Thursday, August 9, 2012

சொல்லுவேனே
அது அல்ல
நினைத்துக் கொள்ளுவேனே
அது அல்ல
நீ நினைக்கிறாய் என்று
காட்டிக் கொள்ளுவேனே

அதுவும் அல்ல
நீ நினைக்க வேண்டும் என்பதற்காக
நிறுத்திக் கொள்கிறேனே
அது அல்லவே அல்ல
காரல் மார்க்சை முழங்கும் போதும்
காதலை சொல்லி விதும்பும் போதும்
நிலா ரசிப்பதாய் பீத்தும் போதும்
நிலைக் கண்ணாடியில் நிரவும் போதும்
எங்கேயும் இல்லாம இருந்து
எல்லாமா பொங்கி பெருகற இந்த சுழலில்
நான்னு ஒண்ணு இருக்கா சொல்லு
ஞானத்தங்கம்?

No comments:

Post a Comment