Thursday, February 7, 2013




குறுநில மன்னர்களா
 துணை நடிகர்களா
தெரியவில்லை
 வாள்  வாள் என்று
கத்துகிறார்களா
வாள்  சுழற்றுகிறார்களா
தெரியவில்லை
லட்சியம் கண்களில் நின்றெரிய
விரிந்த தோள்களும்
கருணை புன்னகையுமாய்
சற்றேறக்குறைய
ஒரு புனிதனை விட
கன கம்பீரத்துடன்
வீழ்ந்து விடுகின்ற எவன் மீதும்
மிதித்து நடந்து
அக்கரைக்கு அரண்மனைக்கு
சென்றவாறிருக்கிறது
அநீதி.

நாடகம் சரி
நம்ம ரோலு வெளங்கலையே .

No comments:

Post a Comment