என்ன இப்போ
முன்ன
பத்து தெரு தள்ளி
காலத்துக்கு
என்ன செல்லுபடியோ
அந்த வேஷத்துல
இருந்துருப்பேன்
என்னாலே
கண்டு பிடிக்க முடியலே
பல பேர
தப்பில்லே
தல மறவாயிட்ட என்னையும்
பல பேராலே
கண்டு பிடிக்க முடியாது
நான் பச்ச
அதோ மஞ்சா
ப்ளோரசெண்டு ஊதாலே ஆடறவன்
ஒன்ஸ் அபான் எ டைம்
என்ன மாதிரி
செகப்புல
டப்பாங்குத்தியிருக்கலாம்
எப்பிடியோ போவுது
மண்ணுல இருந்துக்க
மனுஷ புத்திரன்களுக்கு
ஆயிரம்
அடவு
சொல்ல வந்தது என்னன்னா
நெஞ்சுள்ள சொருவி வச்ச
ஒரு கத்தி மட்டும்
எப்பவும் எப்பவும் எப்பவும்
எப்பெப்பவும்
ங்கோத்தா
நீ.
No comments:
Post a Comment