Monday, January 7, 2013
Sunday, January 6, 2013
ஆம்
இருக்கிறேன்
சடுதி சந்தடி சச்சரவு
நச்சரிப்பு
தெரியாதா, பற்றியெரியும்
வீட்டை அணைத்துக் கொண்டே
இருப்பதல்லவா
வாழ்வு
யார் வந்தார் யார் போனார்
எதற்கும் நேரமில்லை
கசப்பின் வெறுப்பு
சுற்றிச் சூழும் நச்சு வெளியில்
இந்த வாள் சுழற்றல்களுக்கிடையே
நீ ஏதாவது சொன்னாயா
கனவு போலிருக்கிறது ,
சொன்னாயா?
குருதி படியாதிருந்தால்
ஆத்மாவை எடுத்துக் கொண்டு
அப்புல்வெளிக்கு
வந்து சேருகிறேன்.
நீ எங்கிருந்து
மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறாய்?
Tuesday, January 1, 2013
Subscribe to:
Posts (Atom)