Wednesday, November 21, 2012



கத கேளு கத கேளு
கதையான கத கேளுன்னு
கல காட்டி கலர் காட்டி
காட்டாம நழுவுறான்
கத சொல்லி
காலத்துக்கும்
உப்பு கரிக்கிற சோத்த

எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் னா
முடியுது எல்லாம்.




சரி எனக்கு தெரியும்
இந்த திருவிழாவை பல தரம்
கடந்திருக்கிறேன்
சாட்டையடித்து குருதி காட்டி
கையேந்துவது
புதுசா
வேடிக்கை
காட்ட வருகிறவன் கதை
வேடிக்கையாய் அல்லாமல்
இருக்கலாமோ?
இருப்பினும்
யுகமாய் தொடர்வதால்
மூச்சு விட்டுக் கொள்ள
கொஞ்சம் டைம்
ப்ளீஸ்.