Friday, May 10, 2013




எந்தக் காரணமும் இல்லை
என்றான்
அதிகாலை பிறந்து வருகிறதா இல்லையா
என்றான்
அது போல தான் எல்லாம்
என்றான்
வங்கி வேலையை முடித்து விட்டு
நான் லாஜிக்கை தேடிக் கொண்டிருக்கிறேன்
அவன் புலிப்பால் குடித்துக் கொண்டிருக்கிறான்

Tuesday, May 7, 2013




யோசித்துப் பார்த்தால்
நல்ல விஷயங்கள் தான்
எதுவும்
தட்டுத் தடுமாறி
தத்தம் சுருதி பிசகி
பசித்தும்
புசித்தும்
பச்சையை நேரிட்டு
பகலிரவை பங்கிட்டு
குத்தியும் குலாவியும்
ரத்தமும் ரத்தினமுமாய்
சேர்ந்த பொக்கிஷம்
இருக்கிறது
என்னிடமும் உன்னிடமும்
கொஞ்ச கொஞ்சம்
என்றால்

Wednesday, April 17, 2013




கத்தி எடுக்கலாம்
கன்னக்கோலிடலாம்
கற்பிழக்கவோ கற்பழிக்கவோ
செய்யலாம்
காருக்கடியில் விழலாம்
காரை ஏற்றி கொல்லலாம்
எனக்கென்னவோ
புத்தனாவதும்
மிமீ தூரத்தில் தான்
இருக்கிறது
ஆயின்
ஏதோ ஓன்று ஆவதற்கு
எதுவாகாமல் இளிக்கிறேன்
பார்

இப்போது
பிழைத்துப் போக
சௌகர்யமாயிருக்கிறது. 


  

Friday, March 1, 2013

மூச்சு
முட்டுகிறது

சடலம் அல்ல என்று
கரடி கண்டுபிடித்து விடுமா
என்பதைக் காட்டிலும்
மரத்தில் ஏறிக்கொண்டவனின்
சாமர்த்தியம் தான்
உள்ளில் இப்ப
வீசும்
காற்று.

சைக்கிள் ஒட்டவும்
நீச்சலடிக்கவும்
கரடி போகிற வரை
மரத்தில் ஏறி அமர்ந்து கொள்ளவும்
நீயாவது கத்துக்கடா
மகனே.

 

Thursday, February 7, 2013




குறுநில மன்னர்களா
 துணை நடிகர்களா
தெரியவில்லை
 வாள்  வாள் என்று
கத்துகிறார்களா
வாள்  சுழற்றுகிறார்களா
தெரியவில்லை
லட்சியம் கண்களில் நின்றெரிய
விரிந்த தோள்களும்
கருணை புன்னகையுமாய்
சற்றேறக்குறைய
ஒரு புனிதனை விட
கன கம்பீரத்துடன்
வீழ்ந்து விடுகின்ற எவன் மீதும்
மிதித்து நடந்து
அக்கரைக்கு அரண்மனைக்கு
சென்றவாறிருக்கிறது
அநீதி.

நாடகம் சரி
நம்ம ரோலு வெளங்கலையே .

Tuesday, February 5, 2013

எவனயாச்சும் போட்டுக் குடுக்க
கக்கூஸ் உள்ள உக்காந்து எழுதற
மொட்டக் கடுதாசி இல்லன்னு தெரியும்
நல்லா.

மடயனுங்க நாலு பேர கூட வச்சுக்கிட்டு
கும்மாளி போடலாம்
மந்திரத்த புடிக்க முடியலன்னா அங்க
பூ மணக்கறது எப்டி  புலியுறுமறது
எப்டி

கந்து வட்டிக்காரன் மாதிரி
சந்து பூந்து சந்து வந்து
ஆள் தேடி அடையாளம் தேடி
 அதிகாரத்தை தேன் சப்பி
ஊர் கூட்டி தேர இழுத்துட்டா
போஸ்டர்ல பேரு ,லவடா
பொங்கற மாதிரி ஒரு வரி
எங்க

ஜனங்கூடுற சந்தையில
வண்டி நிறையக் கொண்டாந்து
எறக்கி அவ்க்குற கதைய
எல்லாரும் பாக்கலாம் தான்
எங்க அந்த ஒரு சொட்டு
தண்ணி

ஊரையே எரிச்சு போடறா மாதிரி
ஒரு துளி நெருப்பு?










Monday, January 7, 2013

ஓன்று இரண்டாகி
இரண்டு இருபத்தி ரெண்டாகி
ஒரு மண்டலம் அமர்ந்து பேசியது
கண்ணீரை இழிவுபடுத்துவது
தானென்றால்
ஒரு நாள் அந்த உப்பு
ஒவ்வொரு நெஞ்சிலும் தனித் தனியே
கரிக்கும்.

ஐயோ, செல்வத்தை தேய்க்கும் படை
என்றல்லவா சொல்லியிருக்கிறான்?

Sunday, January 6, 2013




ஆம்

இருக்கிறேன்

சடுதி சந்தடி சச்சரவு
நச்சரிப்பு
தெரியாதா, பற்றியெரியும்
வீட்டை அணைத்துக் கொண்டே
இருப்பதல்லவா
வாழ்வு
யார் வந்தார் யார் போனார்
எதற்கும் நேரமில்லை
கசப்பின் வெறுப்பு
சுற்றிச் சூழும் நச்சு வெளியில்
இந்த வாள் சுழற்றல்களுக்கிடையே
நீ ஏதாவது சொன்னாயா
கனவு போலிருக்கிறது ,
சொன்னாயா?

குருதி படியாதிருந்தால்
ஆத்மாவை எடுத்துக் கொண்டு
அப்புல்வெளிக்கு
வந்து சேருகிறேன்.

நீ எங்கிருந்து
மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறாய்?

Tuesday, January 1, 2013

வைத்த பொருளை
மறப்பது போல
வாய்த்த பொக்கிஷம்
வந்து சேராதது
போல
கண்கள் திறந்திருக்கையில்
கண்ணாமூச்சி குறுகுறுப்பினும்
நீண்டு செல்கிறது
வெறுமொரு மதுரக்கனவு
மற்றும் ஒரு யுகத்துக்கு.
நீ யாரோவாக
இருக்க பிதுங்கி
எல்லாமுமாக நிரம்பி வழிவதில்
வினோதம் என்ன,
சும்மான்னாச்சும்
முழி தெரண்டு திடுக்கிடும் நீ தான்
என்றோ
நான் கருவில் சல்லாபித்து சம்பாஷித்து
தலை கோதிய
சிசு
வலிக்கும் வரிகளின் மணற்பரப்பில்
காத்திருந்தும்
காத்து வாங்கியும்
குட்டிகரணமிடுகிறது
யம்மம்மா பாவம் இந்த சினிக்கல்
லவ்வு.

Wednesday, November 21, 2012



கத கேளு கத கேளு
கதையான கத கேளுன்னு
கல காட்டி கலர் காட்டி
காட்டாம நழுவுறான்
கத சொல்லி
காலத்துக்கும்
உப்பு கரிக்கிற சோத்த

எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் னா
முடியுது எல்லாம்.




சரி எனக்கு தெரியும்
இந்த திருவிழாவை பல தரம்
கடந்திருக்கிறேன்
சாட்டையடித்து குருதி காட்டி
கையேந்துவது
புதுசா
வேடிக்கை
காட்ட வருகிறவன் கதை
வேடிக்கையாய் அல்லாமல்
இருக்கலாமோ?
இருப்பினும்
யுகமாய் தொடர்வதால்
மூச்சு விட்டுக் கொள்ள
கொஞ்சம் டைம்
ப்ளீஸ்.

Monday, September 24, 2012



காலம்
தன் சந்தை வாயை பிதுக்கி
எல்லோருக்கும் பெயர் வைக்க வரும்

புரிதலின்மையின் கொடுங்கானகத்துள் நழுவி
யாரும் காணாத மரங்களில் எழுதுகிறான்
ஒரு கோழை.

ஆ, இருந்தாலும்
எமக்கு தொழில் கவிதை.
 

Tuesday, September 18, 2012




 சிகரெட்டு பீடி குடிச்சா
எளுத்து
பாட்டில தொறந்தாலும்
அதே தான்
கெட்ட வார்த்தைக்கு மியுட்டு   
நல்ல கருத்துக்கு டேக்ஸ்ப்ரீ 
லண்டன் பேலசு
ராஜதந்திரிகளோடே
பரிசாகரனா இருந்து
நாங்க திருடறதுக்கு வெளக்கு புடி
நாங்க கொளுத்தறதுக்கு மோளம் அடி 

Thursday, September 6, 2012

நிலைக் கண்ணாடியில்
ஒரு ஆட்டை சிருஷ்டித்து
ஜென்டி மேனின் புன்னகை
சொற்கள், கட்டம் கட்டமாய்
சொற்கள், சொற்கள் உச்சரிப்பு சுத்தத்துடன்
ஓங்காரம்
வரிக்குதிரை போல சீருடை
ஒரு குடம் பெருமிதம்
ஒரு தம்பளரில் அசடு
பத்தாமே போனாக்கா

ஓநாய் கண்ணீர்

வேட்டையாட இதெல்லாம் வேண்டும்
விரும்புவதற்கு என்ன வேண்டும்
எப்ப பாத்தாலும்
என்னப் பத்தி தெரியுமானு
சொறிஞ்சுகிட்டே இருக்கான்
நோபிள்

மாடு மாதிரி
நிக்கற புலியா

சரிடா
நான் உன் முதுக வருட
கிளம்பி வந்தாச்சு.

முனகினாலும் சரி
முழுங்கினாலும் சரி

Thursday, August 9, 2012

சொல்லுவேனே
அது அல்ல
நினைத்துக் கொள்ளுவேனே
அது அல்ல
நீ நினைக்கிறாய் என்று
காட்டிக் கொள்ளுவேனே

அதுவும் அல்ல
நீ நினைக்க வேண்டும் என்பதற்காக
நிறுத்திக் கொள்கிறேனே
அது அல்லவே அல்ல
காரல் மார்க்சை முழங்கும் போதும்
காதலை சொல்லி விதும்பும் போதும்
நிலா ரசிப்பதாய் பீத்தும் போதும்
நிலைக் கண்ணாடியில் நிரவும் போதும்
எங்கேயும் இல்லாம இருந்து
எல்லாமா பொங்கி பெருகற இந்த சுழலில்
நான்னு ஒண்ணு இருக்கா சொல்லு
ஞானத்தங்கம்?

Monday, August 6, 2012

இருப்பா தம்பி
கொஞ்சம் இரு
உனக்கு எல்லாம்
மனப்பாடம்
என்று தெரியும்
பாசிடிவ் திங்கிங்
போகும் பாதையில்
பார்க்க என்ன உண்டு 
யார் நெல் விதைத்த பூமியிலும்
ஓடுபாதை அமைக்கிற
உன் சாமர்த்தியமும்
சரி
கள் வேணா
கவித வேணா
கடவுளும் காண்டம் போல
பாலிதீன் கவர்ல
லவ்வ  லவுட்டின ஸ்பீட்லையே
சம்பாதிச்ச எதிரி
எங்கெங்கும்
இருந்தாலும் தேசபக்தி முத்த
ப்ப 
பாத்து செய்யி

மனுஷ உயிருங்கப்பா.

Friday, August 3, 2012

முதலில் சொல்லி விடுகிறேன்
எந்த வரியும் கோர்வையா
கூடாது
கேள்விப்படிருக்காத வர்ணத்தில்
மலர் கொய்து எடுத்து அடுக்கு
இரட்சணிய யாத்ரிகம் குணங்குடி பாய்
என்று மேய்ந்து பின்னர்
குடும்ப வாராந்தரி க்ளிவேஜ்
எழும்பி நிற்கும் மதிய காமமும் அக்கா என்று
அழைக்கப் படுபவளின் வில்லுடலும்
அடக் கருமமே என பிசுபிசுக்கும்
சுய கிளைமாக்சும் கொஞ்சம் முற்போக்கு
தவ்ளோ நற்போக்கு
மலை கடல் நிலவு மயிரு மண்ணாங்கட்டி
பொயடிக் பிளேவர் மிக்ஸ் பண்ணி
பில்ட்அப் கட் அவுட் தெரியாம
பைனல் டச்சு
வெச்சுட்டா
வந்த்துர்ச்சே

வி

Thursday, July 26, 2012

உறவுக்கு கை கொடுத்து
உரிமையை எல்லாம் விட்டுக் கொடுத்து
எப்பவும் போடோக்கு சிரித்து
எல்லாருக்கும் அழைப்பு விடுத்து
நட்பும் சுற்றமும் சூழ
வாழ்வாங்கு வாழ்வதற்கு நடுவே
எப்பவும் வெளயாடறோம், இல்ல
சும்மா

இருந்தாலும் இருந்துக்கிட்டிருக்கு
கத்தி.

Tuesday, July 17, 2012



முன்ன எல்லாம்
சதுரவட்ட கிராப்பு ஜிப்பா
ஹிப்பித் தல கலஞ்ச தல
ஸ்பன்னு சோலாப்பூர்
ஹவாய்
சுஜாதா பாலசந்தர்
கம்யுனிசம்
ஏமாந்தா ஒரு ஓரமா
ஜீன் பால் சாத்தரும்
கூட

கொஞ்ச நாள் முன்ன கூட
மனிதாபிமானத்த வச்சுகிட்டிருந்தமே சார்

இப்ப
நேர்மை.

Saturday, July 7, 2012




நீ எவ்வளவு அழகு தெரியுமா என
காக்கையை
பாட்டு பாட சொல்லிக் கேட்ட
நரி வயிற்றில் ஊறிய
பசி
குளவிக்குள் குருவிக்குள்
குடல் புரளும் சகல ஜீவனுக்குள்
பற்றிப் பரவி
வளர்ந்து நின்று
வனமேகிய வரிப்புலியாய்
உலவுவது பார்ப்பாய் எனில்
என் பசியை எப்படி வெறுப்பாய்



கூனனின் முதுகு போல
ஒட்டிக் கொண்டிருக்கும் வாழ்வு விழைவது
கொஞ்சம் அல்பத்தனங்களை மட்டுமே

மலையை புரட்டி தள்ளிக் கொண்டிருந்த
போதும்

கூட்டில் இருந்து விழும் தேன் சொட்டு போல்

பூவின் பேரை யோசிக்கு முன் எரிகல் மறைவது போல்

கண்களை பிளந்து உன்னை விழுங்கத் துடிக்கும்
இக்கணம்

நாளை காற்றில் ஆவியாகிப் போகும்
மது.


 

Wednesday, July 4, 2012






இந்த நகரம்
யார் இதன் உடமையாளன்
கண்காணிப்பாளன்
இந்த விசை எங்கிருந்து
கிளம்பி சென்று
நிலக்கடலை விற்று கோடீஸ்வரன்
நடிகனாகி முதல்வர்
ஆள் பிடித்து கொடுத்து ஆள்
ஒரு எல்லுக்கு ஒரு கொலை
பொறுக்கி இல்லையா போலீஸ்
ஆன்மீக பேரருளுடன் சைய்டில்
பெண்வணிகம்
பொந்துக்கு வெளியே இருக்கும்
பனிக்காட்டில் பூந்து
நான் யாராகவும் திரும்பலாம்,
நீ யாராக நிற்கிறாய் சொல்லி விடு
    



 

Friday, June 29, 2012




வர்ணம் பூசவில்லை
இலக்கம் எழுதவில்லை
முக்கியமாய் பெயர் பலகை
மீசை முறுக்கவில்லை

யாரும் வழி சொல்லி விட முடியாத
இடத்தில்
இவ்வீட்டை சாத்திக் கொண்டு
திறக்க சாத்தியமுள்ள கதவை
திரும்பிப் பாராமல்
நீவந்து கதவை திறப்பாய்
என்று காத்திருக்கிறேன்

ஏன் என்றால்
நுழைய வேண்டியிருப்பது
உனக்குள்ளே
நான்.



நீங்கள்
விளிம்பில் தானே நிற்கிறீர்கள்

நீங்கள் என்றால் அது நானில்லை
உங்களுக்குள் வெள்ளம் முட்டும்போது
நான் கரையுடைவதில்லை
எனக்கு கிடைக்கும் பருக்கைகளை
நீங்கள் கணக்கிடுவதுண்டா
என்று திடுக்கிடுவதும்
வழக்கம்

என்றாலும்
உங்களுக்கு உதவி செய்ய
அவா.

அல்லது
ஒழித்து கட்ட
வெறி

ஏனென்றால்
விளிம்பில் தானே நிற்கிறீர்கள்
பத்தாததுக்கு
விறைத்துக் கொண்டும் நிற்கிறீர்கள்

Thursday, June 28, 2012




நீயும் நானும் துண்டு வானங்களை பார்த்து
கம்பிகளை கடித்து கலகம் பண்ணி வைக்கிறோம்

தாண்டிக் குதிக்க முடியாத சட்டகங்கள் பற்றி
நமக்கு தெரியாதா என்ன

என்றாலும்

சொல்லில் சிக்கிய பூ ஜடமாயிருந்தும்
சொல்ல தூண்டும் ஒரு சின்ன புள்ளியை
நிறைத்திருக்கிறது
காயம் பட்ட புழுவின் வலி

ஏன் நான் உன் மார்பில் புதையக் கூடாது?



தும்பியின் வாலில்
நூலை கட்டி
காத்தாடியாக்கி விளையாடி இருப்போம்
அப்ப

கடவுளுக்கு எதிராக விளையாடாதே
என்றிருப்பார்கள் நம் அம்மாக்கள்

இல்லை

நாம்
கடவுளுக்கு எதிராக விளையாடவில்லை
கடவுளைப் போல விளையாடுகிறோம்.   



என்ன
பார்க்கிறாய்

நான் தான்
நானே தான்

மாறியிருக்கிறேன்
இல்லை?

என்ன செய்வது
என்னை கைவிட்டுவிட்டு
உன்னில் தொற்றிக் கொண்டிருந்தேன்
விதைக்காமல் விளைவிக்காமல் அறுக்காமல்
நின்றிருந்ததில் வந்த பசியின்
களைப்பு

நஷ்டப்பட்டாலும் நஷ்டமில்லை
நன்றாய் இரு, போ !



என்ன
புகார்

வாழ்க்கை
சில சந்தர்ப்பங்கள்
கொடுத்து பார்க்குமாம்
கேட்டுக் கொள்

காலம் ஒரு முகம் புனைந்து
கடுகடுக்கையில்
நீ மனிதர்கள் பற்றி
அறிந்து கொள்கிறாய்
ஹா ஹா ஹா

நம்பிக்கைகள் என்றால்
அடி அதன் மீது தான் விழும்
சரியா
அப்புறம் வலியை பற்றி பிதற்றாதே

வளர்கிறாய்
என்று விடுவோம்.
 

Saturday, June 23, 2012







தாழிடப்பட்ட
அறை

அடைந்து கொண்ட
கண்கள்

செவிகளின் உள்ளே
கோடி மைல்களுக்கு அப்பால்
அலைகள்
கடல் அலைகள், ஓங்கிஎழுந்து
பதறி பதறி
தன் நெஞ்சை கொண்டு பாறையில்
மோதி பிளக்கும்
அலைகள்

யாராவது வரக் கூடும்
என்னவென்று கேட்கக் கூடும்

பாய் விரித்து தலையணை வைத்து
படு மரியாதையாய் என்கிறேன்......

 



உணர்வு..!


ஒரு கோப்பையில் கரைந்து போகுமென்றால்
நினைவுகள் இரக்கமுள்ளவை
லஹரி நெம்புமொருஉறக்கத்தில் மறந்து போகுமென்றால்
அவை அடக்கமுள்ளவை
எரியும் குடல்களின் இழுவையில்
செரித்து கழிவாகுமென்றால்
சுலபமானவை

ஹே......

அப்படியா

பசிக்கு உணவு
கால்களுக்கு பக்கத்தில்
இருக்கை
எப்போதும்
தலை வருடி தந்து
நான் என்னையே வளர்த்துக் கொண்டது
அல்லவா?

உன்னை துரத்தினால்
நான் காணாமற் போவேன்......
 

Friday, June 22, 2012

இன்று வானிலை எப்படி

காலையில் கிடைத்தது பரோட்டா தான்
வயிறு சரியில்லை

வீடு கிடைக்குமா
ராசியில் கோளாறு







கமலா சௌக்கியமா
விமலா சௌக்கியமா
இவங்க ரெண்டு பேர தெரியலேன்னா
அமலா சௌக்கியமா

ட்வல் பி வராது
இருவத்து மூணு சீ போவாது
மஞ்சு வழுக்கி விழுந்தது
தீம் பார்க்குல தானே

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ஒண்ணும் ஒண்ணும்
பதினொண்ணு
பதிநோண்ணும் பதிநோண்ணும்
ஆயிரத்தி நூத்தி பதினொண்ணா

போயிட்டு வரேன்
வர்ற அப்பவாவது சொல்ல முடியுமா
பாக்கணும்  

 



எல்லாரும்
மூடிகிட்டு தான் போறாங்க
அமைதின்னு சொல்லிட முடியுமா
அத
அப்ப அப்ப அங்க அங்க
கூட்டம் கூடிடற மாதிரி தான் இருக்கு
புரட்சி ன்னு தான்
புல்லரிச்சுக்க முடியுமா

இருந்தாலும்
எழும் சிறு பொறி மிகப் பெருந் தீயாய் ன்னு சொல்றது
அறிவியல் மாதிரி
படலே?


ஒரு
பயணம் தானே எல்லாம்

ஒற்றையாவோ
ஊரையே கூட்டிக்கொண்டோ 

புத்தன்
என்ன கொண்டு போயிருப்பான்
என்று தெரியாவிடினும்
தங்கத்தை அள்ளி வரப் போனவர்கள்
என்ன வைத்துக் கொண்டு
இருந்திருப்பார்கள் என்பது நமக்கு தெரியும்.

கருவிகளின் முகம் மாறியிருக்கலாம்
கணக்கில் இருப்பது தானே
எல்லாம்?


பசி
புரியாது

சிரிச்சுட்டு
நகர்ந்து விடலாம்

ஆத்மா நஷ்டபடுவதை
சொல்ல முயன்றான்
ரித் விக்

வாழ ஆசையை இருக்கிறது
என வீறிட்ட குரல்
யாருக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறது
இப்போதும்?

Thursday, June 21, 2012




எனது சிறகுகள்
ஒய்வு காணும் வரை
உன் வானை எங்கனம்
குடை மடக்க முடியும்
எனினும் 
ஒரு மிடறு தீயை
விழுங்கி முடிப்பதற்குள்
திரும்பி வா...



உன்
விழிகளுக்குள் எட்டி பார்த்து
வீழ்ந்த பின் அறிந்தேன்
பறந்து கொண்டிருக்கிறேன்
என்று -
உன்னுள்
விரியுமொரு
வானை அறியாமல்
எங்கே விடை கொடுக்கிறாய்?

Sunday, June 17, 2012




திரைக்கதை


புழங்கு மொழியில்
சிறிய பொறி தான்
அது

பற்றியெரியும் வனமென
துவங்கும்

தானே தன்னை கைவிட்ட முட்டுசந்தில்
பிரும்மாண்டமான சாலைகளை பரப்பி பார்த்து
உடல் குறுக்கி நடக்கக்கூடும்
தேய்மானம் போன
ஒற்றையடிப்பாதையில்

யோசித்து பாரேன்
இப்போது துடித்து தெறித்து
யாருமறியா இருளில் பறிக்கிற
சினை முட்டையை

கருவில் இருந்துகொண்டு
கதையை
கதையில் இருந்து கொண்டு
முகங்களை
முகங்களில் இருந்துகொண்டு
வாழ்வை அறி

சொல்.



தந்தையர் தினம் என்று ஒரு தினமாம்
கேட்டுக் கொள்
அதாகப்பட்டது உனக்கென்று
ஒரு நாள்
நீ விதைத்து முளைக்க வைத்த ஓன்று  
பசியும் தாகமுமாய்
உனது
குருதியை குடித்து
தசையை தின்று முடிக்கிறது அல்லவா,
தீர்க்க முடியாத அந்த
குற்றவுணர்ச்சி
தானும் விதைக்க வேண்டி இருக்கிறபடியால்
அண்ணாந்து வானில் நிலை கொள்ள வேண்டிய
பீதி
அர்த்தமறியா வாழ்வின் அநீதி முன்
மண்டியிடுகிற
மலடு
ம்ம்ம் என்ன சொல்லி என்ன
இனிமேல் தினங்கள் இல்லாமல் நம்மை  நாம்
ஏமாற்றி கொள்ள முடியாது.

Wednesday, June 13, 2012




புலன்களை
திற

பொசிஷன்
எடு

டைலாக்
மனப்பாடமா

ஒவ்வொரு பிரேமும் பைசாவாவற
இந்த பிரம்மாண்டத்தில்
சகநடிகர்களின் பாத்திரங்களை
முறி

மேடைகள் முக்கியம்
கைதட்டல்கள் முக்கியம்
இருக்கைகளை பிடுங்க
இருள் சந்துகளுக்குள்
ஆத்மாவை
கூட்டிக்கொடு

விரட்டி விரட்டி விரட்டி
எங்கும் மிச்சம் வைத்து விடாமல்
துரத்தி அடி
உன்னை

பீடத்தில் இருந்து
பிணமாய் சிரித்திருந்து
இன்னொரு முறை
சாவு

இப்ப
ஒரு வழியா
ஸ்க்ரீன்ல
தி எண்ட் ...!



நாடு சுற்றி நகர் சுற்றி
நகரின் சந்து பொந்துகள்
எல்லாம் சுற்றி
மீன் விழி மான் நடை
தேன் மொழி
சகலம் பயின்று சலித்து
நட்டுகுத்தின கண்களுக்கு
வெற்று வான்

தூக்கம் வருகிறதா
தூங்கிக் கொள்கிறாயா
யாரோ யாரையோ
கேட்கிறார்கள்

என்னை தான் என்றால்
எப்படி கண்டறியலாம்
லட்சம் அடிதடியில்
இவ்வாஞ்சையின்
விளியை

முதலில் இருந்து துவங்கு
என்கிறான் .
  

Tuesday, June 12, 2012

விசேஷம் எதுவும் இல்லை




ஒரு காவியத்திலும்
நமக்கு கிடையாது
இடம்

சந்தடி சாக்கில்
யாருக்காவது சொன்னால்
அவர்களுக்கு கொட்டாவி வரும்

ஏய்ய்
உலகத்துக்கு ஆயிரம் கவலை தெரியுமா

இருந்தாலும் ஒரு விஷயம்,
இந்த இரவில் இந்த தனிமையில்
பிராணன் கனக்கிற
இந்த தீ நொடியில்
நீயும் இந்த விண்மீனை பார்க்கிறாய் என்றால்

சொல்லு இவ்வாழ்வை விட
வேறென்ன விசேஷம்?



தீராத விளையாட்டு பிள்ளைகள்
நாம்

தீர்வதில்லை அவா
திசைகள் நான்கும்
பற்றி எரிந்தால்
கூட

தீமையை தித்திப்பாய்
சப்பு கொட்டுகிறது
வாழ்வின்
நாவு

குழந்தைகளும்
பெண்களும்
சாகாத தினசரியில்
கொட்டாவி முட்டுகிறது

குத்துப்பட்ட நண்பனின்
அவல முகமோ
கலைக்கப்படுகிற மனைவியின் கண்ணீரோ
வேணும்

அந்தமற்ற பெரு வெளியில்
கடைவிரித்த நறுவிருந்தாய்
இன சாவு மத சாவு
போதாது என்று இன்னும் எவ்வளவு
போர்ப்பரணி

வெளிப்படாத மிருகம்
விழுங்கும் குருதியெல்லாம்
விளையாட்டுப் பிள்ளைகளின்
ஊட்டமென்றான பின்

லூசு
காத்துல இருந்து
எப்படிடா
மலர பறிப்பே

அதுவும் தேவ மலர ?

Sunday, June 10, 2012





சிரஞ்சீவி  சார்.....


எப்படி இருக்கிறாய் 
என்றா  கேட்டாய் 

இப்போது இருக்கிறேன்  என்பது 
எப்படி இருக்கிறேன் என்பதை  விடவும்  முக்கியம் 

கல்வாரி  மலையெங்கும் 
கருகி  இருள் படர்ந்து 
உறுதியின்  கடைசி விண்மீன் 
அணையும்போது
என், தேவனே  ஏன் எம்மை கைவிட்டீர்  என
காற்றிலொரு முணுமுணுப்பு கரைந்திற்று
அல்லவா 
அப்போது  கூட  இருந்திருப்பேன் என தோன்றுகிறது.

ஆயிரம்  வருஷங்களுக்கு அப்புறமும்
இருப்பேன் 

எப்போதும் இருக்கிறவனிடம் 
எப்படி இருக்கிறாய் என்று மட்டும் 
கேட்டு விடக்கூடாது.  

Saturday, June 9, 2012




நசித்து போனதாய்
அடங்கிய எந்தை
கண்ணுக்குள் வைத்து
காக்க ஆகாமல்
பிதுங்கிய அம்மா

செத்தையும் சொத்தையுமாய்
பத்தாயிரம் கூட்டம்

எங்கோ ஹிமாலய அடிவாரத்தில்
பெயரறியா பூவாயிருந்து
குளிரில் நீராடி
ஏதோ சாலை விபச்சாரியின்
யோனியாயிருந்து
வெள்ளைப்படுகிறேன்

ஏய், வெண்ண
உனக்கு தெரியுமா

இனி என்றோ பிறக்க போகிற
குழந்தையின் வீரிடலில் இருக்கும்
என் பசி

Thursday, June 7, 2012






comes with the wind



எத்தனை மகத்தானவள்
நீ
என்பதை உனக்கே
சொல்ல வேணும்

சிருஷ்டிக்க போகிற
காவியம் உன்னை பற்றியது
என்பதையும்

அலைகள் வந்து மோத
துல்லிய நிலவொளியில்
ஜென்னியை பற்றி

சலவை கல்லில் மினுங்கும்
ஷாஜகானின்
கண்ணீர் துளிகள்
பற்றி

அன்னா தஸ்தவேஸ்கியின் 
காதல் பற்றி

சாலமன் மீன்களை பற்றி

இன்னும்! இன்னும்!

தொட்டியில் விட்ட
ரெட்டை மீன்களாட்டம்
மனசு ரெண்டும்
மீட் ஆகி விட்டால்
ஓரிரு முத்தமோ
கொஞ்சம் கண்ணீரோ
அதற்கு பின்னர்
வேறு வழியின்றி
கேட்க வேண்டியிருக்கிறது
நரைத்த ஜீன்ஸில் ,
மொட்டையடித்துக்கொண்டு,
சிகப்பாய்

யார் அவன்?

நற நற நற நற நற  

Tuesday, June 5, 2012




கண்ணுள்
நீ எழுதி கொண்ட கவிதையை
காற்றை வருடி
தெளிந்த பிறகு
மண்ணில் இறக்கி வைத்தால்
மற்றவர்கள் கேட்பர் என்று
விண்ணில் செலுத்தி விட்டேன்
என் கவிதையை
ஏந்தி சென்ற காற்று
எட்டி விட்டதா
உன்னை

அட,போடா
டுபுக்குங்கறியா

சரி இந்த கவிதையை
வேற யாருக்காவது குடுத்து பாக்கறேன்.



வெடி வைத்து பிளந்தால்
பாறைக்கு வலியில்லை
யாருக்கு தெரியும்

ஒளி கொண்டு புகுந்தால்
இருளுக்கு வலியில்லை
யாருக்கு தெரியும்

பிசையப்படும்போது
மண்ணுக்கு வலியில்லை
யாருக்கு தெரியும்

விருட்சத்தை வைத்திருந்தாலும்
விதைக்கு வலியில்லை என்று பம்மாத்திவிட்டு
வலிகளை பார்த்தால் வாழ்க்கையே இல்லை
ஒர்ரே போடு. 

Monday, June 4, 2012




நீ எப்படி சகிக்கிறாய் என்பதை
சொல்லி கொடு

வசந்தங்களும்
இலையுதிர் காலங்களும் கடக்க
நூற்றாண்டுகள் தாண்டி நீ
எப்படி இப்படி காத்து கொண்டிருக்கிறாய்

மனுஷ்ய இரைச்சல்களும் , தொழுகைகளும்,
கண்மூடிதனங்களும் முடிந்து
நீ நிசப்தயாய் ஆகும்போது
ஜீவவெறியுடன் முணுமுணுக்கிற கானகத்தை
அளவற்ற காதலுடன் நுரைத்து ததும்பி ஓடும் பம்பை ஆற்றின் சலசலப்பை
புணரும் பட்சிகளின் சிறகோசைகளை
எப்படி சகிக்கிறாய்

மேனியை கருங்கல்லாக்கி உறைந்த போதும்
பவுர்ணமிக்கால நிலவொளி ஒரு மயிலிறகாகி வருடும்போது
சிலிர்த்துக்கொள்வது இல்லையா, குறைந்தபட்ஷம்
மனசு

இளைப்பாறுவதற்கு ஒரு நிழல் சோலை வளர்த்து
நெஞ்சுக்குள் வைத்து காப்பாற்றி
ஓய்வெடுக்க வராத ஒரு ஆளின் நிழலுக்கு காத்திருக்கும் போது
உன் யவ்வனத்தை அரித்துக்கொண்டிருக்கிறது
காலம்

தேங்காய் உருட்டி
சாஷ்டாங்கமாய் விழுந்து எழுந்து
இயலாமையை தலையில் சுமந்து
திரும்பி செல்கிறது மானிடம்

மனமெரிய ஒரு பாமரன் கேட்கிறேன்
எப்படி

எப்படி சகிப்பது எல்லாவற்றையும் என்று
சொல்லிக்கொடு   

muthumai...



நான் ஒரு தீர்கதரிசி

வேண்டும் என்று போயிருந்தால்
இந்நேரம் நொறுங்கியிருப்பேன்

நான் ஒரு புத்திசாலி

இப்படித்தான் என்று தெரியாதிருந்தால்
இந்நேரம் என்னை
முடித்துக்கொண்டிருப்பேன்

நான் ஒரு அகங்காரி

மண்டியிட்டு கெஞ்சியிருந்தாலும்
கொடுக்கப்பட முடியாதவைகளை
பெற்றிருக்க முடியாது

இறுதியாக
நான் ஒரு தீவு

என்னில் ஒதுங்குபவர்களும்
தனியாக்கப்படுவார்கள்.

Saturday, June 2, 2012





எழுதப்பட்டிருந்ததா
இது முன்னரே
இக்கணம் கனவில்
உணரப்பட்டிருந்ததா

எந்த புள்ளியில்
துவங்கும் ஒரு
தினம்
எந்த தினத்தில்
நீ உன்னை
அறிந்தாய்

களிப்பில் மிதந்த போது
புதிரின் முதல் சொட்டாய்
காதலை சப்பு கொட்டிய போது
கண்ணீரில் பிசுபிசுத்த
யாரோ ஒருவனின்
கரங்களை பற்றும் போது
கடவுளில் வியக்கும் போது
திடுக்கிடுகிறோம்

யார் நமக்கு முன்
எல்லாம் தெரிந்து வந்து
நமக்குள்
இருந்து கொள்வது

ஏழு கடல்
ஏற முடியாத
எழுபது மலைகள் தாண்டி
எங்கள் உயிர்க்கிளி
கிறக்கத்தில்
இருப்பது எங்கே

உண்மை
வெறும் வார்த்தை இல்லை
இந்த கணத்தை இந்த கனவை
சிருஷ்டித்து
இதை நீ தான் எழுதி கொண்டு இருக்கிறாய்

எத்தனை அநீதி,
எம் வாழ்வை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.


Tuesday, May 29, 2012

யார்..?





எங்கோ எங்கோ எங்கேயோ
தூரத்தில் தூரத்தில் வெகு தூரத்தில்
அழைத்துக் கொண்டிருக்கிறது
அந்த குரல்

நேற்று கழிவறையில் இருந்த போது
கேட்டேன்
வருஷங்களுக்கு முன்னொரு நாள்
கருவறையில் மிதக்கும்போது
கேட்டேன்
உள்ளாடைகளை கூட  சரியாய் அவிழ்க்காமல்
ஒரு வேசியின் யோனியில்
அசைகையிலும்
தான் கேட்டேன்

பசிக்கும் குடல் வெறியின் வழியே
பரிதவித்து பார்த்த பருவத்தின் வழியே
தூங்காமல் செய்த காதலின் வழியே
துக்கித்து அடைந்த பொருட்களின் வழியே
தேடி தேடி வெளியேறினேன்
தேடாத குகைகளில்
கேட்கிறது குரல்

எங்கோ எங்கோ எங்கேயோ
தூரத்தில் தூரத்தில் வெகு தூரத்தில்
அழைத்துக் கொண்டிருக்கிறது
அந்த குரல்





  

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு!




இல்லை,
இல்லயடி என் கண்ணே
நீ மனப்பாடம் பண்ணுவது போல்
அவன் கண்டுபிடித்தது
அமெரிக்காவையல்ல.

பூனைகுட்டிகளோடு
பூனைகுட்டியாகிற
உன்னிடம்
துப்பாக்கிகள் பற்றி
சாட்டைகள் பற்றி
வலி மற்றும் குருதியை பற்றி
சொல்ல அறியேன்

உனக்கு மிகவும் விருப்பமான
அந்த நோஞ்சான் பூனையின் வர்ணம்
எல்லா கடை கோடிகளுக்கும் துரத்தப்பட்டு
காரி உமிழப்பட்ட முகங்களுடன்
இருளில் முடக்கப்பட்ட அரசியல்
புரிந்து கொள்ள முடிவது தானா?

அவன்  கண்டுபிடித்தது
வேறு கண்ணம்மா
வெளுத்த பூனைக்கு
தனியாய் சோறு வைக்காத வரை
உனக்கு எதுவும் தெரிய வேண்டாம்

படித்து கொள்-

ஆம், அந்த தேவடியாள் மகன் தான்
அமெரிக்காவை கண்டு பிடித்தான்.



ஏகாந்தம்.

இரு விழிகளென விரிந்த
இவ்வுலகின் எதுவொன்றும்
இதுவென்று தெரியாத
ஏகாந்தம்.

குளிர்முலை கிடைக்காத சிசு
பசி கொண்டழுத பின்னர்
இருள்படியிறங்கியதில்
இதமாக உறங்கும்
ஏகாந்தம்.

நிழலென ஒரு விரல்முனை
நீறுதற்கொரு நீர்த்துளி
வாயுவை புரவி பண்ணி சாடாமல்
காத்திருந்து காத்திருந்து
கரைந்த பின்
ஏகாந்தம்.

பூக்குமொரு மலரின்
புள்ளியை பற்றியேறி
காய்க்கிற புதிரை காதில் பேசும்
நீ என்ன
என் ஏகாந்தத்தின்
எதிரியாகிறாய்,
என் கண்ணே, கண்ணம்மா
நீயேன் எனது கண்ணீராகிறாய்?

Wednesday, May 23, 2012



' தெய்வத்திண்டே விகிர்திகள் ' என்று ஒரு மலையாள படம். லெனின் ராஜேந்திரன் இயக்கியது. ரகுவரன் என்கிற கலைஞன் நடிக்க பின்னணியில்  மதுசூதனன் நாயரின் கவிதை. அதன் அர்த்தத்தை மற்றவருக்கு சொல்ல முடியுமா என்ற ஆற்றாமையில் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.  மற்றபடி இதில் பாண்டியத்துவமும் இல்லை. செய்த காரியத்தை நிறைவாய் செய்ய முடியவும் இல்லை. மலையாளம் தெரிந்தவர்கள் மன்னிக்கவும்.



இருளின் மஹா நித்திரையில்
இருந்து எழுப்பி நீ
நிறமுள்ள ஜீவித பீலி தந்தாய்
எனது சிறகிற்கோர் ஆகாயம்
நீ தந்தாய்
நின் ஆத்ம சிகரத்தில் ஒரு
கூடு தந்தாய்

ஒரு குட்டி பூவிலும்
கடல் காற்றிலும்
நீ நீயாய் மணப்பது
எங்கு வேறு
உயிர் உருகுகையில்
ஒரு துளி தவறாமல்
நீயாகவே நகரும் நதி
எங்கு வேறு
கனவின் இதழாய்
உன்னை பரப்பி
நீ விரிய வைத்த ஒரு ஆகாயம்
எங்கு வேறு

ஒரு குட்டி ராப்பறவை
அழுகிற போதும்
முன்பிருந்த அருவியொன்றின்
தாலாட்டு தளரும் போதும்
கனிவினால் ஒரு கல்
கனி மதுரம் ஆகும் போதும்
உன் இதயத்தில் நான் எனது இதயத்தை
பொருத்தி இருக்கிறேன்
உன்னில் அபயம் தேடி போகிறேன்

முடியாது விலக

முடியாது விலக
உன் இதயத்தில் இருந்து என்னை
எந்த சொர்க்கம் அழைத்தாலும்
உருகி நின் ஆத்மாவின் ஆழங்களில்
வீழ்ந்து ஒளிரும் போது தான் சொர்க்கம்
உன்னில் கரைந்து அழிவது என்
நித்ய சத்தியம்






Tuesday, May 15, 2012

kavthai....kavithai?

சரி சரி
மலைகள்  நிமிராமல் 
பூக்கள்  மலராமல் 
அலைகள் குமுறாமல் 
நிலவு  பொழியாமல் 
எப்படி இது?

ஒரு புன்முறுவலை  தட்டி  விடும்
நகைச்சுவை  திருப்பம் 
இல்லனா அறிவியல் துணுக்கு 
மினிமம் 
விடுகதை  கூட 
இல்லாம?

பெண்  சிரிக்கவில்லை 
இதயம் பிளக்கவில்லை 
எப்டிம்மா?

என்னை 
அஜீரணத்தில்  நெளிய வச்சு 
உன்னை
பசியிலே  இருக்க  வச்சு
அந்த வரிகள்  செல்வது  தான் 
எங்கே?

அடுத்த  யுகத்துக்கா?
நீ உதிர்த்த ஒற்றை சொல்லின் முலை குடித்து தூங்காதிருந்து தூங்கி போன அந்த தினங்களுக்கு திரும்ப விரும்புகிறேன். மயில் பீலி கற்பனை முடிந்திராத அந்த பளிங்கு தினங்களுக்கு.கசடு கலவா கண்ணீர் ஸ்படிகம் தித்தித்த தினங்களுக்கு.வாழ்வின் வீதியில் புருஷனோடும் குழந்தைகளோடும் சலிப்பு வாங்கி திரும்பும் உன்னை சந்திப்பதற்கு முன்னே.