Friday, October 6, 2017






ஜன்னலுக்கு வெளியே மார்கழி பனி
வீட்டினுள் அசைகிற கற்பூர பிரமை
விடிந்து வந்தவாறிருக்கிற வெளிச்சத்துடன்
தெச்சி மந்தாரம் துளசி பி லீலா
கண்களால் பேசுபவளும் கருப்பியுமான
அந்த டியூஷன் மிஸ்ஸின் ஆங்கில அதட்டலுக்கு எதிரே
குளித்து சுந்தரக் குட்டனாய் குட்டியாய்
இருவர்
பதிமூன்று வயதுக் கண்கள் பார்த்த நெஞ்சம்பற்றி
சொல்ல முடிந்தால் தானே
பதிமூன்று வயது நெஞ்சம் பார்த்த
குறுமுலைகள் பற்றி சொல்ல முடியும்
என்று கேட்கிறான் அவன்.

நாஷ்டால்ஜியா ஏன் இவ்வளவு
தொப்பலாய் இருக்க வேண்டும் என்பது அவன் கேள்வி. 

No comments:

Post a Comment