Saturday, March 10, 2012

சர்வைவல் ட்டூ பிட்டஸ்ட் - (2)




தரணி

பூ வைத்த பூவைக்கு
பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும்
ஈக்கள் சொந்தமா
ஐ லவ் யு, ஐ லவ் யு,
ஐ லவ் லவ் யூ,

ன்னு வர்றது, முன்ன வந்த பாட்டு தானே. அத அக்கக்கா பிரிச்சு போட்டு ரெண்டு பேரும் பேசிக்கிட்டுருந்தாங்க. சூப்பர் கவிஞன்னு  ஆளுக்கு ஆளு மாறி மாறி பாராட்டு மழை. வெள்ளையும் சொள்ளையுமா இருந்த அரக்கோணம் கட்சிக்காரருக்கு என்ன ஆச்சிரியம்ன்னா ஒரு வரில பூக்கள்ன்னு வருது. அடுத்த வரில ஈக்கள்ன்னு வருதுன்னார். ரைட்டர் அத கண்டுக்கல. அவுரு பிரம்மாதம்ன்னு சொல்றது 'பூவைத்த பூவைக்கு !' ச், ச், ச், என்று பல்லிசத்தம் போட்டுட்டு எங்கள பாத்தாரு.

நானும் ஸ்டீபனும் ஜட்டியோட ஒரு மூலைல உக்காந்துகிட்டிருந்தோம்.

என்ன பண்றது கஷ்ட காலம் . ரெய்டுக்கு வந்த போலீசுல ஒர்த்தன் ஜமுனாவோட சூத்து மேலே தட்டி பாத்தான். சடார்ன்னு நாங்க ரெண்டு பேரும் கைல கால்ல விழுந்து கத்தவே அவ இப்போதைக்கு தப்பிச்சுட்டா. ஸ்டீபனும், ஜமுனாவும் லவ்வர்சுன்னு நான் ஸ்ட்ராங்கா சொல்லிட்டேன். மூணு பேரும் சாமி கும்பிட கோயிலுக்கு வந்துட்டு, அப்படியே ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ற விஷயமா டிஸ்கஸ் பண்றதுக்கு ரூம் போட்டோம்ன்னு சொன்னேன். டேய், இவன் கிறிஸ்டியன் தானே. இவன் எப்டிடா முருகன கும்புடுவான்னு கேட்டப்ப ஸ்டீபன் எம்மதமும் சம்மதம்ன்னு சொல்லிட்டான். இருந்தாலும் விட்டாங்களா?. லாட்ஜ்ல புடிச்ச பெரிய கூட்டத்தோட சேத்து எங்க எல்லாரையும் கொண்டு வந்து, ஜமுனாவ சபுளுங்க கூட அங்க உங்கார வச்சுருக்காங்க. எங்க ரெண்டு பேரு மேல அடிதடி கேசும், அந்த பொண்ணு மேல விபச்சார கேசும் போட்டாச்சு. சட்டம்ன்னா அப்படிதான். நீங்க நிரபராதிங்கன்னா மூணு பேரும் உங்க பேரன்ட்ச இங்க வரவைங்கன்னு சொல்றாங்க. அது எப்டி, நாலு மணி வாக்குல கோர்ட்ல கொண்டு போய் நிறுத்தி சப் ஜெயில்ல போட்ருவாங்களாம்.





ஸ்டீபன் தான் பாவம், தல மேல கைய வெச்சு உட்காந்துக்கிட்ருக்கான்.

தீடிர்ன்னு ஒரு பரபரப்பு. ரெண்டு மூணு வக்கிலுங்க வந்தாங்க. ஏற்கனவே நாங்க அதுக்காக தான் எதிர் பாத்துகிட்டுருந்தோம். டிக்கெட்  பாக்கெட்ல இருக்கற பைசாவ நான் எடுக்கல. மத்தத எல்லாம் ஸ்டீபன் கூட சேந்து அள்ளி குடுத்தேன். ஸ்டீபனோட ரயில்வேகார்ட-ஐ  லாயர் வாங்கி வெச்சுகிட்டாரு. ஏற்பாடு என்னன்னா பணம் நெறைய செலவாவுமாம். இப்போதைக்கு மூணு பேர வெளிய கொண்டு வர்ற செலவ அவரு பாத்துக்குவாரு. வெளில வுட்ட ஒடனே வீட்டுக்கு போயி பணத்த கொண்டு வந்து செட்டில் பண்ணிட்ட பெறகு கார்டு, வாச்சு, மோதிரத்த எல்லாம் வாங்கிக்கலாம்.

ஆனா திங்ககெழம தான் ஜட்ஜ் முன்னால நின்னு மன்னிப்பு வாங்கி விடுதலயாவ முடியும்.

சனி ஞாயிறு ரெண்டு  நாளும் நாங்க ஆம்பள ஜெயில்லையும், ஜமுனா ராணி கிராக்கிங்க கூட பொம்பள ஜெயில்லையும் இருந்தோம்ன்னு சொன்னா போதாதா.


பிரச்சன என்னன்னா எல்லா தலைவலியையும் ஒரு வழியா முடிச்சுகிட்டு ஊரு வந்து சேர்ந்து ஸ்டீபன் அவள அனுப்பி வச்சுட்டு வீட்டுக்கு போயிருக்கான். ஊரே ரெண்டு பேரும் ஓடிப்போயிட்டதா பேசறத அப்பாவும் சித்தியும் கேக்க, அவ எங்க போனாளோ, நான் பிரண்டு கூட சித்தூருக்கு போயிருந்தேன்னு வெலாவரியா கத சொல்லிகிட்டிருக்கிறப்ப ஜமுனா ராணி இவன் வீட்டுக்குள்ளயே வந்துட்ருக்கா. அவ வீட்ல அவள வெளிய தள்ளி கதவ சாத்திட்ருக்காங்க.

 



எப்படியும் கொஞ்ச நாளைக்கு அந்த பக்கம் போயி ஸ்டீபன சந்திக்க முடியாது. அந்த பொண்ணு பாவம். இந்த வீட்ட இருந்தும் அவள வெளிய தள்ளி தான் கதவ சாத்திட்ருக்காங்க. ராத்திரியெல்லாம் அவ ரோடுல நின்னுகிட்டுருந்தான்னு பசங்க சொன்னாங்க. இதில நாம பண்றதுக்கு என்ன இருக்கு. குட்டி செயினும், வாச்சும் போச்சு. ஸ்டீபன் வக்கீல பாத்து பணத்த கட்டி கார்டையும் மத்த விஷயங்களையும் வாங்கினா கூட அத எங்க எனக்கு திருப்பி தர போறான்.

எல்லாத்துக்குமா எண்ண தேச்சி தல முழுகி தூங்கிட்டு நாளைலேருந்து அப்பாவுக்கு ஒத்தாசையா பாக்டரிக்கு போவணும்.

ஆ, வ் ! திருத்தணி முருகா. எல்லாரையும் காப்பாத்துடாப்பா.

* * *

ஜமுனா ராணி

அப்ப முப்பழம் அமுது செய்தருளிய தொப்பயப்பனை தொழ வினை அறுமே. நான் சொல்ற விநாயக ஸ்தோத்திரம் கரக்டா ? அது விநாயக ஸ்தோத்திரம் தானா ? கர்த்தருக்கு தோத்திரம்ன்னுவாங்களேன்னு யோசிச்சப்ப எனக்கு இது தான் ஞாபகம் வருது. அன்னைக்கு லாட்ஜ்ல தரணி என்ன மல்லாக்க படுக்க வச்சு மேல இருந்து செய்றப்ப கூட எதுக்கோ இந்த வரி மனசுல வந்து போச்சு. என்ன தான் செஞ்சோம்ன்னு ஒரு எழவும் ஞாபகமே இல்ல. இருந்தாலும் குளிக்க ஆரம்பிச்சப்ப எரிச்சல். கடிச்சு வச்சது ஸ்டீபனா தரணியான்னு சரியா புரியல. என் வீட்டுல நானும் அம்மாவும் படுத்துக்கற ரூம்ல தான் இருக்கேன்.

என் எதிர்ல ஒரு இயேசு படம். ஒல்லியா ஒரு மெழுகு வத்தி கெடச்சுது. யாராவது வர்ற டைமா பாத்து அத ஏத்திடறா மாதிரி ரெடியா வெச்சுருக்கேன். அம்புலிமாமா கத புஸ்தகத்துல இருந்து ப்ளேடால கட் பண்ணி எடுத்த படம்தான்னாலும் இயேசு கண்ணு என் கண்ணையே பாக்கறா மாதிரி இருக்கு. இந்த சாமி பவரான சாமியோ. எப்படியோ ஒரு வழியா ஊர் பஞ்சாயத்து முடிஞ்சு ஸ்டீபன் இங்க வர வாய்ப்பிருக்கு.





என் அப்பாவும், அம்மாவும் போயிருக்காங்க. அப்பா டம்மி பீசு தான். இருந்தாலும் அம்மா விழுந்து பொரளாம  இருக்க மாட்டாங்க. எல்லாத்துக்கும் மேல தளபதி நாராயணசாமிக்கு எங்க குடும்பத்து மேல ரொம்ப அக்கறை. எங்க சைடு என்ன பிராப்ளம்ன்னாலும் அவரு தான் பஞ்சாயத்து ஹெட்டு. எப்படியாவது பேசி ஸ்டீபன என் கழுத்துல தாலி கட்ட வெச்சுருவாருன்னு நெனைக்கறேன். ஒரு வேள திரேசா ஆண்டியும், அங்கிளும் மதம் பத்தி பேசி அடம் புடிச்சாங்கன்னா நான் கிறிஸ்டியனா மாற ரெடி. எங்கம்மாவே கூட அதுக்கு ஓகேன்னா பாருங்களேன். இப்பவே நான் இயேசு படத்தோடயும் மெழுகுவத்தியோடயும் ரெடியா தானே இருக்கேன்?.

சாரு லதா ஓடி வந்தா.

எல்லாமா சேந்து ஸ்டீபன கிடுக்கிப்புடி போட்டுட்டாங்களாம். எப்பவுமே அநீதிய எதிர்த்து கொரல் குடுக்கற ஸ்ரீவத்சன் சார் அவர  அடிக்கவே போயிட்டாராம். கடசியா கத எதுல வந்து நிக்குதுன்னா ஸ்டீபனுக்கு ஒரே ஒரு தடவ என்ன சந்திச்சு பேசணுமாம். நாலே வார்த்த பேசிக்கறேன்னு மக்கள் கிட்ட பர்மிஷன் கேட்டு இருக்காரு.

வீடு நெறைய கூட்டம் புகுந்தாலும் நான் இருக்கற ரூமுக்கு ஸ்டீபன் மட்டும் தான் வந்தாரு.

உஷாரா நான் அந்த நேரத்துக்கெல்லாம் மெழுகு வைத்திய கொளுத்தி, முட்டி போட்டு, ஜெபம் பண்றா மாதிரி கண்ண  மூடிகிட்டேன். மனசுல விநாயக ஸ்தோத்திரம் தான் ஓடுது. அது மிஸ்ஸாவறப்ப லாட்ஜ் விஷயங்க சினிமா மாதிரி.

"ஜமுனா ராணி"

கண்ண தொறந்தேன்.

என் கிட்ட உன்னப் போய் கட்டிக்க சொல்றாங்க. இது நியாமா?

நான் சிலுவை குறிய போட்டு முத்தம் போடறதுக்குள்ள அவுரு ஆத்ரமா  " நீ அப்புறமா நடி !"இப்ப நான் கேக்ற கேள்விக்கு  பதில சொல்லு. உன்ன நான் மட்டுமா செஞ்சேன்? தரணி கூட தானே செஞ்சான்?" ன்னாரு.





"அவுரு உள்ள வுடல "

"ஆங்? என்னது?"

"ஆமா ஸ்டீபன். நான் ரெண்டு தொடையும் இறுக்கிக்கிட்டனா , அவுரு அதிலேயே தான் செஞ்சாரு. காட் பிராமிசா சொல்றன். அவர் கிட்ட நான் என் கற்ப இழக்கவே இல்ல!".

அவுரு ரொம்ப நேரம் என்னையே பாத்தாரு. நான் மறுபடியும் சிலுவை குறி போட  ஆரம்பிச்சவுடனே "ஓத்தா, நீயெல்லாம் நல்லா இருப்பியா?" ன்னு மட்டும் கேட்டாரு.

போயிட்டாரு..

சே, இதுதான் ஸ்டீபன் கிட்ட எனக்கு பிடிக்காத சொபாவம். ஏதாவது விஷயமா, முழுசா பேசவே மாட்டாரு. பாதில பாதில அப்படியே விட்டுட்டு தன் பாட்டுக்கு போயிடுவாரு. என்ன செய்யறது, சின்ன வயசுல இருந்து அதான் அவரு பழக்கமா இருக்கும் போல இருக்கு.

கொஞ்சம் கொஞ்சமா எடுத்து சொல்லி நான் தான் அவர மாத்தணும். கல்யாணத்துக்கு அப்றமா.

எங்க கல்யாணத்துக்கு தரணி சார் வருவாரா என்னன்னு தெரியல.

* * *


தளபதி நாராயணசாமி

ஆங் , வணக்கம், வணக்கம், வணக்கம். இருங்க என் புள்ளைங்கள அனுப்பி வச்சுட்டு வந்துடறேன். இவன் மூத்தவன். பத்தாம் கிளாசு. இது சின்னது. ஆறாவது படிக்குது.

நம்ம ஜமுனா ராணிய இவங்கள விட சின்ன வயசுல இருந்து எனக்கு தெரியும். அட, என் மடி மேல உட்கார வச்சு வெளயாட்டு காட்டிருக்கேன்னா பாத்துக்கோங்களேன். அவகிட்ட அந்த ஸ்டீபன் பையன் வெளயாட்டு காமிச்சது தப்பு தான்.





அந்த பையன் ஒரு மாதிரி. அவனால நல்லபடி வளர முடியல. அவனுக்கு ஒன்றர வயசா இருக்கறப்ப அவனோட அம்மா மிஸ்ஸிங். மிஸ்ஸிங்ன்னா அவன தூக்கிகிட்டு ஞாயித்துக்கெழம அப்பா அம்மா ரெண்டு பேரும் சர்ச்சுக்கு போயிருக்காங்க. சர்ச் காம்பவுன்ட்டுக்குள்ள இருக்கற மரத்தடியில கொழந்தைய போட்டுட்டு அந்தம்மா அப்பாவோட பிரெண்ட் கூட ஓடி போயிட்டு இருக்காங்க. இந்த பையன் அப்பவே அனாதையாயிட்டான். ரெண்டாவது அம்மாவா வந்த திரேசம்மா நல்ல மாதிரி. அதாவது அப்படி நடிக்கும். பையனுக்கு அத செய்யாத, இத செய்யாதன்னு அந்த கெழவன தன் பாட்டுக்கு ஆட்டி வைக்கும். நீங்களே சொல்லுங்க, நிக்கறத்துக்கு நிழல் இல்லாம, நிம்மதி இல்லாம ஊர சுத்தி வந்துகிட்டிருந்தான் அந்த பையன், அவனுக்கு இந்த பழி வேற வந்து சேந்தா என்ன நடக்கும்? இருக்கற வேலைய தூண்டிலா போட்டு அவசர அவசரமா ஏதோ ஒரு பொண்ண கட்டி வெச்சாங்க. அதுவும், அவளோட அம்மாவும் சேந்து அன்பா இருக்கறோம், பண்பா இருக்கறோம் அவங்க வீட்லேயே சேத்து வெச்சுகிட்டு, பின்னால ஏதேதோ பழிய சொல்லி கடசியா பொறந்த கொழந்தைய கூட அவனுக்கு காட்டல. அவன் வேற ரயில்வேல திருடி மாட்டிகிட்டானாம். வேல போயி, ஊசி அடிச்சு சுத்திக்கிட்டுருந்தவன் நுங்கம்பாக்கத்துல பிச்ச எடுக்கறப்ப யாரோ பாத்துருக்காங்க. உண்மைய சொல்ல போனா இப்ப அவன் உயிரோட இல்லன்னு தான் நெனைக்கறேன்.

அவன் என்ன சார் பெரிசா தப்பு பண்ணிட்டான். அவனுக்கு எதிரா விதி வேல செஞ்சுருச்சு. லாட்ஜ்காரங்க, அவங்கள புடிச்ச போலிஸ்காரங்க, வக்கீல், மாஜிஸ்டிரெட், எல்லாரும் கூட்டா சேந்து தான் திருத்தணில கொள்ள அடிக்கறாங்க. அது ஒரு தொழிலு. நானெலாம் கூட இங்க பண்றா மாதிரி ஒரு தொழிலுன்னு வெச்சுக்கங்களேன். அதிர்ஷ்டம் கெட்டவன் மாட்டிகினு சாவறான். அன்னைக்கு பஞ்சாயத்து போயிக்கிட்டு இருக்கறப்ப ஜமுனா ராணிய பாத்து நாலு வார்த்த பேச போனவன் இடிஞ்சு போயி என்கிட்டே வந்தான். தனியா கூட்டிகிட்டு போயி சட்டுன்னு என் கால்ல விழுந்திட்டான். இந்த மாதிரி சந்தர்ப்பத்துல நான் என் கட்டிங் அமௌண்ட் பத்தி சொல்லவே, கொஞ்சம் கொறச்சுக்கங்கன்னு கேட்டான். அதுக்கு அவன் சொன்ன காரணம் என்னன்னா ஜமுனா ராணி கிட்ட அவன் மனசாட்சியோட தான் நடந்துகிட்டானாம்.







அவன் அவளோட கற்ப சேதாரம் பண்ணவே இல்ல, ஆமா, உள்ள விடாம தொடைல வெச்சு தான்  செஞ்சுருக்கான். இத கேள்விப்பட்ட உடனேயே எனக்கு அவன் மேல நல்ல அபிப்ராயம் வந்து, முன்ன சொன்னதுல பாதிய தான் வாங்கினேன். அதுமட்டும் இல்ல ஜமுனா ராணிய நானே கல்யாணம் பண்ணிகிட்டேன்.

என்னன்னா, சின்ன வயசுல மடில உக்கார வச்சு வெளையாட்டு காட்றப்பவே நான் அவள தடவறது வழக்கம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டுன்னு கட்சி பணி செஞ்சுக்கிட்டுருந்து காசு பண்ணிகிட்ருந்தனா, கல்யாணம் வுட்டு போயிருந்திச்சு. ஸ்டீபன் விஷயம் வந்து அவ பேரே நாறி போய் அவளோட அம்மா அப்பா தெகைச்சு நின்னப்ப நான் பேரம் பேசிட்டேன். சனியன் தொலைஞ்சா போதும்ன்னு நெனைச்சு பத்து பைசா வரதட்சண  இல்லாம எனக்கு கன்னிகாதானம் பண்ணி குடுத்துட்டாங்க. 






இப்ப நாங்க ஒரு கௌரவமான பேமிலி. சார், ரெண்டு பசங்கள பெத்து வளத்து அவ ஒரு குடும்ப தலவியா மிளிர்றத யாரும் பாக்கலாம். ஸ்டீபன் குடும்பத்த பத்தி ஒண்ணும் தெரியலன்னாலும் தரணின்னு ஒர்த்தர் இருந்தார். அவரு இப்ப கூட அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து நலம் விசாரிச்சுட்டு போவார். ரெண்டு பேருமா சேந்து ஒரு பிசினஸ் பண்ண வேண்டியது தானேன்னு நம்ம ஜமுனா ராணி அடிக்கடி கேட்டுகிட்ருக்கா. மனைவி சொல் மந்திரம்ன்னு தானே நம்ம பண்பாடு சொல்லுது. அவ ஆசைய பூர்த்தி பண்ணி வெச்சுட வேண்டியது தான்.

என்ன சொல்றீங்க?

 







 



  

 

No comments:

Post a Comment