வாகனங்கள் வந்திருக்காத
குடசாத்ரியில் பண்டொரு நாள்
மலைப் பிரசங்கம் செய்தேன்
கேட்டிருந்தார்கள்
நாலே பேராயிருந்தாலும்
நண்பர்களாயிருந்ததாலும்
ஆர்டர் செய்த வைனில் கொஞ்சமும்
சாலமன் மீனை பேர்பகுதியும் வைத்து விட்டு
எழுந்து போகிறவனில் வராத பசி தான்
பொன்னகரத்து அம்மாளுவை இருட்டுக்கு
அனுப்புகிறது என்றெல்லாம் உரை வீச்சு
இப்போதும் மலைகளில் ஏறும்போது
மூச்சிரைப்பிடையே கவனிக்கிறேன்
எவனாவது பேசிக் கொண்டிருக்கிறானா
பைத்தியம் மாதிரி.
No comments:
Post a Comment