அரிது
வீசும் காற்றின் பாத சுவடுகளை
தவற விட ஏலாத கட்டுமரக்காரனின்
ஒரு நாள் வானம் ஒரு பெரிய ஓர்மையாயிற்று
எரிந்தும் அணைந்தும் அரிது ,
அப்படி நின்று விட்ட விண்மீன்.
கண்ணீர் உப்பு
கடல் நீர் உப்பு
தடதடக்கும் காற்றால்
தடுக்கி விழுவதெல்லாம் உப்பு
கரையில் கனவில் கட்டிலில் உப்பு
விழுங்கி வெளிவிடும்
பிராணனில்
தேன்.
சொல்ல விரும்புவது
ஏலேலோ ஐலசா.
No comments:
Post a Comment