Sunday, February 15, 2015





யுகங்களின்
ஆழத்தில்
எங்கோ துளிரிட்டு
பச்சை பொசுங்காதிருக்கும்
பார்வை தொடுகிறது
என்னை
குன்றின் உச்சியில் இருந்து பார்க்கிற
புகைவண்டிப் பாம்பாய்
என் வாழ்வை
மனங்கூடாத சந்தையில்
ஓரம் ஒதுங்கின கழைக்கூத்தாடியின்
பசி வெறிப்பை
.
இல்லை, என்னால் முடியவில்லை தான்
காணாத இந்தக் காட்சிகளுக்கெல்லாம்
அர்த்தம் சொல்லு
நீ.

No comments:

Post a Comment