Tuesday, August 10, 2021

 


ஒரு மாவிலை நரம்பை இந்தக் குழந்தை 

நிரடிக் கொண்டிருப்பது போலவே 

மலையில் இருந்து நகரும் மூடுபனியில் 

அவள் துழாவுகிறாள் 

வாழையிலையை பிரிக்கும்போது ஆவி மணக்க 

அடையின் நறுமணத்துடன்

ஒளி குறைந்த அடுக்களையில்     

கட்டியணைத்து முத்தமிடும் அம்மாவுக்கு

ஒரு மனம், அதற்கு ஒரு மணம், அதைக் கடந்தால் அங்கே 

தோட்டம் முழுக்க விடியலின் மணம் பிடித்து 

காளான்கள் நிற்க, மரவட்டைகள் 

ஊரும் 

கிணற்றின் நீர் கவிழும் வாய்க்கால்களில்  

சலசலக்கிறது, அவள் தனது பாதங்களின் வடிவை 

பெருமிதித்து முன்னேறுகையில்

ஒரு யுகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கையில்  

கருத்த தென்னையின் பக்கவாட்டிருந்து 

ஒரு பயலின் புன்னகை, 

பால் ஊற்றுவதை நிறுத்துகிறார்கள்

ஷைலஜாவின் மூச்சு நின்றதை பார்த்தேன் 


குழிக்குள் இறக்கி மண்ணள்ளிப் போடும் போது கூட 

அந்த சிரித்த முகத்துக்கு வியந்திருந்தார்கள்.