Friday, June 9, 2017




யாரோ ஒருவனை வெட்டிப் போட்டிருக்கிறார்கள்.
பிணத்தை பார்ப்பதற்கு முன்னே ஏதாவது ஒரு நாய்
நிச்சிந்தையோடு நடந்து போயிற்றா தெரியவில்லை
முன் விரோதமா முன் விதிப் பயனா தெரியவில்லை
கத்தி வீசப்படுவதற்கு முன்னால் சிந்தித்துக் கொண்டு
இருந்திருக்கலாம், சீழ்க்கையடித்தவாறு இருந்திருக்கலாம்,
தெரியவில்லை.
வீசியவனே சாவிலிருந்து தப்பி போயிருக்கலாம்
வீசிய கத்தியே வீழ்ந்தவுனடையதாய் இருக்கலாம்
எதையும் எப்படி சொல்லி விட முடியும்
நட்ட கண்களுடன் இவன் வருகையை காத்து ஒரு
கன்னி இள மானோ கண்ணவிந்த ஒரு தாயோ மட்டும்
இவனுக்கு இல்லை, உறுதி.

அட விடுறா அட விடுறா என்பது போல
பாருங்கள், இந்த முகத்தில் எத்தனை ஏளனம் ?  

No comments:

Post a Comment