Thursday, November 19, 2020

 



எனக்கு தெரிந்த இருவர் 

ஒரு ஆண் ஒரு பெண்

கண்களுடன் கண்கள் சந்திக்காமல் 

தப்பிப்பார்கள் 

பசிக்கும்போது வெறுத்து 

பசிக்காதபோது புசித்து 

வருடங்களாக மனசை விரட்டினார்கள் 

ஒருநாள் மழை போல பொழிந்த தனிமையில் 

இடி இடித்து மின்னல் வெட்டியபோது 

ஒருவரை மற்றவர் கொன்று கொள்ளத் துணிகிற 

ரத்ததாகம் பார்த்தேன் 

அவர்கள் இருவரும் பரஸ்பரம் காதலிக்கிறார்கள் 

என்பது புலனாயிற்று 

ஒருவர் சாவுக்கு மற்றவர் வந்து விடக்கூடாது

என்கிற பிரங்ஞை தொடர்கிறது 


அவர்களை சுற்றியுள்ளோர் அவர்களின் சாவை 

துதித்துக் கொண்டிருக்கிறார்கள்


No comments:

Post a Comment