Tuesday, October 28, 2014


சொல்லு
நதி எனில் இக்கரை அக்கரை
இங்கே சலிப்பு அங்கே சூன்யம்
சுழித்தோடும்
உயிர்ப்பின் அலைகளுக்கிடையே
என்னால் இதை கேட்டு விட முடிகிறது
சொல்லு
நமக்கு தெரியும்
வேடிக்கை பார்ப்பது போலிருந்தாலும்
அவற்றின் கவனம், அடைபடாத விழிகள்
புன்முறுவலிக்கும் அதன் சடங்குகள்
அதனால் கட்டி எழுப்ப முடியக் கூடிய
நரகம்
தட்டில் வைத்து ஊட்டித் தரும் ஒரு சாவு
உலகு பற்றி அனைவரும் அறிவார்கள்
நம்மைப் போல் பங்கு பெறுவதால்
சொல்லு
நான் இப்படி என்று சொன்ன பிறகு
சொன்னால் போதும்
நீ யார் என்று
உன் உள்ளில் என்ன
ஒருவரும் பார்த்திருக்க ஆகாத
அந்த ரத்தினம் பற்றி எரியட்டும் என் விழிகளில்.
சொல்லு.