Monday, January 7, 2013

ஓன்று இரண்டாகி
இரண்டு இருபத்தி ரெண்டாகி
ஒரு மண்டலம் அமர்ந்து பேசியது
கண்ணீரை இழிவுபடுத்துவது
தானென்றால்
ஒரு நாள் அந்த உப்பு
ஒவ்வொரு நெஞ்சிலும் தனித் தனியே
கரிக்கும்.

ஐயோ, செல்வத்தை தேய்க்கும் படை
என்றல்லவா சொல்லியிருக்கிறான்?

Sunday, January 6, 2013




ஆம்

இருக்கிறேன்

சடுதி சந்தடி சச்சரவு
நச்சரிப்பு
தெரியாதா, பற்றியெரியும்
வீட்டை அணைத்துக் கொண்டே
இருப்பதல்லவா
வாழ்வு
யார் வந்தார் யார் போனார்
எதற்கும் நேரமில்லை
கசப்பின் வெறுப்பு
சுற்றிச் சூழும் நச்சு வெளியில்
இந்த வாள் சுழற்றல்களுக்கிடையே
நீ ஏதாவது சொன்னாயா
கனவு போலிருக்கிறது ,
சொன்னாயா?

குருதி படியாதிருந்தால்
ஆத்மாவை எடுத்துக் கொண்டு
அப்புல்வெளிக்கு
வந்து சேருகிறேன்.

நீ எங்கிருந்து
மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறாய்?

Tuesday, January 1, 2013

வைத்த பொருளை
மறப்பது போல
வாய்த்த பொக்கிஷம்
வந்து சேராதது
போல
கண்கள் திறந்திருக்கையில்
கண்ணாமூச்சி குறுகுறுப்பினும்
நீண்டு செல்கிறது
வெறுமொரு மதுரக்கனவு
மற்றும் ஒரு யுகத்துக்கு.
நீ யாரோவாக
இருக்க பிதுங்கி
எல்லாமுமாக நிரம்பி வழிவதில்
வினோதம் என்ன,
சும்மான்னாச்சும்
முழி தெரண்டு திடுக்கிடும் நீ தான்
என்றோ
நான் கருவில் சல்லாபித்து சம்பாஷித்து
தலை கோதிய
சிசு
வலிக்கும் வரிகளின் மணற்பரப்பில்
காத்திருந்தும்
காத்து வாங்கியும்
குட்டிகரணமிடுகிறது
யம்மம்மா பாவம் இந்த சினிக்கல்
லவ்வு.