Saturday, October 26, 2013












பாலையோ
அடர் வனம் தானோ
பசித்தும் புசித்தும்
உறங்கியும் உறுமியும்
வண்ணக் கனவுகளில்
இசைவது யாருடனோ
விண்மீனோடு ஒருவர் உரையாடும் போது
இறங்கிக் கொண்டிருக்கலாம் மற்றொருவர்
பாதாளத்தில்
பட்டன் கட்டலாம்
பாட்டு பாடலாம் 
பருப்பு சமைக்கலாம்
பருப்பாய் ஒலாத்தலாம்
ஓய்வில்
ஒரு முகம் ஜொலிக்க
ஒரு கவிதை எழுத முயலும் போது 
என் கண்ணம்மா
அது இப்படி.