Saturday, July 7, 2012




நீ எவ்வளவு அழகு தெரியுமா என
காக்கையை
பாட்டு பாட சொல்லிக் கேட்ட
நரி வயிற்றில் ஊறிய
பசி
குளவிக்குள் குருவிக்குள்
குடல் புரளும் சகல ஜீவனுக்குள்
பற்றிப் பரவி
வளர்ந்து நின்று
வனமேகிய வரிப்புலியாய்
உலவுவது பார்ப்பாய் எனில்
என் பசியை எப்படி வெறுப்பாய்

No comments:

Post a Comment