Monday, August 28, 2017



தனிமை
அவன் அதை கனம் பண்ணிக் கேட்டதில்லை
யாரோ கைவிட்டு செல்வதில்லை
யாரோடும் இல்லாமல் இருப்பதில்லை
துண்டுபட்ட கண்டங்கள் மீது
வெண்பனி நழுவும்
விஸ்கி கோப்பையை தான்
வெறித்துக் கொண்டிருப்பதுமில்லை
நெஞ்சில் இருந்து ஏறி
தொண்டையடைத்து
வெடிக்காத குமிழி மச்சான்
என்பான்

ஆயுளுக்கும் ஆவியுலர காத்திருந்த
பொன்னுங்கட்டி முத்தமிடும் போது
துடைத்துக் கொள்ளுவது
தனிமை

அது கடவுள் நகர்த்தி உக்காரு என்ற
நாற்காலி.

No comments:

Post a Comment