கி விடேன்."

மூச்சே விடாத மாதிரி நான் அடக்கிகிட்டு படுத்து கிடக்க, அவ என் கால அமுக்க ஆரம்பிச்சா பாருங்க, டபக்கான்னு எழுந்து உட்கார்ந்து பயங்கரமா கண்ண விரிச்சி சிட்டிக போட்டேன். என்ன பேசறதுன்னே வரல. போயிருன்னு மட்டும் சொன்னேன். அப்படியே கவுந்து படுத்துகிட்டேன். அவள நான் சரி காட்டு காட்டியிருக்கலாம். அத பண்ணாம விட்டதுக்கு என்ன காரணம். ஆங், அதான். அவ மேல கைய வச்சிருந்தா தரணி என்ன போட்டு பின்னி எடுத்துருவான். ச்சே, ரொம்ப அசிங்கமா இருக்கே எல்லாம்.



நான் பாதி தூக்கத்துக்கு போறப்ப தரணி ஜமுனா ராணியோட வீடு வாசல் கொலம் கோத்ரம் பத்தியெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டுருந்தான். அவ வீட்டு பக்கத்துல இருக்கற தளபதி நாராயணசாமிய எனக்கு தெரியுமின்னு அவன் சொல்லிகிட்டு இருந்தப்ப யாரோ கதவ தட்னாங்க.

                                                                                                                               


                                                                                                                      தொடரும்....