Sunday, May 27, 2018





கனவின் இடுக்கோ கள்ளின் இடுக்கோ
அது பள்ளத்தாக்கிலிருந்து எழுந்த நிலவு போலிருந்தது
அந்தத் தனிமை என்றான்
நிராகரிப்பின் கூர்மையுள்ள ஒரு கத்தி கொண்டு
எல்லா காயங்களையும் கீறி
அதற்குள் எட்டிப்பார்த்துக் கூச்சலிட்டு
எதிரொலிகளை கவனப்படுத்திக் காட்டியிருக்கிறது
அது.
சீலை விலக்கி முலையருந்தின துல்லியம் தவிர்த்து
மனசெல்லாம் மேகங்களில் நகரவே
இருந்திருந்ததாம்
முஷ்டி மடக்கித் தாக்குதல், முதுகில் குத்துதல்
இதிலெல்லாம் ஒன்றுமில்லை என்றான், கைவிட்டு போகும் போது ஒரு சொல்லை வைக்காமல் போவது
கத்திகுத்து என்றான்.

எதிர்ப்படுவோரின் விழுப்புண்களை எண்ணுவதே
இப்போ வாழ்க்கையாச்சு.

என்றான்.