Tuesday, February 2, 2021

 


மனம் தொட முடியாத 

அடிவானம்

பொன்னைப் பிழியும் போதிலும் 

அதை நோக்கி செல்லும்  

மறதியின் சாலையில் 

பெயர் தெரியாத மரங்களும் 

பெயர் தெரியாத பறவைகளும்

மயக்கத்தையே நிலை குத்துகின்றன 

உள்ளத்தைத் தொட்டு சென்ற கானத்தின்   

ஓரிரு வரிகள் பாசி விலகும்போது 

உதடுகளைத் தொட்டுச் சென்ற உதடுகளின்

மேலடுக்கில் 

குழிந்து கூர்ந்த விழிகளை பார்த்த கணம் 

நெஞ்சில் உதைக்கிறது, 

அதற்கு என்ன பொருள்,

அந்த உண்மை எதற்கு மலைச்சரிவில் 

வழுக்க வேண்டும்?

அள்ளிக்குடித்து முகம் கழுவ 

கேள்விகள் எப்போதும் காணாசுனையாக 

இருக்க வேண்டும் என்றில்லை,

அது ஒருவேளை 

ஆடம்பர உணவகத்தின் முன்னே நின்று 

கரம் நீட்டுகிற எதோ சிறுமியின் 

தரித்திரம்.