Tuesday, February 10, 2015





நாளொன்றுக்கு பத்து தரம்
சோரம் போகாதிருக்கும் போது
நினைப்பதுண்டு.

சரோஜாதேவி கொத்தில்
ஒளித்த கவிதை கைக்கு வரும்,
நினைப்பதுண்டு.


வேஷத்தை சுரண்டி எடுத்த நாளில்
ஆற்றில் முங்கி எழுந்தால்
கோஷத்தை கொஞ்சம் நிறுத்தி
வார்த்தைகளை துப்பி வெறுத்திருந்தால்
நினைப்பதுண்டு

கண்ணீரும் புன்னகையும் கனத்த
கானகம் கடந்து
எல்லைகளுக்கு எல்லையில்
உன்னிடமிருந்து பிடுங்கிய
ருசியும் மணமும் என்னிடமுண்டு
என்பதை அறிவாயா என்று
நினைத்தவாறிருப்பதுண்டு.

ஆனா
இப்போ
தீவட்டியைப் பற்ற வைத்துக் கொண்டு
கிளம்ப வேண்டும்.

No comments:

Post a Comment