Thursday, August 28, 2014









மண் கீறி
மூக்கு நீட்டும் குருத்தின்
கவனம் எங்கோ
நெடுந்தூரம்
விட்டம் தொட
ஸ்டூல் ஏறின குழந்தை
முன்னம் ஒரு முறை விழுந்தது தான்
மூத்திரம் எப்படி வருகிறது
அக்கா ஏன் பாவாடையைக் கட்டிக் குளிக்கிறாள்
காதல் கடித்ததில் என்ன மிஸ்டேக்
கல்யாணத்துக்கு அப்புறம்
கர்ப்பத்துக்கு அப்புறம்
கருந்துளைக்கு அப்புறம்
காலம் தாண்டி பறக்க முடிவதற்கு அப்புறம்
கடவுளைத் தீண்டும் விரல்
முளைத்ததற்கு அப்புறமும்
இருக்குமில்லையா
இவ்வாழ்வு.
எனினும்
நாளை விடிந்த உடன் கட்ட வேண்டியது
மீட்டர் வட்டி.