Saturday, September 23, 2017




மிக சாதாரணமாய் பூனையொன்று
நம்மை பார்த்தவாறு கண்களை மூடித் திறப்பது போலவே
அது படியேறி வந்து முற்றத்து நாற்காலியில்
அமரும், தலைவரின் சிலையில் செருப்பு மாலை போட்டு
ஊரை எரிய செய்கிற திட்டம் மாதிரி
அது யாருடனும் தெருவில் அலையும்
ஒரு துண்டு ரொட்டிக்காக ஆனான தேசமெல்லாம்
நொறுங்கிய கதையை சொல்லவே வேண்டுமா
ஆங்காங்கே கிழித்தது போக
எல்லாவற்றிலும் பட்டு தெறிக்கிறது
பகை. உள்ளோடியொளிந்த
பெருச்சாளிகளாயிற்று நிஜம். இடையே
நாகரீகத்தை இஸ்திரி போடுகிற பிழைப்பு.

ச்சை- வரியான்னு உன்ன கேக்கறதுக்கு நடுல
பல்லாயிரம் வருஷ பள்ளம்.







No comments:

Post a Comment