Saturday, July 7, 2012




கூனனின் முதுகு போல
ஒட்டிக் கொண்டிருக்கும் வாழ்வு விழைவது
கொஞ்சம் அல்பத்தனங்களை மட்டுமே

மலையை புரட்டி தள்ளிக் கொண்டிருந்த
போதும்

கூட்டில் இருந்து விழும் தேன் சொட்டு போல்

பூவின் பேரை யோசிக்கு முன் எரிகல் மறைவது போல்

கண்களை பிளந்து உன்னை விழுங்கத் துடிக்கும்
இக்கணம்

நாளை காற்றில் ஆவியாகிப் போகும்
மது.


 

No comments:

Post a Comment