Thursday, June 13, 2013





புத்தி வளந்த பிள்ள மாதிரி
நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள
வேண்டியதாயிற்று
எல்லோரையம் போல
என்றாலும்
புரு புருவென
வலி துளைக்கும் சந்தில்
நேற்றைய வெண்திரை அசைந்தால்
வெறுக்கிறாய் மறுக்கிறாய்
பூவென அசட்டையாய் சுழியும்
கீழுதட்டின் மறைவில்
அழைக்கிறாய்
கண் மூடியுண்ட கள்ளின் முள்
தொண்டையில் குத்த
பொறுக்கியது
கோடி சொற்கள்
ஏறி இறங்கின மலைமுகடு
இருளில் கொதித்த மழைக்காடு
பாடித் தீராத பாடல்களோடு சேர்ந்த
கண்ணீ ரோடிக் கலந்த
பெருங்கடல்

யாரும் காண வேண்டியிராத காட்சிகள்
எல்லோருக்கும் தனித்தனியாய்
என்று முடிப்பது ஒரு
எது?

Monday, June 10, 2013

புரசவாக்கம்
சூப்பர் ஸ்டைல் கட சீட்டில்
சவரம் முடிவதற்குள்
வந்த அந்த கனவு தானென்ன
வென
குடையும் போது
நண்பர்களை விலகி
என்ன
குடலில் துவர்க்கும் விஸ்கி
விழிப்பை செருகி
வலியாலொரு இரவை
அடித்து கம்பி நீட்டிய மலை விளிம்பில்
டால்ஸ்டாய் போலொரு ஆள்
அல்லது
மொபிஸ்டோவின்
துணை நடிகன்
என்னவோ என்னை விட்டு
எனக்கு விசிறி வீசுபவனிடம்
ஒரு சூத்திரத்தை மந்திரம் முழங்கி
போனது தான்
ஏன்
ராஜகுமாரா
சாம்பியன் டேனி
ஆனா கவுனி போ . ஸ்டேஷன் ல
வலச வரும்
பாருண்ணி சேட்டா
நான் யாருன்னு சொல்லுங்கன்னு
போவும்போது
ஒத்த வார்த்த மிஸ்சாயி நவுந்து
தொடக்கமிலாம தொடர முடியாம
இன்னும் ஒரு கவித எழுதலே
ஏலேலங்கிளியே

Thursday, June 6, 2013





என்ன இப்போ

முன்ன
பத்து தெரு தள்ளி

காலத்துக்கு
என்ன செல்லுபடியோ
அந்த வேஷத்துல
இருந்துருப்பேன்

என்னாலே
கண்டு பிடிக்க முடியலே
பல பேர
தப்பில்லே
தல மறவாயிட்ட என்னையும்
பல பேராலே
கண்டு பிடிக்க முடியாது

நான் பச்ச
அதோ மஞ்சா
ப்ளோரசெண்டு ஊதாலே ஆடறவன்
ஒன்ஸ் அபான் எ டைம்
என்ன மாதிரி
செகப்புல
டப்பாங்குத்தியிருக்கலாம்

எப்பிடியோ போவுது
மண்ணுல இருந்துக்க
மனுஷ புத்திரன்களுக்கு
ஆயிரம்
அடவு
சொல்ல வந்தது என்னன்னா
நெஞ்சுள்ள சொருவி வச்ச
ஒரு கத்தி மட்டும்
எப்பவும் எப்பவும் எப்பவும்
எப்பெப்பவும்

ங்கோத்தா
நீ.   

 

Tuesday, June 4, 2013






அத்தனை
களிப்பாண்டங்களும்
சலித்துப் போக வேண்டும்
பொன்னுலகில் ஊஞ்சலாடும்
உறக்கக் குழந்தையின்
சலிக்காத தாய் முலையாய்
எப்படி ஆகலாம்
நீ

உதிர்ந்தால் காய்ந்து போகும்
ஒரு அற்ப வாழ்வை புரட்டி பார்த்தவாறு
பாவம் பாவம் இந்த 
பாமரம்.