Monday, November 13, 2017





பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நமக்கு
எட்டாக் கரையில் எட்டும் முன்னே
இந்தத் திட்டில் வைத்து ஒரு மதுக் குப்பி
திறந்தாலென்ன, வாழ்வை ஏந்தி கிண்ணம் மோதி
ஒரு மிடறில் சிரித்த பிறகு அதில் விஷம்
கலந்தால் தான் என்ன. எட்டிப் பார்த்தும்
தொட்டுப் பார்த்தும் அறிந்த பின் அறிந்தேன்
எனது முலைக் காம்பின் விளிம்பு
எவளுக்குமில்லை என்கிற செருக்கை
அணைத்தாலென்ன, அல்லது இழுத்து வைத்து
அறைந்தாலென்ன. குருடனுக்கு கண்,
கடவுளுக்கு இதயம். இருப்பவர் எவருமே
இல்லாதது தேடும் துயர். எரிகிற புண்ணில்
பறக்கிற புகை. சரியாய் வந்திருக்கிறதா சொல்
எக்சிஸ்டென்ஷியலிசம்.

விஸ்கி குடித்திருந்தேன்
எனக்கு ஊற்றாதே, ரம்மை கலக்க
முடியாது,

sorry.