Tuesday, October 8, 2019

வாயிலில் வந்து நின்று
கரகரப்பான குரலில் கதவை இடிக்கிறது
திகுதிகுவென பெருகும் சிரிப்பை
உருட்டி விளையாடுகிறது நித்தமிந்த
அசுரம். ஒரு சிட்டிகையில் புறாக்கள்
எழுவது போல
பயம். ஒரு இமைப்பில் கண்ணுள்
மின்னிட்ட நிறம். ஒரு கனவில் வெளிறிட்ட
வாழ்வு. ஒரு ரோகியில் வெளியேறிய
தெய்வம். ஒரு சிசுவின் புன்முறுவல்
துப்பாக்கி.

தம்பி, பரோட்டாவை திருப்பிப் போடு.

No comments:

Post a Comment