Thursday, December 23, 2021

 


மாசறு பொன்

கடைசியாக மறையும்போது 

மின்னிய ஒளி 

ஒரு ஆயுளுக்கு தங்கியது 

அது பூவிதழ் பாதமா 

புன்னகை இதழ்களா 

தலை கீழ் கருஞ்சுடரா 

நிழல் பொழியும் 

நிலா சிதறும் 

கண்கள் தானா, அவற்றின் 

கருமணிகளா


பாம்பா 

கயிறா


ஒரு பெரு வெடிப்புக்கு அப்புறம் 

வாழ்வின் வெளி விரிந்தவாறிருக்கிறது