காடுகளைச் சுற்றி வந்த காலம்
ஒருநாள் தன்னை முடித்துக் கொண்ட போதும்
நினைவு தன் பொத்தானை அழுத்தும் போதெல்லாம்
கண்களுக்குள் பச்சையம்
உருள்வதோ நகர்வதோ தெரியாமல் இறங்கிக் கொண்டு
நெஞ்சுக்குள் கொதிக்கும்
பசுங்குருதி
நீ காட்டிலேயே இருப்பவள் என்றாலுமே
உனக்கு இவைகளைக் காட்ட முடியாது.
No comments:
Post a Comment