Monday, September 18, 2017




காலம் மரவட்டைக் கால்களில் நடந்தாலும்
திருப்பத்தில் மறிக்கிற பாறைக்கு முன்
திகைக்கும், அடியே முடிந்ததெல்லாம் சொப்பனமா
நேற்று கடலில் இறங்கிய சூரியன் தானே
இப்போ உச்சந்தலையில் முள் குத்துகிறது
உனது மகளுக்கு என்ன பெயர்
உனது பெயரின் எழுத்துக்களின் எதிரொலி
முடியும் முன்னே யாருக்கு பூ மலர்த்தி
எப்போது இவளை சறுக்கலில் இறக்கினாய்
சரிதான், இந்த மயங்கலில் ஒளிவருடங்கள்
பொடிக்கின்றன
கடவுளே அதோ காட்டுப் பன்றி போல
புழுதி கிளப்பிப் பறக்கிறான்
நல்லாள் நீ நூறு முறை சோரம் போய்
தகித்த தங்கத்தில்
நான் உலகடைந்திருக்கிறேன்
ஐ லவ் யூ பேபி என்பதாகவே திரும்பவும்
துவங்கவா.

No comments:

Post a Comment