Tuesday, May 25, 2021

 


நலமாயிருக்கிறேன் என்பதைக் கேட்டு அதிர்வதற்கு

நலமாயிருக்கிறாயா என்று கேட்பது வழக்கம்

அவளுக்கு

பக்கத்தில் தான் இருக்கிறாள்

எனக்கு வாகாக பக்கத்தில் தான் மனதையும்

எடுத்து வைத்திருக்கிறாள்

கண்களும், கண்களின் வாஞ்சையும்

காது மடல்களும், கன்னக் கதுப்புகளும்

இதழ்களும் எடுக்க நான் தட்டப் பொத்தான்களுண்டு

அவள் பறக்க விரும்புகிறாள் ஆழத்தின் ஆழத்தில்

அது ஆப்டரால் யோனியெல்லாம் கடந்து பறந்து 

ஜீவனின் மொட்டு கசக்கி அதன் தேன்துளி எடுத்து 

ருசிக்கக் கொடுத்து

நீ ஒளிர்வதை பார்க்க வேணும்

என்கிறாள்

ஒளிர்வது தாங்காமல் நீ ஒழிவதைப்

பார்க்க வேணும்

பரஸ்பரம் குத்திக் கொள்ள

இரண்டு கத்திகள் கூட இல்லாமல்

இது என்ன காதல்

என்கிறாள்.

 

கண்ராவி, காதல் கவிதைகளையெல்லாம்

இந்த மக்கள் எப்படி எழுதுகிறார்கள்

என்று கேட்கிறாள்.