Monday, June 25, 2018





அரிச்சந்திரன்
வெறித்திருக்கக்கூடிய
எரிகிற சடலம்
புரியக்கூடுகையில்
அந்த மழைக்காடு மணத்து
நீரிலிருந்து எழுந்து பறந்த ஒரு குமிழாகவே
காதோர மயிர்களை நீவிய காற்றில்
தாயின் இதயத்தைத் தட்டில் வைத்துக்
கொண்டு வந்தது போல் இருந்து விட்ட
ஒரு ஜென்மாந்திரப் பிழம்பு
பாயைப் போட்டு பக்கத்தில் கொசுவத்தி வைத்து
காண்டத்தில் பொத்தலுண்டா
என்று பார்க்கும்போது
நாம் வெறிப்பதற்கும் இரண்டு சடலம்.

என்னா ஜூஜூப்பிடா நம்ம கொக்கரிப்பெல்லாம்

No comments:

Post a Comment