Monday, June 25, 2018





அரிச்சந்திரன்
வெறித்திருக்கக்கூடிய
எரிகிற சடலம்
புரியக்கூடுகையில்
அந்த மழைக்காடு மணத்து
நீரிலிருந்து எழுந்து பறந்த ஒரு குமிழாகவே
காதோர மயிர்களை நீவிய காற்றில்
தாயின் இதயத்தைத் தட்டில் வைத்துக்
கொண்டு வந்தது போல் இருந்து விட்ட
ஒரு ஜென்மாந்திரப் பிழம்பு
பாயைப் போட்டு பக்கத்தில் கொசுவத்தி வைத்து
காண்டத்தில் பொத்தலுண்டா
என்று பார்க்கும்போது
நாம் வெறிப்பதற்கும் இரண்டு சடலம்.

என்னா ஜூஜூப்பிடா நம்ம கொக்கரிப்பெல்லாம்

Wednesday, June 20, 2018







அவசரம்
அடுப்புக்கு நின்று திரும்பி
அஞ்சறைப் பெட்டியை
நகர்த்திய போது
தூணுக்கு அருகிலிருந்து
பார்க்க முடிந்த
ஒரு துணுக்கைப் போன்ற
அந்த ஒற்றைப் பார்வையில்
தண்ணீர் வேண்டுமா என்று கேட்க சென்று
விரலறிந்து
வீட்டை விட்டு வந்து விவரமறிந்து
பெற்ற குழந்தையின் கழுத்தை நெறிக்கத் துணியும்
காதலில் ஒரு துளி தான்
மரம் சுற்றும் பிப்பிலிப்பி, எனவே மாக்காள்
அலட்ட வேண்டாம்.
அலப்பறை வேண்டாம்.
நாங்கள் சினிமா எடுக்கிறோம்
நீங்கள் மேதைகளாயிருங்கள்