Thursday, December 24, 2020

 என்னைப் பார்த்த கண்களில்

நான் கண்டறிகிற ஒரு நூலேணி

உண்டு என்றான்

அது முதலில் நம்மைத் தீண்டும் கரம்

அது அப்புறம் இரண்டு முலைகளிலும் விறைத்த காம்பு

என்னில் இருந்து அறுந்து

இறங்குந்தோறும்

உலை கொதிக்கிற இதயத்தின்

அனல் மோதி வெந்து கொண்டிருக்கிற

தூய இறைச்சியின் மணம்

அவன் நூலேணியைப் பற்றிக் கொண்டு ஏறி திரும்பப் போவதில்லை

பரவாயில்லை,

நான் இங்கே சார்த்தரின் இருத்தலியல் தான்

பேசிக் கொண்டிருந்தேன்

என்றான்