Monday, November 6, 2023

 



மூன்று 



அவளை எனக்கு தெரியும் 

உலகின் நியாயங்கள் 

கணக்கற்றுத் திரளும் போது

கவனிக்க ஆகாத விஷம்

நாம் வெளிச்சம் பாய்ச்சாத 

இடுக்குகளில் தங்குகிறது

சாமனின் மேல் அம்பு எய்யப்பட்டதற்கு

முட்டுக்கட்டப்பட்ட லாஜிக்கில்

இருந்து வந்தவர்கள் 

எப்போதும் எனக்கு ஆறுதல் கூறுகிறார்கள் 

நானிருப்பது உள்ளேயா, வெளியேவா 

பார்த்து சொல்லு என்கிறாள். 


அவள் நான் உருவாக்கிய ஒரு 

கதாபாத்திரம் தான்

 


நான்கு
பரணில் இருந்தோ
பாதாளத்தில் இருந்தோ
ஒரு சரளைக்கல்லை
நான் எடுத்துக் கொடுத்து அவர்கள்
அதை விற்று
சாப்பிட்டதில்லை
ஏதேதோ வாழ்வுகளின் திருப்பங்களில்
நானறியாமல் புகை போல இருந்து மறைந்ததற்கு
கோப்புகள் பாராமரிக்கிற மரபில்லை
என்றாள்
அவளை எனக்கு தெரியும்
அவள் நான் உருவாக்கிய ஒரு கதாபாத்திரம் தான்
தனிமை பற்றின பேச்சில்
அத்தி மரத்தின் உச்சியில்
தேன் மினுங்கும் ஒரு கனியைக் காட்டியபோது
ஸ்கூல் பையன் எட்டி உதைத்த காலி குளிர்பான டப்பாவை
பார்த்திருந்தாள் அவள்.
All reactions:
Kaveri Ganesh, Cecilia Joseph and 8 others