காதல் அல்ல
காம வசப்பட்டு விடுவது
அல்ல
திரிசங்கு சொர்க்கத்தில் மலைப்பது
யுகாந்திரமாய் மலைகள் எழும்பி வந்த
ஒழுக்கத்தை வெறிப்பது
நல்லவர்களின் நாவில் திமிறும் சவுக்கை
ஓர்மை கொள்ளுவது
தப்பிக்க யத்தனிப்பது
திக்குகளில், திறந்திருக்கும் அத்தனை
கதவுகளின் அருகேயும்
ஓட்டமெடுக்க தயாராவது
பொய்களை பூத்தொடுத்து
மாலைகளை பிய்த்துப் போடுவது
நிற்பது நடப்பது படுப்பது புரள்வது
கற்பனை கொள்ளவும் கற்பனை
வறண்டது
எல்லாம்
நகம் வளர்ந்திருக்கிறதா என்று
பார்த்துக் கொள்ளுவது போல்
சீட்டு பிடித்து வைத்துக் கொள்ளுவது போல்
என் முகத்தில் வேறொன்றை கண்டடைய முடியுமா
என்றென்னை கை தவற விட்டு
கைகளை பிசைவது போல்
காதல் அல்ல
காம வசப்பட்டு விடுவது
அல்ல.
சும்மா
ஜித்துமா.
No comments:
Post a Comment