தானே தன்னைக் கொத்திப் போட்டு
குவித்தாலும் சரியும்
நிற்காத நெடுஞ்சுவரில்
எழுதாத வரிகளிலெல்லாம்
அவர்கள்
காணும் பச்சையில் பச்சையில்லாமல்
தீண்டும் ஒலியில் தொடுவிரலில்லாமல்
சன்னலை வெறிக்கும் பேதலிப்பில்
அவர்கள்
அலையாய் எழுந்து விழுந்து
அழிந்து போகிற கரையோரத்தில்
கவனித்தால் அறிவீர்கள்,
கடலுக்கு இருக்கிறது ஒரு
ஒற்றைப் பெருமூச்சு.
அவர்கள்.
No comments:
Post a Comment