Thursday, August 9, 2012

சொல்லுவேனே
அது அல்ல
நினைத்துக் கொள்ளுவேனே
அது அல்ல
நீ நினைக்கிறாய் என்று
காட்டிக் கொள்ளுவேனே

அதுவும் அல்ல
நீ நினைக்க வேண்டும் என்பதற்காக
நிறுத்திக் கொள்கிறேனே
அது அல்லவே அல்ல
காரல் மார்க்சை முழங்கும் போதும்
காதலை சொல்லி விதும்பும் போதும்
நிலா ரசிப்பதாய் பீத்தும் போதும்
நிலைக் கண்ணாடியில் நிரவும் போதும்
எங்கேயும் இல்லாம இருந்து
எல்லாமா பொங்கி பெருகற இந்த சுழலில்
நான்னு ஒண்ணு இருக்கா சொல்லு
ஞானத்தங்கம்?

Monday, August 6, 2012

இருப்பா தம்பி
கொஞ்சம் இரு
உனக்கு எல்லாம்
மனப்பாடம்
என்று தெரியும்
பாசிடிவ் திங்கிங்
போகும் பாதையில்
பார்க்க என்ன உண்டு 
யார் நெல் விதைத்த பூமியிலும்
ஓடுபாதை அமைக்கிற
உன் சாமர்த்தியமும்
சரி
கள் வேணா
கவித வேணா
கடவுளும் காண்டம் போல
பாலிதீன் கவர்ல
லவ்வ  லவுட்டின ஸ்பீட்லையே
சம்பாதிச்ச எதிரி
எங்கெங்கும்
இருந்தாலும் தேசபக்தி முத்த
ப்ப 
பாத்து செய்யி

மனுஷ உயிருங்கப்பா.

Friday, August 3, 2012

முதலில் சொல்லி விடுகிறேன்
எந்த வரியும் கோர்வையா
கூடாது
கேள்விப்படிருக்காத வர்ணத்தில்
மலர் கொய்து எடுத்து அடுக்கு
இரட்சணிய யாத்ரிகம் குணங்குடி பாய்
என்று மேய்ந்து பின்னர்
குடும்ப வாராந்தரி க்ளிவேஜ்
எழும்பி நிற்கும் மதிய காமமும் அக்கா என்று
அழைக்கப் படுபவளின் வில்லுடலும்
அடக் கருமமே என பிசுபிசுக்கும்
சுய கிளைமாக்சும் கொஞ்சம் முற்போக்கு
தவ்ளோ நற்போக்கு
மலை கடல் நிலவு மயிரு மண்ணாங்கட்டி
பொயடிக் பிளேவர் மிக்ஸ் பண்ணி
பில்ட்அப் கட் அவுட் தெரியாம
பைனல் டச்சு
வெச்சுட்டா
வந்த்துர்ச்சே

வி