Saturday, August 3, 2019

அவள் அவளை
அலம்பும் போதெல்லாம்
அந்தக் கலவி நினைவு வரும்
அவனது கண்கள் நினைவு வரும்
அவை என்னை கை விட்டு விடாதே என்பதாய்
அத்து மீறியது கொதிப்பாய் வரும்
முகத்தில் தாடையில்
இதழ்கள் என்பார்களே அதனோரத்தில்
குறுஞ்சிரி வருவது தான்
இயங்கும் எவனையும் தளர்த்தும்
மந்திரம்.

ஒரு நாடகத்தின் வசனம் போலவே,
உலகின் நெஞ்சினுள் எரியும் தீக்கொழுந்து
நான் !

அவள் அவளை
அணுகும் போதெல்லாம்
அதே மணம் எழுந்து வரும்
அவனது பித்து கிளர்ந்து வரும்
அடுப்பில் இருக்கிற கறிக்குழம்பை
அவன் சப்பு கொட்டுகிற சப்தம் வரும்
முகத்தில் தாடையில்
இதழ்கள் என்பார்களே அதனோரத்தில்
குறுஞ்சிரி வருவது தான்
இயங்கும் எவனையும் தளர்த்தும்
மந்திரம்

ஒரு நாடகத்திலும் இல்லாத வசனம்,
எல்லோரும் இறந்தொழியுங்கள்.

No comments:

Post a Comment