Thursday, July 26, 2012

உறவுக்கு கை கொடுத்து
உரிமையை எல்லாம் விட்டுக் கொடுத்து
எப்பவும் போடோக்கு சிரித்து
எல்லாருக்கும் அழைப்பு விடுத்து
நட்பும் சுற்றமும் சூழ
வாழ்வாங்கு வாழ்வதற்கு நடுவே
எப்பவும் வெளயாடறோம், இல்ல
சும்மா

இருந்தாலும் இருந்துக்கிட்டிருக்கு
கத்தி.

Tuesday, July 17, 2012



முன்ன எல்லாம்
சதுரவட்ட கிராப்பு ஜிப்பா
ஹிப்பித் தல கலஞ்ச தல
ஸ்பன்னு சோலாப்பூர்
ஹவாய்
சுஜாதா பாலசந்தர்
கம்யுனிசம்
ஏமாந்தா ஒரு ஓரமா
ஜீன் பால் சாத்தரும்
கூட

கொஞ்ச நாள் முன்ன கூட
மனிதாபிமானத்த வச்சுகிட்டிருந்தமே சார்

இப்ப
நேர்மை.

Saturday, July 7, 2012




நீ எவ்வளவு அழகு தெரியுமா என
காக்கையை
பாட்டு பாட சொல்லிக் கேட்ட
நரி வயிற்றில் ஊறிய
பசி
குளவிக்குள் குருவிக்குள்
குடல் புரளும் சகல ஜீவனுக்குள்
பற்றிப் பரவி
வளர்ந்து நின்று
வனமேகிய வரிப்புலியாய்
உலவுவது பார்ப்பாய் எனில்
என் பசியை எப்படி வெறுப்பாய்



கூனனின் முதுகு போல
ஒட்டிக் கொண்டிருக்கும் வாழ்வு விழைவது
கொஞ்சம் அல்பத்தனங்களை மட்டுமே

மலையை புரட்டி தள்ளிக் கொண்டிருந்த
போதும்

கூட்டில் இருந்து விழும் தேன் சொட்டு போல்

பூவின் பேரை யோசிக்கு முன் எரிகல் மறைவது போல்

கண்களை பிளந்து உன்னை விழுங்கத் துடிக்கும்
இக்கணம்

நாளை காற்றில் ஆவியாகிப் போகும்
மது.


 

Wednesday, July 4, 2012






இந்த நகரம்
யார் இதன் உடமையாளன்
கண்காணிப்பாளன்
இந்த விசை எங்கிருந்து
கிளம்பி சென்று
நிலக்கடலை விற்று கோடீஸ்வரன்
நடிகனாகி முதல்வர்
ஆள் பிடித்து கொடுத்து ஆள்
ஒரு எல்லுக்கு ஒரு கொலை
பொறுக்கி இல்லையா போலீஸ்
ஆன்மீக பேரருளுடன் சைய்டில்
பெண்வணிகம்
பொந்துக்கு வெளியே இருக்கும்
பனிக்காட்டில் பூந்து
நான் யாராகவும் திரும்பலாம்,
நீ யாராக நிற்கிறாய் சொல்லி விடு
    



 

Friday, June 29, 2012




வர்ணம் பூசவில்லை
இலக்கம் எழுதவில்லை
முக்கியமாய் பெயர் பலகை
மீசை முறுக்கவில்லை

யாரும் வழி சொல்லி விட முடியாத
இடத்தில்
இவ்வீட்டை சாத்திக் கொண்டு
திறக்க சாத்தியமுள்ள கதவை
திரும்பிப் பாராமல்
நீவந்து கதவை திறப்பாய்
என்று காத்திருக்கிறேன்

ஏன் என்றால்
நுழைய வேண்டியிருப்பது
உனக்குள்ளே
நான்.



நீங்கள்
விளிம்பில் தானே நிற்கிறீர்கள்

நீங்கள் என்றால் அது நானில்லை
உங்களுக்குள் வெள்ளம் முட்டும்போது
நான் கரையுடைவதில்லை
எனக்கு கிடைக்கும் பருக்கைகளை
நீங்கள் கணக்கிடுவதுண்டா
என்று திடுக்கிடுவதும்
வழக்கம்

என்றாலும்
உங்களுக்கு உதவி செய்ய
அவா.

அல்லது
ஒழித்து கட்ட
வெறி

ஏனென்றால்
விளிம்பில் தானே நிற்கிறீர்கள்
பத்தாததுக்கு
விறைத்துக் கொண்டும் நிற்கிறீர்கள்

Thursday, June 28, 2012




நீயும் நானும் துண்டு வானங்களை பார்த்து
கம்பிகளை கடித்து கலகம் பண்ணி வைக்கிறோம்

தாண்டிக் குதிக்க முடியாத சட்டகங்கள் பற்றி
நமக்கு தெரியாதா என்ன

என்றாலும்

சொல்லில் சிக்கிய பூ ஜடமாயிருந்தும்
சொல்ல தூண்டும் ஒரு சின்ன புள்ளியை
நிறைத்திருக்கிறது
காயம் பட்ட புழுவின் வலி

ஏன் நான் உன் மார்பில் புதையக் கூடாது?



தும்பியின் வாலில்
நூலை கட்டி
காத்தாடியாக்கி விளையாடி இருப்போம்
அப்ப

கடவுளுக்கு எதிராக விளையாடாதே
என்றிருப்பார்கள் நம் அம்மாக்கள்

இல்லை

நாம்
கடவுளுக்கு எதிராக விளையாடவில்லை
கடவுளைப் போல விளையாடுகிறோம்.   



என்ன
பார்க்கிறாய்

நான் தான்
நானே தான்

மாறியிருக்கிறேன்
இல்லை?

என்ன செய்வது
என்னை கைவிட்டுவிட்டு
உன்னில் தொற்றிக் கொண்டிருந்தேன்
விதைக்காமல் விளைவிக்காமல் அறுக்காமல்
நின்றிருந்ததில் வந்த பசியின்
களைப்பு

நஷ்டப்பட்டாலும் நஷ்டமில்லை
நன்றாய் இரு, போ !



என்ன
புகார்

வாழ்க்கை
சில சந்தர்ப்பங்கள்
கொடுத்து பார்க்குமாம்
கேட்டுக் கொள்

காலம் ஒரு முகம் புனைந்து
கடுகடுக்கையில்
நீ மனிதர்கள் பற்றி
அறிந்து கொள்கிறாய்
ஹா ஹா ஹா

நம்பிக்கைகள் என்றால்
அடி அதன் மீது தான் விழும்
சரியா
அப்புறம் வலியை பற்றி பிதற்றாதே

வளர்கிறாய்
என்று விடுவோம்.
 

Saturday, June 23, 2012







தாழிடப்பட்ட
அறை

அடைந்து கொண்ட
கண்கள்

செவிகளின் உள்ளே
கோடி மைல்களுக்கு அப்பால்
அலைகள்
கடல் அலைகள், ஓங்கிஎழுந்து
பதறி பதறி
தன் நெஞ்சை கொண்டு பாறையில்
மோதி பிளக்கும்
அலைகள்

யாராவது வரக் கூடும்
என்னவென்று கேட்கக் கூடும்

பாய் விரித்து தலையணை வைத்து
படு மரியாதையாய் என்கிறேன்......

 



உணர்வு..!


ஒரு கோப்பையில் கரைந்து போகுமென்றால்
நினைவுகள் இரக்கமுள்ளவை
லஹரி நெம்புமொருஉறக்கத்தில் மறந்து போகுமென்றால்
அவை அடக்கமுள்ளவை
எரியும் குடல்களின் இழுவையில்
செரித்து கழிவாகுமென்றால்
சுலபமானவை

ஹே......

அப்படியா

பசிக்கு உணவு
கால்களுக்கு பக்கத்தில்
இருக்கை
எப்போதும்
தலை வருடி தந்து
நான் என்னையே வளர்த்துக் கொண்டது
அல்லவா?

உன்னை துரத்தினால்
நான் காணாமற் போவேன்......
 

Friday, June 22, 2012

இன்று வானிலை எப்படி

காலையில் கிடைத்தது பரோட்டா தான்
வயிறு சரியில்லை

வீடு கிடைக்குமா
ராசியில் கோளாறு







கமலா சௌக்கியமா
விமலா சௌக்கியமா
இவங்க ரெண்டு பேர தெரியலேன்னா
அமலா சௌக்கியமா

ட்வல் பி வராது
இருவத்து மூணு சீ போவாது
மஞ்சு வழுக்கி விழுந்தது
தீம் பார்க்குல தானே

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ஒண்ணும் ஒண்ணும்
பதினொண்ணு
பதிநோண்ணும் பதிநோண்ணும்
ஆயிரத்தி நூத்தி பதினொண்ணா

போயிட்டு வரேன்
வர்ற அப்பவாவது சொல்ல முடியுமா
பாக்கணும்  

 



எல்லாரும்
மூடிகிட்டு தான் போறாங்க
அமைதின்னு சொல்லிட முடியுமா
அத
அப்ப அப்ப அங்க அங்க
கூட்டம் கூடிடற மாதிரி தான் இருக்கு
புரட்சி ன்னு தான்
புல்லரிச்சுக்க முடியுமா

இருந்தாலும்
எழும் சிறு பொறி மிகப் பெருந் தீயாய் ன்னு சொல்றது
அறிவியல் மாதிரி
படலே?


ஒரு
பயணம் தானே எல்லாம்

ஒற்றையாவோ
ஊரையே கூட்டிக்கொண்டோ 

புத்தன்
என்ன கொண்டு போயிருப்பான்
என்று தெரியாவிடினும்
தங்கத்தை அள்ளி வரப் போனவர்கள்
என்ன வைத்துக் கொண்டு
இருந்திருப்பார்கள் என்பது நமக்கு தெரியும்.

கருவிகளின் முகம் மாறியிருக்கலாம்
கணக்கில் இருப்பது தானே
எல்லாம்?


பசி
புரியாது

சிரிச்சுட்டு
நகர்ந்து விடலாம்

ஆத்மா நஷ்டபடுவதை
சொல்ல முயன்றான்
ரித் விக்

வாழ ஆசையை இருக்கிறது
என வீறிட்ட குரல்
யாருக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறது
இப்போதும்?

Thursday, June 21, 2012




எனது சிறகுகள்
ஒய்வு காணும் வரை
உன் வானை எங்கனம்
குடை மடக்க முடியும்
எனினும் 
ஒரு மிடறு தீயை
விழுங்கி முடிப்பதற்குள்
திரும்பி வா...



உன்
விழிகளுக்குள் எட்டி பார்த்து
வீழ்ந்த பின் அறிந்தேன்
பறந்து கொண்டிருக்கிறேன்
என்று -
உன்னுள்
விரியுமொரு
வானை அறியாமல்
எங்கே விடை கொடுக்கிறாய்?

Sunday, June 17, 2012




திரைக்கதை


புழங்கு மொழியில்
சிறிய பொறி தான்
அது

பற்றியெரியும் வனமென
துவங்கும்

தானே தன்னை கைவிட்ட முட்டுசந்தில்
பிரும்மாண்டமான சாலைகளை பரப்பி பார்த்து
உடல் குறுக்கி நடக்கக்கூடும்
தேய்மானம் போன
ஒற்றையடிப்பாதையில்

யோசித்து பாரேன்
இப்போது துடித்து தெறித்து
யாருமறியா இருளில் பறிக்கிற
சினை முட்டையை

கருவில் இருந்துகொண்டு
கதையை
கதையில் இருந்து கொண்டு
முகங்களை
முகங்களில் இருந்துகொண்டு
வாழ்வை அறி

சொல்.