Friday, May 24, 2013







திடுக்கிடுகிறேன்,
நனைவது மட்டும் தான் நானோ?


எந்தக் காலத்திலும் நான் என்னை நனைத்துக் கொள்ளும் ஒரு கவிதை. ஒரு அனுபவமாகி கொள்வது.



மின்னி முழங்கி
பொழிந்தாற்றான் பொழிவா
பொழிந்த பெருமழைக்கு பின்னால்
மெல்லக்
காத்திருந்து எழுமே ஓர்
பேர் மௌனப்பெருக்கு

அடைமழைக்குப் பின் முளைக்கும்
கதிவிரிக்காலையில்
வழியுமே
ஓர் எல்லையற்ற பேரமைதி

கழுவி துடைத்த வானின்
நஷத்திர விழிகள்
சொரியுமே
ஒரு ஸ்ருதிச் சுத்தம்

புலன்கள் உறைந்து போக
இவற்றின்
பொழிவில் நனைந்திலையா

இலையுதிர்த்த நெடுமரமாய்
ஏகப்பெருவெளியின்
சங்கீதம் குளித்திலையா ?

-சு. வில்வரத்தினம்.

Saturday, May 11, 2013






எழுத நினைத்து
எழுதத் துவங்கி
எழுதியவாறிருப்பது
வேறு
என்னவெனில்
எழுதாமலிருக்கும் போது
எவருமறியாமல் போகுமென்று
அறிந்து
எழுதிக் கொண்டாவதிருப்பது
முக்கியம்
சரி அதைக் கொஞ்சம் காட்டு
என்ன தான் எழுதி இருக்கிறாய்?




இரவின் தாழி
உருண்டு
கனவின் கடைசி சுவரில்
முட்டித் திறந்த போது
புன்னகையை மூடிக் கொண்டு
நின்ற நீ
கட்டி போடப் பட்டிருந்த
வலியை
அவிழ்த்து விடுகிறாய்
அது என்னை ஆயுள் முழுக்க
நக்கி கொண்டு நடக்க.

Friday, May 10, 2013




எந்தக் காரணமும் இல்லை
என்றான்
அதிகாலை பிறந்து வருகிறதா இல்லையா
என்றான்
அது போல தான் எல்லாம்
என்றான்
வங்கி வேலையை முடித்து விட்டு
நான் லாஜிக்கை தேடிக் கொண்டிருக்கிறேன்
அவன் புலிப்பால் குடித்துக் கொண்டிருக்கிறான்

Tuesday, May 7, 2013




யோசித்துப் பார்த்தால்
நல்ல விஷயங்கள் தான்
எதுவும்
தட்டுத் தடுமாறி
தத்தம் சுருதி பிசகி
பசித்தும்
புசித்தும்
பச்சையை நேரிட்டு
பகலிரவை பங்கிட்டு
குத்தியும் குலாவியும்
ரத்தமும் ரத்தினமுமாய்
சேர்ந்த பொக்கிஷம்
இருக்கிறது
என்னிடமும் உன்னிடமும்
கொஞ்ச கொஞ்சம்
என்றால்