Tuesday, February 5, 2013

எவனயாச்சும் போட்டுக் குடுக்க
கக்கூஸ் உள்ள உக்காந்து எழுதற
மொட்டக் கடுதாசி இல்லன்னு தெரியும்
நல்லா.

மடயனுங்க நாலு பேர கூட வச்சுக்கிட்டு
கும்மாளி போடலாம்
மந்திரத்த புடிக்க முடியலன்னா அங்க
பூ மணக்கறது எப்டி  புலியுறுமறது
எப்டி

கந்து வட்டிக்காரன் மாதிரி
சந்து பூந்து சந்து வந்து
ஆள் தேடி அடையாளம் தேடி
 அதிகாரத்தை தேன் சப்பி
ஊர் கூட்டி தேர இழுத்துட்டா
போஸ்டர்ல பேரு ,லவடா
பொங்கற மாதிரி ஒரு வரி
எங்க

ஜனங்கூடுற சந்தையில
வண்டி நிறையக் கொண்டாந்து
எறக்கி அவ்க்குற கதைய
எல்லாரும் பாக்கலாம் தான்
எங்க அந்த ஒரு சொட்டு
தண்ணி

ஊரையே எரிச்சு போடறா மாதிரி
ஒரு துளி நெருப்பு?










No comments:

Post a Comment