Thursday, June 13, 2013





புத்தி வளந்த பிள்ள மாதிரி
நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள
வேண்டியதாயிற்று
எல்லோரையம் போல
என்றாலும்
புரு புருவென
வலி துளைக்கும் சந்தில்
நேற்றைய வெண்திரை அசைந்தால்
வெறுக்கிறாய் மறுக்கிறாய்
பூவென அசட்டையாய் சுழியும்
கீழுதட்டின் மறைவில்
அழைக்கிறாய்
கண் மூடியுண்ட கள்ளின் முள்
தொண்டையில் குத்த
பொறுக்கியது
கோடி சொற்கள்
ஏறி இறங்கின மலைமுகடு
இருளில் கொதித்த மழைக்காடு
பாடித் தீராத பாடல்களோடு சேர்ந்த
கண்ணீ ரோடிக் கலந்த
பெருங்கடல்

யாரும் காண வேண்டியிராத காட்சிகள்
எல்லோருக்கும் தனித்தனியாய்
என்று முடிப்பது ஒரு
எது?

No comments:

Post a Comment