Wednesday, September 26, 2018





யாருமே
கொதிக்கிற பாலில் விழுந்து சக்கரையுடன் கலந்த
தேநீர் மும்முரம் மட்டும் தான்
நாவில் சுட்டுத் தொண்டைக்குள் இறங்கி
வயிற்றுள் மினுங்கி
மூளைக்கு வெப்பம் அனுப்புகிற
ஒரு குட்டி செய்தி
ஆனால் பாருங்கள்
யாருமே
எலும்பை தொடுகிற குளிரில்
இரண்டு அல்லது மூன்று வேளை
உணவைத் தவற விட்ட
பரிதாபதிற்குரியவர்களாக இருந்து
கை நீட்டுகிறோம்.

ஆத்மா பிச்சை பாத்திரம்
அதனால் உலகு எரியாதிருக்கிறது.