Friday, June 29, 2012
நீங்கள்
விளிம்பில் தானே நிற்கிறீர்கள்
நீங்கள் என்றால் அது நானில்லை
உங்களுக்குள் வெள்ளம் முட்டும்போது
நான் கரையுடைவதில்லை
எனக்கு கிடைக்கும் பருக்கைகளை
நீங்கள் கணக்கிடுவதுண்டா
என்று திடுக்கிடுவதும்
வழக்கம்
என்றாலும்
உங்களுக்கு உதவி செய்ய
அவா.
அல்லது
ஒழித்து கட்ட
வெறி
ஏனென்றால்
விளிம்பில் தானே நிற்கிறீர்கள்
பத்தாததுக்கு
விறைத்துக் கொண்டும் நிற்கிறீர்கள்
Thursday, June 28, 2012
நீயும் நானும் துண்டு வானங்களை பார்த்து
கம்பிகளை கடித்து கலகம் பண்ணி வைக்கிறோம்
தாண்டிக் குதிக்க முடியாத சட்டகங்கள் பற்றி
நமக்கு தெரியாதா என்ன
என்றாலும்
சொல்லில் சிக்கிய பூ ஜடமாயிருந்தும்
சொல்ல தூண்டும் ஒரு சின்ன புள்ளியை
நிறைத்திருக்கிறது
காயம் பட்ட புழுவின் வலி
ஏன் நான் உன் மார்பில் புதையக் கூடாது?
Saturday, June 23, 2012
உணர்வு..!
ஒரு கோப்பையில் கரைந்து போகுமென்றால்
நினைவுகள் இரக்கமுள்ளவை
லஹரி நெம்புமொருஉறக்கத்தில் மறந்து போகுமென்றால்
அவை அடக்கமுள்ளவை
எரியும் குடல்களின் இழுவையில்
செரித்து கழிவாகுமென்றால்
சுலபமானவை
ஹே......
அப்படியா
பசிக்கு உணவு
கால்களுக்கு பக்கத்தில்
இருக்கை
எப்போதும்
தலை வருடி தந்து
நான் என்னையே வளர்த்துக் கொண்டது
அல்லவா?
உன்னை துரத்தினால்
நான் காணாமற் போவேன்......
Friday, June 22, 2012
இன்று வானிலை எப்படி
காலையில் கிடைத்தது பரோட்டா தான்
வயிறு சரியில்லை
வீடு கிடைக்குமா
ராசியில் கோளாறு
கமலா சௌக்கியமா
விமலா சௌக்கியமா
இவங்க ரெண்டு பேர தெரியலேன்னா
அமலா சௌக்கியமா
ட்வல் பி வராது
இருவத்து மூணு சீ போவாது
மஞ்சு வழுக்கி விழுந்தது
தீம் பார்க்குல தானே
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ஒண்ணும் ஒண்ணும்
பதினொண்ணு
பதிநோண்ணும் பதிநோண்ணும்
ஆயிரத்தி நூத்தி பதினொண்ணா
போயிட்டு வரேன்
வர்ற அப்பவாவது சொல்ல முடியுமா
பாக்கணும்
காலையில் கிடைத்தது பரோட்டா தான்
வயிறு சரியில்லை
வீடு கிடைக்குமா
ராசியில் கோளாறு
கமலா சௌக்கியமா
விமலா சௌக்கியமா
இவங்க ரெண்டு பேர தெரியலேன்னா
அமலா சௌக்கியமா
ட்வல் பி வராது
இருவத்து மூணு சீ போவாது
மஞ்சு வழுக்கி விழுந்தது
தீம் பார்க்குல தானே
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ஒண்ணும் ஒண்ணும்
பதினொண்ணு
பதிநோண்ணும் பதிநோண்ணும்
ஆயிரத்தி நூத்தி பதினொண்ணா
போயிட்டு வரேன்
வர்ற அப்பவாவது சொல்ல முடியுமா
பாக்கணும்
Thursday, June 21, 2012
Sunday, June 17, 2012
திரைக்கதை
புழங்கு மொழியில்
சிறிய பொறி தான்
அது
பற்றியெரியும் வனமென
துவங்கும்
தானே தன்னை கைவிட்ட முட்டுசந்தில்
பிரும்மாண்டமான சாலைகளை பரப்பி பார்த்து
உடல் குறுக்கி நடக்கக்கூடும்
தேய்மானம் போன
ஒற்றையடிப்பாதையில்
யோசித்து பாரேன்
இப்போது துடித்து தெறித்து
யாருமறியா இருளில் பறிக்கிற
சினை முட்டையை
கருவில் இருந்துகொண்டு
கதையை
கதையில் இருந்து கொண்டு
முகங்களை
முகங்களில் இருந்துகொண்டு
வாழ்வை அறி
சொல்.
தந்தையர் தினம் என்று ஒரு தினமாம்
கேட்டுக் கொள்
அதாகப்பட்டது உனக்கென்று
ஒரு நாள்
நீ விதைத்து முளைக்க வைத்த ஓன்று
பசியும் தாகமுமாய்
உனது
குருதியை குடித்து
தசையை தின்று முடிக்கிறது அல்லவா,
தீர்க்க முடியாத அந்த
குற்றவுணர்ச்சி
தானும் விதைக்க வேண்டி இருக்கிறபடியால்
அண்ணாந்து வானில் நிலை கொள்ள வேண்டிய
பீதி
அர்த்தமறியா வாழ்வின் அநீதி முன்
மண்டியிடுகிற
மலடு
ம்ம்ம் என்ன சொல்லி என்ன
இனிமேல் தினங்கள் இல்லாமல் நம்மை நாம்
ஏமாற்றி கொள்ள முடியாது.
Wednesday, June 13, 2012
புலன்களை
திற
பொசிஷன்
எடு
டைலாக்
மனப்பாடமா
ஒவ்வொரு பிரேமும் பைசாவாவற
இந்த பிரம்மாண்டத்தில்
சகநடிகர்களின் பாத்திரங்களை
முறி
மேடைகள் முக்கியம்
கைதட்டல்கள் முக்கியம்
இருக்கைகளை பிடுங்க
இருள் சந்துகளுக்குள்
ஆத்மாவை
கூட்டிக்கொடு
விரட்டி விரட்டி விரட்டி
எங்கும் மிச்சம் வைத்து விடாமல்
துரத்தி அடி
உன்னை
பீடத்தில் இருந்து
பிணமாய் சிரித்திருந்து
இன்னொரு முறை
சாவு
இப்ப
ஒரு வழியா
ஸ்க்ரீன்ல
தி எண்ட் ...!
நாடு சுற்றி நகர் சுற்றி
நகரின் சந்து பொந்துகள்
எல்லாம் சுற்றி
மீன் விழி மான் நடை
தேன் மொழி
சகலம் பயின்று சலித்து
நட்டுகுத்தின கண்களுக்கு
வெற்று வான்
தூக்கம் வருகிறதா
தூங்கிக் கொள்கிறாயா
யாரோ யாரையோ
கேட்கிறார்கள்
என்னை தான் என்றால்
எப்படி கண்டறியலாம்
லட்சம் அடிதடியில்
இவ்வாஞ்சையின்
விளியை
முதலில் இருந்து துவங்கு
என்கிறான் .
Tuesday, June 12, 2012
விசேஷம் எதுவும் இல்லை
ஒரு காவியத்திலும்
நமக்கு கிடையாது
இடம்
சந்தடி சாக்கில்
யாருக்காவது சொன்னால்
அவர்களுக்கு கொட்டாவி வரும்
ஏய்ய்
உலகத்துக்கு ஆயிரம் கவலை தெரியுமா
இருந்தாலும் ஒரு விஷயம்,
இந்த இரவில் இந்த தனிமையில்
பிராணன் கனக்கிற
இந்த தீ நொடியில்
நீயும் இந்த விண்மீனை பார்க்கிறாய் என்றால்
சொல்லு இவ்வாழ்வை விட
வேறென்ன விசேஷம்?
ஒரு காவியத்திலும்
நமக்கு கிடையாது
இடம்
சந்தடி சாக்கில்
யாருக்காவது சொன்னால்
அவர்களுக்கு கொட்டாவி வரும்
ஏய்ய்
உலகத்துக்கு ஆயிரம் கவலை தெரியுமா
இருந்தாலும் ஒரு விஷயம்,
இந்த இரவில் இந்த தனிமையில்
பிராணன் கனக்கிற
இந்த தீ நொடியில்
நீயும் இந்த விண்மீனை பார்க்கிறாய் என்றால்
சொல்லு இவ்வாழ்வை விட
வேறென்ன விசேஷம்?
தீராத விளையாட்டு பிள்ளைகள்
நாம்
தீர்வதில்லை அவா
திசைகள் நான்கும்
பற்றி எரிந்தால்
கூட
தீமையை தித்திப்பாய்
சப்பு கொட்டுகிறது
வாழ்வின்
நாவு
குழந்தைகளும்
பெண்களும்
சாகாத தினசரியில்
கொட்டாவி முட்டுகிறது
குத்துப்பட்ட நண்பனின்
அவல முகமோ
கலைக்கப்படுகிற மனைவியின் கண்ணீரோ
வேணும்
அந்தமற்ற பெரு வெளியில்
கடைவிரித்த நறுவிருந்தாய்
இன சாவு மத சாவு
போதாது என்று இன்னும் எவ்வளவு
போர்ப்பரணி
வெளிப்படாத மிருகம்
விழுங்கும் குருதியெல்லாம்
விளையாட்டுப் பிள்ளைகளின்
ஊட்டமென்றான பின்
லூசு
காத்துல இருந்து
எப்படிடா
மலர பறிப்பே
அதுவும் தேவ மலர ?
Sunday, June 10, 2012
சிரஞ்சீவி சார்.....
எப்படி இருக்கிறாய்
என்றா கேட்டாய்
இப்போது இருக்கிறேன் என்பது
எப்படி இருக்கிறேன் என்பதை விடவும் முக்கியம்
கல்வாரி மலையெங்கும்
கருகி இருள் படர்ந்து
உறுதியின் கடைசி விண்மீன்
அணையும்போது
என், தேவனே ஏன் எம்மை கைவிட்டீர் என
காற்றிலொரு முணுமுணுப்பு கரைந்திற்று
அல்லவா
அப்போது கூட இருந்திருப்பேன் என தோன்றுகிறது.
ஆயிரம் வருஷங்களுக்கு அப்புறமும்
இருப்பேன்
எப்போதும் இருக்கிறவனிடம்
எப்படி இருக்கிறாய் என்று மட்டும்
கேட்டு விடக்கூடாது.
Saturday, June 9, 2012
நசித்து போனதாய்
அடங்கிய எந்தை
கண்ணுக்குள் வைத்து
காக்க ஆகாமல்
பிதுங்கிய அம்மா
செத்தையும் சொத்தையுமாய்
பத்தாயிரம் கூட்டம்
எங்கோ ஹிமாலய அடிவாரத்தில்
பெயரறியா பூவாயிருந்து
குளிரில் நீராடி
ஏதோ சாலை விபச்சாரியின்
யோனியாயிருந்து
வெள்ளைப்படுகிறேன்
ஏய், வெண்ண
உனக்கு தெரியுமா
இனி என்றோ பிறக்க போகிற
குழந்தையின் வீரிடலில் இருக்கும்
என் பசி
Thursday, June 7, 2012
comes with the wind
எத்தனை மகத்தானவள்
நீ
என்பதை உனக்கே
சொல்ல வேணும்
சிருஷ்டிக்க போகிற
காவியம் உன்னை பற்றியது
என்பதையும்
அலைகள் வந்து மோத
துல்லிய நிலவொளியில்
ஜென்னியை பற்றி
சலவை கல்லில் மினுங்கும்
ஷாஜகானின்
கண்ணீர் துளிகள்
பற்றி
அன்னா தஸ்தவேஸ்கியின்
காதல் பற்றி
சாலமன் மீன்களை பற்றி
இன்னும்! இன்னும்!
தொட்டியில் விட்ட
ரெட்டை மீன்களாட்டம்
மனசு ரெண்டும்
மீட் ஆகி விட்டால்
ஓரிரு முத்தமோ
கொஞ்சம் கண்ணீரோ
அதற்கு பின்னர்
வேறு வழியின்றி
கேட்க வேண்டியிருக்கிறது
நரைத்த ஜீன்ஸில் ,
மொட்டையடித்துக்கொண்டு,
சிகப்பாய்
யார் அவன்?
நற நற நற நற நற
Tuesday, June 5, 2012
Monday, June 4, 2012
நீ எப்படி சகிக்கிறாய் என்பதை
சொல்லி கொடு
வசந்தங்களும்
இலையுதிர் காலங்களும் கடக்க
நூற்றாண்டுகள் தாண்டி நீ
எப்படி இப்படி காத்து கொண்டிருக்கிறாய்
மனுஷ்ய இரைச்சல்களும் , தொழுகைகளும்,
கண்மூடிதனங்களும் முடிந்து
நீ நிசப்தயாய் ஆகும்போது
ஜீவவெறியுடன் முணுமுணுக்கிற கானகத்தை
அளவற்ற காதலுடன் நுரைத்து ததும்பி ஓடும் பம்பை ஆற்றின் சலசலப்பை
புணரும் பட்சிகளின் சிறகோசைகளை
எப்படி சகிக்கிறாய்
மேனியை கருங்கல்லாக்கி உறைந்த போதும்
பவுர்ணமிக்கால நிலவொளி ஒரு மயிலிறகாகி வருடும்போது
சிலிர்த்துக்கொள்வது இல்லையா, குறைந்தபட்ஷம்
மனசு
இளைப்பாறுவதற்கு ஒரு நிழல் சோலை வளர்த்து
நெஞ்சுக்குள் வைத்து காப்பாற்றி
ஓய்வெடுக்க வராத ஒரு ஆளின் நிழலுக்கு காத்திருக்கும் போது
உன் யவ்வனத்தை அரித்துக்கொண்டிருக்கிறது
காலம்
தேங்காய் உருட்டி
சாஷ்டாங்கமாய் விழுந்து எழுந்து
இயலாமையை தலையில் சுமந்து
திரும்பி செல்கிறது மானிடம்
மனமெரிய ஒரு பாமரன் கேட்கிறேன்
எப்படி
எப்படி சகிப்பது எல்லாவற்றையும் என்று
சொல்லிக்கொடு
muthumai...
நான் ஒரு தீர்கதரிசி
வேண்டும் என்று போயிருந்தால்
இந்நேரம் நொறுங்கியிருப்பேன்
நான் ஒரு புத்திசாலி
இப்படித்தான் என்று தெரியாதிருந்தால்
இந்நேரம் என்னை
முடித்துக்கொண்டிருப்பேன்
நான் ஒரு அகங்காரி
மண்டியிட்டு கெஞ்சியிருந்தாலும்
கொடுக்கப்பட முடியாதவைகளை
பெற்றிருக்க முடியாது
இறுதியாக
நான் ஒரு தீவு
என்னில் ஒதுங்குபவர்களும்
தனியாக்கப்படுவார்கள்.
Saturday, June 2, 2012
எழுதப்பட்டிருந்ததா
இது முன்னரே
இக்கணம் கனவில்
உணரப்பட்டிருந்ததா
எந்த புள்ளியில்
துவங்கும் ஒரு
தினம்
எந்த தினத்தில்
நீ உன்னை
அறிந்தாய்
களிப்பில் மிதந்த போது
புதிரின் முதல் சொட்டாய்
காதலை சப்பு கொட்டிய போது
கண்ணீரில் பிசுபிசுத்த
யாரோ ஒருவனின்
கரங்களை பற்றும் போது
கடவுளில் வியக்கும் போது
திடுக்கிடுகிறோம்
யார் நமக்கு முன்
எல்லாம் தெரிந்து வந்து
நமக்குள்
இருந்து கொள்வது
ஏழு கடல்
ஏற முடியாத
எழுபது மலைகள் தாண்டி
எங்கள் உயிர்க்கிளி
கிறக்கத்தில்
இருப்பது எங்கே
உண்மை
வெறும் வார்த்தை இல்லை
இந்த கணத்தை இந்த கனவை
சிருஷ்டித்து
இதை நீ தான் எழுதி கொண்டு இருக்கிறாய்
எத்தனை அநீதி,
எம் வாழ்வை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.
Subscribe to:
Posts (Atom)