நரம்பில் நடக்கும் பித்தில்
எது வெள்ளப் பெருக்கு, எது
தீ சிற்றடி வைத்து நடக்கிற ஆறு
மரங்களை எரித்து செல்லும் குளிர்
பறவைகளின் சிறகிடுக்கில் தேங்கும் நெருப்பு
பால்ய பெயரில் இருந்து இறங்கி செல்லும் கிழவன்
இடுகாட்டில் இருந்து எழுந்து வரும் சிறுவன்
இதில் தான் வெறுத்திருக்கிறோம் தவிர்த்திருக்கிறோம்
என்பதில் தெளிந்தெழுந்து திடுக்கிட மிதக்கிறது
ஒரு சவத்தைப் போல, காதல்
கண் மலர்ந்து பார்க்கிறது கூட.
ஹலோ என்கிறது.
இந்த அசட்டு சிரிப்பை நாமெல்லாம் வாழ்க்கையென்று
குறிக்கிறோம், நமச்சிவாயா. நமது ஆணவத்தில் நாம்
நின்று நிலைக்கிற ஜித் எத்தனை ரசம்,
ருசி?
No comments:
Post a Comment