Wednesday, March 12, 2014








ஒரு கணம்
நானாய் நடந்த
இயந்திரம் நிற்கிறது
இந்தப் புன்னகையின்
முன்

செலுத்தாத அர்த்தம்
எளிமையின் மலர்
அன்பால் இவ்வுலகை
அள்ளிக் கொள்ள துழையும்
இப்பிள்ளையின்
இப்புன்னகை
என்ன

உனது
குட்டித் தீவுக்கு அப்பால்
நூற்றாண்டுகளாய் கொழுத்த அசுரம்
அருள் வாக்கு அருளியவாறு
குருதி குடித்து
படர்கிறது
இதோ கவிதை எழுதுபவராய் அறியப்பட்ட
மாமனிதர்கள்
தொகையறா எழுதுவதுடன்
அதன் குடல் வெறியைத் தணிக்க
குழந்தைகளை
தேடுகின்றனர்.

பதுங்கு குழி எனக்குப் பழகிற்று
என் தலை முறைக்குப் பழகிற்று
பட்ஷிகள் தம் விடுதலையை கிளுகிளுக்கிற
ஒரு தூய ஆகாயத்தை நீ விரும்பினாயெனில்
அதற்கு நான் எங்கே செல்வேன் என் மகனே.   






No comments:

Post a Comment