Thursday, July 23, 2020






அந்த புகைவண்டியில் எங்கிருந்து ஏறினேன் என்று
தெரியவில்லை. யுகங்களுக்கு அப்புறம் எங்கே இறங்கிக்
கொண்டேன் என்பதும் தெரியவில்லை. கனவு தான்
என்றாலும் கூரையில்லாத அந்த நள்ளிரவின் 
நடைபாதையில் விண்மீன்களை வெறித்து
மல்லாந்திருந்த போது 
கனவு காண விரும்பும் ஒருவனின் மனம்
ஆயிரம் காதம் தூரத்தில் இருந்து வருடின கண்களின்
வெம்மையில் புகுந்து கொண்டது பார்த்தேன்
அந்த இரவு முடியவில்லை. விடியவில்லை,
அவனுக்கு விடுதலையில்லை.

அவளது புகைவண்டி கிளம்பி வந்து
அவள் மட்டுமே அவனை எழுப்ப முடியும்.